Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Monday, August 27, 2012

சென்னை பதிவர் சந்திப்பு | வலைமனை




பணிகள் காரணமாக பாதியில்தான் செல்ல முடிந்தது ஒரு குறையாக இருந்தாலும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சென்றது நிறைவாக இருந்தது.  இப்படி ஒரு நிகழ்வை திட்டமிட்டு ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தி முடித்திருக்கும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் அறிந்த வரையில் இதன் பின்னணியில் இயங்கிய மூத்த பதிவர்கள் சென்னைப்பித்தன் ஐயா, இராமனுசம் ஐயா, பதிவர்கள் மதுமதி,பட்டிக்காட்டான் ஜெய், மின்னல் வரிகள் பால கணேஷ், திடங்கொண்டு போராடு சீனு, பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், வீடு திரும்பல் மோகன் குமார் மற்றும் அனைவருக்கும் (பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்) இத்தகைய சிறப்பான முயற்சிக்கு பாராட்டுகள்.

இந்நிகழ்வில் பதிவர்கள் கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன், பலா பட்டறை ஷங்கர், பட்டாம்பூச்சி சூர்யா, மணிஜி, எல்.கே. மணி ஆயிரத்தில் ஒருவன், பதிப்பாளர் குகன், அதி பிரதாபன், சங்கவி, பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார், மோகன் குமார், திசைகாட்டி ரோஸ்விக் ஆகியோரை சந்தித்து பேச முடிந்தது மகிழ்வாய் இருந்தது.

நான் சென்ற பொழுது கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வந்திருந்தார். சுரேகா சிறப்பாக தொகுத்து வழங்கிகொண்டிருந்தார். மயிலன் என்பவரது கிரியேட்டிவ்வான கவிதைக்கு அரங்கம் அதிர்ந்தது.

கட்டக்கடைசியாய் கேபிள்ஜி தனது எண்டர் கவிதையை வாசித்தார். கவியரங்க இறுதியில் தேநீருடன் போண்டா வழங்க ஆரம்பித்தனர். சும்மா சொல்லக்கூடாது போண்டா வாசனை சுர்ரென தூக்கியது. ஒரு கட்டத்தில் சுரேகா போண்டாவிடமிருந்து எங்கள் கவனத்தை மீட்டெடுக்க அறிக்கை விடும் அளவிற்கு சென்று விட்டது.

சரியாய் அப்பொழுது பேச எழுந்த பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், "போண்டா கிடைச்சவங்க சாப்பிடலாம் தப்பில்லை... சில பேரு கையில வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க" என தனது இன்டெலிஜன்ட் ஹுமர் முத்திரையுடன் பேச்சை துவக்கினார்.  இருபது முதல் முப்பது நிமிடம் அவர் பதிவுகள், பதிவர்கள், பதிவுலகம் குறித்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும்  பதிவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு பொருள் பொதிந்ததாக இருந்தது.

விழாவில் வெளியிடப்பட்ட பெண் பதிவர் சசிகலா சங்கர் அவரது தென்றலின் கனவு புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது சிறப்பு. அவருக்கும் வாழ்த்துக்கள்.

பின்னர் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற, அரட்டை கச்சேரிகளில் பங்கெடுத்துவிட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களை பிலாசபி பிரபா மூலம் அறிந்து அவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தேன்.  நிச்சயம் சிறப்பானதொரு நிகழ்வு. மென்மேலும் இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகளை முன்னெடுத்து செல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....!

Thursday, January 5, 2012

கேபிள் சங்கர், யுவகிருஷ்ணா புத்தக வெளியீடு புகைப்படங்கள்


இன்று மாலை உ பதிப்பகத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.   சங்கர் நாராயண் எழுதிய தெர்மக்கோல் தேவதைகள், யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப்பிறந்தவன் மற்றும் பதிப்பாளர் என்.உலகநாதன் எழுதிய நான் கெட்டவன் ஆகிய இந்த புத்தகங்களுக்கான முகப்பு அட்டைகளை நான் வடிவமைத்து இருந்ததனால் எனக்கு கூடுதல் மகிழ்வான விழாவாக இருந்தது. விழாவில் நான் எடுத்த புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன். மொபைலில் எடுத்தவை ஆதலால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.

