Monday, August 23, 2010

சினிமா வியாபாரம் வெளியீட்டு விழா புகைப்படங்கள்




சினிமா வியாபாரம் புத்தகத்துடன் அதன் ஆசிரியர் சங்கர் நாராயண் 
புத்தகத்தை வெளியிடுகிறார் கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொள்கிறார்கள் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர் மதி
ரிவர்ஸில் திரும்பி புன்னகைப்பவர் பதிவர் ஜெட்லி
விழா ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் நைசாக என்ட்ரி ஆகிறவர் அண்ணன் அப்துல்லா....
நூல் அறிமுகம் கவிஞர் நா.முத்துக்குமார்
ஏற்புரை ஆசிரியர் சங்கர் நாராயண் (எ) கேபிள் சங்கர்
டெரர்ரான லுக்கில் இயக்குனர் ஆதி.. அவர் அருகே ஹீரோ கார்க்கி
பூ போல புன்னகை சிந்துபவர் அண்ணன் அப்துல்லா.. அருகே வெண்மையாய் பூ போல அமர்ந்திருப்பவர் பதிவர் வெண்பூ
தண்டோரா டாட் இன் தள பதிவர் அண்ணன் மணிஜி
வளைஞ்சு வளைஞ்சு போட்டோ எடுத்த களைப்பில் அமர்ந்திருக்கும் பதிவர் காவேரி கணேஷ்
பதிவர் நர்சிம்...
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி நன்றியுரை ஆற்றுகிறார்

இடமிருந்து :- பதிவர் காவேரி கணேஷ், கவிஞர் நா.முத்துக்குமார், பதிவர் நர்சிம், பதிவர் எறும்பு
பதிவர் ஜெட்லி மற்றும் பதிவர் அதிஷா
பதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன், பதிவர் மணிஜீ, பதிவர் எறும்பு
நடுவில் நிற்பவர் பதிவர் கே.ஆர்.பி.செந்தில்.. சைடில் நிற்பவர்கள் மன்னிக்கவும் உங்கள் பெயர் தெரியவில்லை...
பதிப்பாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், குகனுடன் எழுத்தாளர் சங்கர் நாராயண்
இடமிருந்து... பதிவர்கள் மயில்ராவணன், எறும்பு, மறத்தமிழன், பலாபட்டறை சங்கர்
 பதிவர் பெஸ்கிக்கு கை கொடுப்பவர் பெயர் தொண்ட மூர்த்தி.. தலைமறைவு என்னும் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். தொண்ட என்பது அவர் 'அடைப் பெயர்'. தொண்டைமான் என்னும் படத்தில் அவர் முதன் முதலில் நடித்ததால், தொண்டைமூர்த்தி. அது மழுவி.. தொண்ட என ஆகி விட்டது.

( இந்த தகவலை மெயிலில் தெரிவித்தவர் தினேஷ் @ சாம்ராஜ்யபிரியன் )
பதிவர் கேபிள் சங்கருடன் பதிவர் தினேஷ் @ சாம்ராஜ்யப்ரியன்
பதிவர் கேபிள் சங்கர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. அரண்
பதிவர் ஆதி

























இந்த புகைப்படங்களுக்கான போட்டோ கமெண்ட்ஸ் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது...

Friday, August 13, 2010

ஃபீலிங்ஸ் - 13 - 08 - 10

■ ரெண்டு நாட்களாக எந்திரன் ஆடியோ வெளியீடு பார்த்து கனவிலும் ஷங்கர் வாழ்க! சூப்பர் ஸ்டார் வாழ்க! ஐஸ்வர்யா வாழ்க! கலாநிதி மாறன் வாழ்கன்னு விவேக் வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தது. நடுவில் இன்செப்ஷன் போல கிராஸ் கனவு வந்து வைரமுத்துவை விட்டுவிட்டேன் அவரும் வாழ்கன்னு ஒரு குரல் கேட்கிறது. சாதாரணமாக ரஜினி படங்களின்போது இருக்கும் எதிர்பார்ப்பே வேறு. ஆனால் எந்திரனில் இந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சி பார்த்ததே கொஞ்சம் திகட்டுகிறது. பதிவர் முரளிக்கண்ணன் ஒரு நகைச்சுவை பதிவில் எந்திரனுக்கு தனி சேனலே ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் என சொன்னது நினைவிற்கு வருகிறது. ( பார்த்து பண்ணுங்க சாமி.. மத்த படங்கள் மாதிரி மார்கெட்டிங் பண்ணி தலைவரையும் ஷங்கரையும் தியேட்டர் தியேட்டரா அலைய விட்டுறாதீங்க...)