பி.கு. : சில முக்கியமான புகைப்படங்களை தனியே எடுத்து வைத்துள்ளேன். அனேகமாய் அவைகளை வைத்து நாளை போட்டோ கமெண்ட்ஸ் வெளியிட உத்தேசித்துள்ளேன்.




















































Sunday, October 16, 2011

இன்டி பிளாக்கர் மீட் | வலைமனை





கடந்த ஞாயிறு அன்று சென்னையில் இன்டி பிளாகர் மீட்.  அழைப்பு வந்த உடனேயே ரெஜிஸ்டர் செய்திருந்தாலும் கடைசி நேரம் வரை 'ஏதாவது இங்கிலீஷ்ல கேள்வி கேட்டுடுவாங்களோ ' என்கிற பதட்டத்தால் போகலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருந்தது.

கடைசியில் போகலாம் என முடிவெடுத்து ஹயாட் ரெஜென்சிக்குள் நுழையும்பொழுது மணி 1.45 இருக்கும். வாசலிலேயே நமது பிலாசபி பிராபகரன் எதிர்ப்பட்டார். உள்ளே கீழே பேஸ்மென்டிற்கு சென்று பைக்கை பார்க் செய்கையில் கவுதம் இன்போடெக் ஆர்.வடிவேலனை கண்டேன். பார்க் செய்துவிட்டு மேலே என்ட்ரன்ஸ் வந்தால் அண்ணன் ஜாக்கி சேகர் உள்ளே ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். 



இருநூறுக்கும் அதிகமான பதிவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் நமது தமிழ்ப்பதிவர்கள் சுமார் 30 பேர் சென்றிருந்தோம். பெரும்பாலானோர் கடைசி வரிசையில் அமர்ந்தோம். தல ஜாக்கி சேகரை நிகழ்சசி ஒருங்கிணைக்கும் ஒரு பெண் கூப்பிட்டு கொண்டு போய் முன்னால் உட்கார வைத்தார்.  


நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம், தமிழ்நாடு மின்சார வாரியம் பாரம்பரிய முறைப்படி 10 விநாடி கரண்ட் செய்து அனைவரையும் வரவேற்றது சிறப்பு.


49 செகன்ட்ஸ் ஆஃப் ஃபேம் எனும் பகுதி முதலில் துவங்கியது. வந்திருந்தவர்களில் ரேண்டமாக 75 பதிவர்களுக்கு தங்களை பற்றிய அறிமுகம் செய்து கொள்ள 49 வினாடிகள் வழங்கப்பட்டது. ஜாக்கி சேகர், மணிகண்டன் நான் உள்ளிட்ட சில தமிழ் பதிவர்களுக்கே பேச வாய்ப்பு கிடைத்தது. ஜாக்கி பேசும்பொழுது 'ஜெய் ஜாக்கி' உள்ளிட்ட சங்கத்தின் கோஷங்களை எழுப்பி சரியான மாஸ் காட்டினோம்.



கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கே.ஆர்.பி.செந்தில், கேபிள், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த கார்க்கி மற்றும் வேறு சில பதிவர்கள் ஜாலியாக கமெண்ட் அடித்தபடி இருந்தோம்.

எங்களுடன் இருந்த ஒரு பதிவர் பேசி விட்டு அமர்கையில் எங்களைப் பார்த்து,  "பிளாக்ல எல்லாம் கமெண்ட் போடாதீங்கய்யா.. இங்க மட்டும்..." என கமெண்டிற்கு கமெண்ட் அடித்தார்.

பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களாக டாட்டா கிராண்டே கார் குறித்த அறிமுக உரை தரப்பட்டது.  தொடர்பான விளம்பரங்களையும் ஒளிபரப்பினார்கள்.


'ஹை டீ' இடைவேளை விட்டார்கள். சுமார் 1 மணி நேரம் இருக்கும். வந்திருந்த நம் தமிழ் பதிவர்கள் அனைவரையும் பார்த்து மகிழ்வாக உரையாட முடிந்தது. லக்கி, அதிஷா உடன் சேர்ந்து வேலாயுதம் வெற்றி வாய்ப்பு குறித்தும் சுறா ஏன் சரியாக போகவில்லை என்றும் கார்க்கியுடன் நீயா நானா நடத்திக்கொண்டிருந்தோம். 


நல்ல ஸ்நாக்ஸ் வகைகளை பரிமாறி இருந்தார்கள்.  பாஸ்ட்ரி, சிக்கன் ரோல் தவிர மற்ற எதன் பெயரும் தெரியவில்லை. ஆனால் எல்லாமே சுவையாக இருந்தது. கேபிள் சங்கர்ஜி பாஷையில்.. ம்ம்ம்.. டிவைன்..






இடைவேளை முடிந்து பதிவுகளை குறும்படங்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்களாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் இயக்கமான பிளாக்கலாக்ஸ் குறித்த விரிவுரை நடந்தது. நமது அதிஷாவின் 'மெட்ராஸ் பாஷையில் ஜென் கதைகள்' மேடை நாடகமாக அரங்கேறியிருக்கிறது என தொகுப்பாளர் சொன்னபோது ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது.


அடுத்ததுதான் சுவாரஸ்யமான விளையாட்டு, ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட சார்ட்டில் அரை மணியில் யார் அதிகம் பதிவர்களை சந்தித்து அதில் அதிகமாக கமெண்ட் பெறுகிறார்கள் என்கிற ஜாலியான போட்டி.

'ஐயாம் மொக்கை ஆர் யூ?' என சார்ட்டில் எழுதி முதுகில் கட்டிக்கொண்டார் லக்கி. தமிழ் பதிவர்கள் யாரும் இதை அவ்வளவு ஆர்வமாய் எடுத்துக்கொள்ளவில்லை. எங்களுக்குள்ளேயே எழுதிக்கொண்டிருந்தோம்.

கார்க்கியின் சார்ட்டில் வேலாயுதம் சூப்பர் பிளாப் என யாரோ தமிழ்நாட்டிற்கே தெரிந்த ரகசியத்தை எழுதியிருந்தார்கள்.  எங்காத்தா மேல சத்தியமா நான் 'மங்காத்தா ராக்ஸ்' மட்டும்தான் அவர் சாட்டில் எழுதினேன்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜாக்கி முதுகிலிருந்து சார்ட்டை கழட்டி கையில் வைத்துக்கொண்டார். ஏன் தல என்று கேட்டால், அனானியா வந்து பின்னூட்டம் போட்டுருவாங்கடா என ஜாலியாக சிரித்தார்.


இந்த விளையாட்டின் முடிவில் அதிகமாக கமெண்ட் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நகைச்சுவையான கமெண்ட்டுகளையும் கேட்டு பரிசுகள் கொடுத்தார்கள்.

ஒரு இளம்பெண் பதிவர் எழுந்து, "யார் எழுதியது தெரியலை. என்னோட சார்ட்டில் ரவுடி ஆஃப் பிளாகர் மீட்னு எழுதியிருக்காங்க. யார் எழுதியிருந்தாலும் கையை தூக்குங்க ப்ளீஸ்" என்றார்.  உடனே கடைசி வரிசையில் இருந்த நாங்கள் அனைவரும் கையை தூக்கி நான்தான் நான்தான் என்றோம்.  தொகுப்பாளர், அவருக்கு பரிசு வழங்கியதும் அதை வாங்கிக்கொண்டு எங்களைப் பார்த்து தாங்க்ஸ் என சொல்லி அவர் அமர்ந்தது செம க்யூட்.



இனிமையான சந்திப்பு, கடைசியில் அந்த டிஸ்கஷன் நிகழ்ச்சியில் ஹவ் கேன் வி ஹெல்ப் தமிழ் பிளாக்கர்ஸ் போர்ட் சர்ச்சைக்குரிய விஷயமானது.  அந்த போர்டை திரும்ப பெற வேண்டும் என ஒருங்கிணைப்பாளரிடம் முறையிட, அதற்கு அவர்கள் அந்த அர்த்தத்தில் தாங்கள் சொல்லவில்லை என வருத்தம் தெரிவித்து போர்டை திரும்ப பெற்றனர்.



இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோ பிளாக்கர் Pheno Menon அவர்களுடையது. த்ரூ தி லுக்கிங் கிளாஸ் என்கிற போட்டோ பிளாக் வைத்திருக்கிறார். அத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது.  இந்த புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த அவருக்கு எனது நன்றிகள்.

Thanks - Photo Courtesy : 



indiblogger tatagrande chennai meet hyatt regency valaimanai sukumar swaminathan