 வரும் சுதந்திர தினத்திற்கு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான டிரைலர் போட்டார்கள். காலையிலிருந்து மாலை வரை, திரைப்படங்கள், திரை முன்னோட்டங்கள் என சுதந்திரத்திற்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளாக இருக்கிறதே என யோசித்த போதுதான், மானாட மயிலாடவில் தேசிய கொடியுடன் சிலர் டான்ஸ் ஆட, கலா மாஸ்டர் கண்ணில் நீர் பொங்க என உணர்ச்சிகரமான கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டது.

கடைசியில் மானாட மயிலாடதான் உண்மையான தேச பக்தி நிகழ்ச்சி என்பதை அறியும் பொழுது எனக்கும் கண்ணில் நீர் பொங்குகிறது. ஜெய்ஹிந்த்!


■ வரதட்சணை கேட்பதையே குற்றமாக கருத முடியாது. வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால்தான் குற்றம் என உச்ச நீதி மன்றம் ஏதோ ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்லியிருக்கிறதாம். நல்ல வேளை குத்திக் கொலை செய்வதையே குற்றமாக கருத முடியாது. குத்தும்போது குடல் வந்து வெளியே விழுந்தால்தான் குற்றம் என சொல்லாமல் போனார்களே. 




■ இந்த வருஷம் எங்கு மழை பொழிந்ததோ இல்லையோ. தமிழகத்தில் நல்ல இசை மழை. அடுத்தடுத்து வி.தா.வ., ராவணன், எந்திரன் என ஏ.ஆரின் இசை மழை பொழிந்தாலும் ராவணன், எந்திரனை விட எனக்கு வி.தா.வ வே சிறப்பாக தோன்றுகிறது.




■ நிதியமைச்சருக்கே போன் செய்து வீட்டுக் கடன் வேண்டுமா என கேட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எனக்கே இரண்டு மார்கெட்டிங் அழைப்புகளாவது வந்து விடுகிறது. இதில் இன்பாக்சை நிரப்பும் எக்கச்சக்க எஸ்.எம்.எஸ்கள் வேறு.  இதிலிருந்து நமது நாட்டில் மார்கெட்டிங் எக்சிகியூட்டிவ்ஸ் அயராமல், கூச்சப்படாமல் உழைக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதற்காக நிதியமைச்சருக்கே கடன் கொடுக்கிற அளவிற்கு வெகுளியாகவா இருப்பார்கள்?


■ கலாநிதி மாறனிடம் எந்திரன் படத்தை தயாரிக்க கேட்ட போது, அவர் ஷங்கரிடம் கதை கேட்கவில்லை.. பட்ஜெட் எவ்வளவு ஆகும், படத்தை எப்ப முடிப்பீங்க என்றுதான் கேட்டதாக ரஜினி சொன்னார்.

கலாநிதி மாறன் புத்திசாலி! யார் யாரிடம் எதை கேட்க வேண்டுமென அவருக்கு தெரிந்திருக்கிறது!



Monday, August 9, 2010

எந்திரன் கபர்தார்

// போட்டோ கமென்ட்ஸ் யாவும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்த அல்ல. புகைபடங்கள் பெறப்பட்ட பல்வேறு இணையதளங்களுக்கு நன்றி //









உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே.. ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி...

Friday, August 6, 2010

எந்திரன் முடிஞ்சிடுச்சில்ல எந்திரிச்சு வா



// அனைத்தும் கற்பனையே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல... //




ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, படம் வரும்போது பிளாக்ஸ் எல்லாம் பிளாங்க் ஆகுற மாதிரி செய்ய முடியாதா... கண்ணை மூடுனா கனவுல ராவணன் பட விமர்சனமா தான் வருது...







ஏதோ உலக அழகிங்கிறதால தப்பிச்சீங்க.. இல்லைன்னா கல்யாணம் ஆயிட்டா எங்க ஊர்ல மெகா சீரியல்ல தள்ளி உள்ளூர் கிழவி ரேஞ்சுக்கு ஆக்கி இருப்பாங்க...










"மாற்றம் கொண்டு வா, மனிதனை மேன்மை செய், உனது ஆற்றலால் உலகை மாற்று, எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு..." இந்த வரிகள் சத்தியமா ரோபோ கேரக்டருக்குதான்... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு இப்பவே ஒரு அறிக்கை விடலாமுன்னு இருக்கேன்..












'புதிய மனிதா பூமிக்கு வா' பாட்டைக் கேட்கும்போதெல்லாம்...
 'எந்திரன் முடிஞ்சிடுச்சில்ல.. எந்திரிச்சு அரசியலுக்கு வா'ன்னு ரசிகர்கள் பாடுற மாதிரியே கிலியா கேட்குது...












எந்திரன் பஞ்ச் டயலாக் கேக்குறீங்களா... ஐஸ் அழகு நிலையம் போனா அஞ்சு வயசு குறையும்.. நான் இமய மலை போனா இருபது வயசு குறைஞ்சிடும்.... 


______________________________________________________________








ரசிகர்கள் சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டு அமைதியா போயிடுற ரஜினி மாதிரி.. பதிவை படிச்சிட்டு ஓட்டு பின்னூட்டம் எதுவும் போடாம போறீங்களே பாஸ்...



Tuesday, August 3, 2010

என் இனிய எந்திரன்



எந்திரன் பாடல்களை கேட்கும்பொழுது, ஆனந்த விகடன் சிவாஜி பட விமர்சனத்தில், படத்தை ரஜினி ரசிகர்களை குறிவைத்து ஷங்கர் விட்டிருக்கும் ராக்கெட் என குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது. ரஜினியை வைத்து ஷங்கர் சிவாஜியில் பின்னியிருந்தார். தற்போது, தொழில்நுட்பம், மாபெரும் பிரம்மாண்டம் எல்லாம் சேர்ந்து வெகுவாக எதிர்பார்த்த எந்திரன் பாடல்கள் புதிய பரிமாணத்தில் நன்றாகவே வந்திருக்கிறது.  
  


சமீபத்திய ரஜினி படங்களில் கண்டிப்பாக தமிழன், தமிழ் மண், தமிழ்நாடு என ஒரு வரி வரும். தங்க காசு கொடுத்தது தமிழல்லவா, உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன், என்னை வாழ வச்சது தமிழ் பால் என ரஜினி அந்த வரிகளை ரசிகர்களை நோக்கி பாடும்போது ஏற்கனவே அதிர்ந்து கொண்டிருக்கும் அரங்கம் இன்னும் கொஞ்சம் அதிக டெசிபல் அலறும்.  இதற்கு ஷங்கரும் விதிவிலக்கல்ல. சிவாஜியில் "அப்போ நான் பச்சைத்தமிழன் இப்போ நான் வெள்ளைத் தமிழன்" என லைட்டாய் உபயோகப்படுத்தியவர், இப்போது எந்திரனில் "ரோபோ ரோபோ பன் மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா..." என  ரோபோ பாடுவது போல வித்யாசமாய் அமைத்திருக்கிறார். 


இதுபோன்ற வார்த்தைகளும் டிரைலரில் ரோபோ செய்யும் மேஜிக்குகளும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக எந்திரன் இருக்கும் என உறுதி செய்கிறது.  இந்த வரி வரும் புதிய மனிதா பாடல் ஒரு புதிய அனுபவம். அனைத்து பாடல்களிலுமே வரும் சிற்சில இசை துணுக்குகள் இந்த பாடலின் பின்னணியில் நிறையவே ஒலிக்கிறது. மெதுவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் ஏற்றம் அடையும் போது பாடல் நம்முள் உற்சாகத்தை விதைக்கிறது. 
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்.. அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை என்ற வார்த்தைகள் ரொம்பவும் ஆழமானது. ஹேட்ஸ் ஆஃப்....


அனைத்து பாடல்களிலும் அதி உற்சாகமான பாடல் கிளிமஞ்சாரோதான். கிழிகிறது டிரம்ஸ்..  துள்ளலோ துள்ளலாக ரஹ்மான் துள்ளியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பாடலில் அக்கக்கோ என்ன பின்னிக்கோடி வரும்போது பகவான் ஆசிரமத்தில் போதையேறிய பக்தர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதை போல தியேட்டரில் ரசிகர்கள் பேயாட்டம் போடப்போவது உறுதி. தயவு செய்து அமைதியாய் படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த பாடலின்போது எழுந்து தம் அடிக்க போய் விடுங்கள். டங் டிவிஸ்டர் போல வார்த்தைகளை வைத்து பெண் குரல் க்யூட்டாக விளையாடுகிறது.


அடுத்ததாய் காதல் அணுக்கள்.. உடம்பை லேசாக்கி பறக்க வைப்பது போன்ற பாடல். பாடல் முழுவதும் வரும் கிடார் இசை தலை முதல் கால் வரை பரவி லைட்டான போதையை தருகிறது.  காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என கிக் ஆக ஆரம்பிக்கும் குரல் லவ்லி.. டிரைலரில் அதை ரஜினி வாயசைத்துப் பார்த்த பின் பாடல் இப்பொழுதே மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது.


அரிமா அரிமா பாடலையும் அறிமுக பாடல் என சொல்லிவிட முடியாது. பாடல் முழுவதும் ஒரு கம்பீர பீட் வருகிறது.  இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்...இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டவன் நிலவு நிலவு தலை முட்டும்.. என ரஹ்மான் கரிஸ்மாட்டிக் குரலில் பாடுகிறார். இதை விட நிறைய போற்றி பாடடி பெண்ணேக்களை தற்போதைய ஹீரோக்களுக்கு கேட்டு காது பஞ்சர் ஆகி போனாலும் ரஜினிக்கு வரும் போது அதன் தரமே தனிதான்.  புகழ் பாடுவதை சூப்பர் ஸ்டாரே இரண்டே வரிகளில் சுருக்கி விட்டிருப்பதை மற்றவர்கள் கவனித்து கொஞ்சம் திருந்தலாம்.


இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே பாடல் மட்டும் எனக்கு அதிருப்தி.. பாடல் வரிகளை தவிர இசை அந்தளவிற்கு மனதில் ஒட்டவில்லை. மற்ற பாடல்களுடன் ஒப்பிடும்போது இந்த பாடல் ரொம்ப சுமார்தான்.

பூம் பூம் ரோபோ டா... ரோபோ டா.. ரோபா டா பாடலை கேட்கும்போதும், டிரைலரை பார்க்கும்போதும் திரையில் ரோபோ ரஜினியின் கலக்கல் காக்டெயில் அட்டகாசங்கள் இருக்கும் என நினைக்கிறேன். எப்படியும் இந்த பாடலுக்கே ஐந்து கிலோ பேப்பர் கிழிசல்கள் தேவைப்படும். தயவு செய்து நான் போகப்போகும் தியேட்டருக்கு வீக்கான ஹார்ட் உள்ளவர்கள் வராதீர்கள்.

Tuesday, July 20, 2010

பீலிங்ஸ் - 20 ஜுலை 10




ரிமோட்

      செம்மொழி மாநாட்டு அறிவிப்பின் படி பல கோடிகள் தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்குவதாக கேள்வி. வேறு எதற்கு ஒதுக்குகிறார்களோ இல்லையே, டிஸ்கவரி சேனலுக்கு ஒதுக்கலாம். அவ்வளவு அருமையான அறிவியல் நிகழ்ச்சிகளை எளிமையாக புரியுமாறு தமிழை படுத்தாமல் தமிழ்படுத்தியிருக்கிறார்கள். சூப்பர் சிங்கர், சன் சீரியல்களுக்கு கும்பல் கும்பலாய் பலர் சென்று விட சில நூற்றுக்கணக்கான பேர் மட்டுமே பார்க்கக்கூடிய இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி அறிவியல் தமிழை வளர வைக்கலாம்.

     திருமதி செல்வமும் நாதஸ்வரமும் ஓடும் போது என் அம்மாவிடம் ஏதாவது கேள்வி கேட்டால் விளம்பர இடைவேளையில் தான் பதில் வரும். இவை இரண்டும் அம்மா விரும்பி பார்க்கும் மெயின் சீரியல்கள். செல்லமே சைட் சீரியலாம் சில தினங்கள் சாய்ஸில் விட்டுவிடுவார். தங்கம் சீரியலை ஆரம்பத்தில் விரும்பி பார்த்தவர், இப்போது அப்போதுதான் சமைக்கவே எழுந்து செல்கிறார். ஐயா ஐயான்னு மொக்கை அடிக்கிறாங்களாம்.



     வெகு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாதஸ்வரம் சீரியல் சன் டி.வி.யில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரையிலேயிருந்து வெள்ளித்திரைக்கு பல பேர் போகலாம். ஆனால் ஒரு படத்தில் சறுக்கினாலும் திரும்பவும் முயன்றால் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கக் கூடிய திருமுருகன் மறுபடி சின்னத்திரைக்கே திரும்பி வந்ததற்கு அசாதாரண தைரியம் வேண்டும்.



     வசந்த் டி.வி.யில் ஒரு பாட்டு. 'நாளைய வசந்தமே, தலைவனே வா வா' என பாடல் கம்பீரமாய் ஒலிக்க வசந்த் அன் கோ இயக்குனர் நிற்கிறார், நடக்கிறார், சிரிக்கிறார், கை அசைக்கிறார், நல உதவிகள் செய்கிறார் இன்னும் ஏராளமான றார் களுடன் விஜய் அறிமுக பாட்டு ரேஞ்சுக்கு போட்டு தாக்குகிறார்கள். இளைய தளபதி விஜய்யை கலாய்பதற்கு வாழ்க்கையில முதல் முறையாய் அப்பொழுதுதான் வருத்தப்பட்டேன். 


     கேப்டன் டி.வி.யில் ஒரு கேன்டிட் கேமரா நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு பார்த்தது. போலீஸ் வேடமிட்டு கொண்டு நிகழ்ச்சி நடத்தும் குழுவினர் போவோர் வருவோரை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆயிடுச்சு. நம்ம கேப்டன் சார் அந்த காக்கி சட்டையை போட்டுகிட்டு எவ்வளவு பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிச்சிருக்காரு... இப்ப என்னடானா அவரு டி.வி.யிலேயே பொதுமக்களை பிடிச்சு டென்ஷன் பண்றாங்க... என்ன கேப்டன் சார் உங்க டி.வி.யிலேயே இப்படி சட்டத்தை கையில எடுத்துக்கலாமா?

பிறந்தநாள் வாழ்த்து




     குரல்வலை எனும் வலைப்பூ அதிபர் திரு.MSV Muthu அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
நான் பார்த்த முதல் வலைப்பூ குரல்வலைதான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அம்பத்தூரில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் பொட்டி தட்டி கொண்டிருந்த போது நண்பர் ஒருவருக்கு இவரது கதைகள் மின் அஞ்சலில் வரும். அவரிடம் இருந்து அவைகளை பெற்று ஸ்க்ரீனை சின்னதாக்கி வேலை நேரங்களில் கதைகள் படித்து கொண்டிருப்பேன்... தூரத்தில் இருந்து பார்பதற்கு வேலை செய்வது போலவே இருக்கும். நேரில் பார்பதற்கு உன்னாலே உன்னாலே வினய் மாதிரி இருப்பார். இவரது சிறுகதைகள் அட்டகாசமாக இருக்கும். 


ஆவி பேய் கதைகளில் அண்ணன் நிபுணரோ நிபுணர். சமுதாய அக்கறை கொண்ட இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறார்போல் இருக்கும். சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வரும் இவருக்கு என்னுடைய சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





பதிவுலகம்

     கால்பந்து குறித்து அதிகம் எனக்கு தெரியாது. ஆனாலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் என்னென்ன நடக்கிறது என அவ்வப்போது அறிந்து கொள்ள உதவியது பதிவர் லோஷன் எழுதிய பதிவுகள். தமிழில் சப்டைட்டில் போட்டு மேட்ச் பார்ப்பது போன்று இருந்தது இவரது கால்பந்து குறித்த பதிவுகள். அவருக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

     சமீபத்தில் படித்த பதிவர் ராஜாவின் ஆர்குட் படுத்தும் பாடு நல்ல சிரிப்பை வரவழைத்தது. ஸ்கராப் மெசேஜ்களுக்கான அவரது கமெண்டுகளை படித்து கண்களில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தேன்.

     சில சமயம் சிலவற்றை படிக்கும் போது குபீர் என சிரிப்பு வரும். பதிவர் சரவணக்குமரனின் ஆனந்தபுரத்து வீடு விமர்சனம் படிக்கும்போது இந்த ஒற்றை வரி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
  "ஷங்கர் இன்னும் சில காலத்திற்கு படம் தயாரிக்க போவதில்லையாம். படம் பார்த்து பயந்தது,  அவர் ஒருவராகத்தான் இருக்கும்."


இந்த வார விட்ஜெட்

     என் வலைப்பூவில் கீழே ஓடிக்கொண்டிருக்கும் "உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்...." பிளாஷினை உங்கள் பதிவில் இணைக்க :

<object width='300' height='75'><embed src='


http://www.hostanypic.com/out.php/i6066_feed.swf' width='450' height='90' wmode='transparent'/></embed></object>
<br /></a>

Thursday, July 15, 2010

மதராசபட்டினம் - பேரு மாறும் ஊரு மாறுமா?



// கமெண்டுகள் அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. புகைப்படங்கள் பெறப்பட்ட பல்வேறு வலை தளங்களுக்கு நன்றி //























































அய்யா ராசா... ஓட்டுப் பட்டையை மேலே வச்சா படிச்சிட்டு அப்படியே போயிடுறீங்கன்னு கீழே தூக்கி வச்சேன்... அப்பவும் ஓட்டு விழ மாட்டேங்குதே... இனி நடுவுல வைக்கிறதுக்கு ஏதாவது கோடிங் இருக்குமானு முயற்சி பண்ணிதான் பார்க்கனும்...





Wednesday, July 14, 2010

மதராசப்பட்டினம் - திரை அனுபவம்





2007 ல் ஒரு நாள்...


 "நீங்க கூப்பிட்டப்பலாம் சிவாஜி படம் ஆறு வாட்டி வந்தேன்ல... இப்போ நான் கூப்பிட்டா ஏன் வரமாட்றீங்க.. வந்துதான் ஆகனும்" என்றான் முதலாளி.


ஒரு பி.பி.ஓ நிறுவனத்தில் நான் பொட்டி தட்டி கொண்டிருந்த போது இரண்டு பொட்டிகள் தள்ளி உட்கார்ந்து தட்டிக்கொண்டிருந்த வகையில் அவன் ஒரு தொழிலாளி ஆனாலும் அவனது இயற்பெயரே முதலாளி. தீவிர தல ரசிகன்.


"டேய் படம் நல்லாயிருக்காதுடா" என்றான் சதீஷ்.


"ஹே.. டிரைலர் பார்த்தீங்க இல்ல... தல பின்னியிருக்கும்..."


எனக்கும் கூட கீரிடம் டிரைலர் பிடித்திருந்ததால் படம் நல்லாயிருக்குமாங்காட்டியும் என்ற சிறிய நம்பிக்கையில் காசி தியேட்டர் சென்றோம்.


முதல் பாதியில் அடைகாத்த பொறுமையை இரண்டாம் பாதியில் இழந்து அவனையும் படத்தை பார்க்க விடாமல் கிண்டலடிக்க ஆரம்பித்ததால் முழு படமும் முடியும் வரை தியேட்டருக்குள் உட்கார முடிந்தது.


படம் முடிந்து வெளியே வந்தபோது முதலாளி சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. "நல்லவேளை இந்த படம் நல்லாயில்லை..   'விஜய்' டைரக்ஷன்ல அஜித் படம் ஹிட்டாயிருச்சுருங்கிற அவப்பெயருக்கு ஆளாகாம தப்பிச்சிட்டோம்."




2010 ல் ஒரு நாள்


பதிவுலகில் கிளம்பிய பாசிட்டிவ்வான விமர்சனங்கள் தொடர்ந்து  தள்ளிக்கொண்டே இருந்ததனால் நேற்று மதராசப்பட்டிணம் ஓடும் சங்கம் தியேட்டருக்குள் போய் விழுந்தேன்.  இந்த முறை டிரைலர் மட்டுமல்லாமல் முழுப்படத்தையும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.







படம் ஆரம்பிக்கும் முன்னர் ஹனீபாவிற்கு அஞ்சலி ஸ்லைட் போடுகிறார்கள். முதல் பாதியில் மொழி பெயர்ப்பாளராக வந்து கலகலப்பூட்டும் ஹனிபாவை இரண்டாம் பாதியில் மிஸ் செய்கிறோம். இனி அவரை கலை உலகம் மொத்தமாக மிஸ் செய்யப் போவது வருத்தமே. 'கத்திக்குத்தெல்லாம் வாங்கி இருக்கேன் டேமேஜ் ரொம்ப ஜாஸ்தி' எனும் போது அவரது முகபாவத்தை சிவாஜியில் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.. ம் ம்... அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.







பழங்காலத்து மதராஸை கையில் எடுத்துக்கொண்டு அதனுடன் லகான், டைட்டானிக் இரண்டையும் கலக்கி சுவைக்கு அப்போகலிப்டோ போன்ற வஸ்துக்களை சேர்த்து மொத்தமாக மிக்ஸியில் அரைத்து மதராசப்பட்டினம் எனும் புதிய டிஷ்ஷை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.


எனினும் தொடர்ந்த தமிழ் மசாலா படங்களால் திகட்டிப்போன நாக்கிற்கு இந்த டிஷ் தெம்பு தரும் புதிய சுவையாக இருக்கிறது. 


நான் கடவுளில் பட்டை தீட்டப்பட்ட ஆர்யா இந்தப் படத்தில் மேலும் ஜொலிக்கிறார். மல்யுத்த சாகசங்களில் மனுசன் பின்னி எடுக்கிறார். 


அமி ஜாக்சன் ஏற்கனவே பல பதிவர்கள் சொன்னது போல வெகுவான தமிழ் நாயகிகளை விட நன்றாகவே நடித்திருக்கிறார். (தமிழில் பேசி!)




துடிப்பான நாசர், நேதாஜி இருக்காரா என நாசரை அடக்கும் எம்.எஸ்.பாஸ்கர், உடன் சுற்றும் நண்பர் பட்டாளம், ஆங்கிலம் சொல்லித்தரும் வாத்தியார், ஏ டூ இசட் டூர்ஸ் பாலாஜி, படகில் போகும் தாத்தா, மிரட்டும் வெள்ளைக்கார போலீஸ் என படத்திற்கு பலம் சேர்ப்போர் பட்டியல் அதிகம்.


படத்தின் கலை இயக்குனரின் உழைப்பு எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. டிராம் வண்டிகள், பழைய கால கட்டிடங்கள் என மதராசப்பட்டினத்தை அகழ்வாராய்ச்சி செய்து வெளியெடுத்திருக்கிறார்.


படத்தின் தீம் மனதில் நன்றாக ஒட்டுவதற்கு இன்னுமொரு காரணம் ஜி.வி.பிரகாஷ். பின்னணி இசை, வாவ்..  கலக்கியிருக்கிறார். பாடல்களும் குறிப்பிடும்படியாகவே இருக்கின்றன.




வாக்காளர் அடையாள அட்டையை கலாய்ப்பது, எ..ஏஏஏ.. பி.. பீபீபீ.. சி.. சீசீசீ என ஆங்கிலம் கற்றுக்கொள்வது, நடன பார்ட்டியில் வெள்ளைக்கார பெண்ணை கட்டிப்பிடித்துக்கொண்டு நடனமாடுவது, 70 ரூபாய் பயபக்தியோடு வாங்கும் ஓவியர் தண்ணி போட்டுவிட்டு மனைவியுடன் அடிவாங்குவது என ஏராளமான காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. 


'அவுட்கோயிங்...? இன்கமிங்...!', 'ஐ... ஒய்'  என வசனங்கள் உட்பட படத்தில் இன்னும் ஏராளமான கிரியேட்டிவ் அம்சங்கள் இருக்கிறது. அதையெல்லாம் சொன்னால் புரியாது. போய் பார்த்து அனுபவியுங்கள்.


படத்தின் குறைகளை நிறைகளோடு ஒப்பிட்டால் பெரிசாகத் தெரியாது என்றாலும், அந்தப் பாட்டி தற்போதைய கூவத்தின் நதிக்கரையில் உட்கார்ந்து ஃபீல் பண்ணுவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. கவர்னராக வரும் கதாநாயகியின் அப்பா கேரக்டர் மட்டும்,  பேன்சி டிரஸ் காம்பட்டிஷனில் டயலாக் மறந்து போன சின்ன பிள்ளையை போல தடுமாறுகிறார்.  
சென்ட்ரல் ஸ்டேஷன் செட்டையே அடிக்கடி காண்பிப்பதால் ஒரு சலிப்பு வருகிறது. ஸ்பென்சர் போன்ற வேறு பல செட்கள் சில விநாடிகளே காட்டப்படுகிறது. மொத்தமாக பழைய மதராசப்பட்டிணத்தை கவர் பண்ணியிருக்கலாம். கிளைமாக்ஸ் துரத்தல் கொஞ்சம் நீளமோ என நினைக்கத் தோன்றுகிறது. நெகடிவ்ஸ் நிற்க.


கிளைமாக்சில் எங்கே ஒட்டு மீசை, வெள்ளை தாடி, சுருங்கி போன பிளாஸ்டிக் மாஸ்க்குடன் ஆர்யவை காட்டி ஒட்டுமொத்த படத்திற்கும் திருஷ்டி வைத்துவிடுவார்களோ என பயந்த எனக்கு இயக்குனர் விஜய் நெகிழ்ச்சியான கிளைமேக்சினால் பதில் சொல்லியிருக்கிறார்.


எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும், விறுவிறுப்பாகவும், சுவையாகவும், கிரியேட்டிவ்வாகவும் படத்தை கொடுத்த விதத்தில் இயக்குனர் விஜய்யை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.







டிஸ்கி கேள்வி



எல்லாம் சரி.. அது ஏன் பாஸ் அஜித்துக்கு மட்டும் அந்த கிரீடம் கதையை எடுத்தீங்க... நல்ல நல்ல ஸ்கிரிப்டையெல்லாம் பையில வச்சிகிட்டு, விஜய், அஜித்துக்கு கதை சொல்லும்போது மட்டும் எல்லா டைரக்டரும் ஒரே மாதிரி ஆயிடறீங்களே அது ஏன் ?


Keywords : madras, Chennai, madrasapattinam, Madarasapattinam, madarasapatinam, madrasapatinam, vmc hanifa, naaser, amy jackson, arya, director vijay, ags entertainement, kalpathi agoram, blog tamil film review , valaimanai blogspot review, sukumar swaminathan