Friday, September 24, 2010

ஃபீலிங்ஸ் - 24 - 09 - 10



காமன்வெல்த் காமெடி






■ ஸ்டேடியத்துக்கு போகிற பாலம் சரிஞ்சு விழுது, குஸ்தி அரங்க மேற்கூறை இடிஞ்சு விழுது, டெங்கு தொரத்துது, பாத்ரூம் படுத்துது, வீரர்கள் படுக்கை விரிப்புல நாய் உச்சா போயிருக்கு, போகிற போக்குல தீபாவளி டப்பாசு மாதிரி ரெண்டு பங்காளிங்க டூரிஸ்டை சுட்டுட்டு போறானுங்கன்னு காமன்வெல்த் கேம்ஸ்ல எக்கச்சக்க சொதப்பல்.  நாம எல்லாம் இலவசமா காமெடி பண்ற நேரத்துல கவர்ன்மென்ட் மட்டும் லட்சம் கோடின்னு செலவு பண்ணி காமெடி ஷோ பண்ணுவதை வன்மையாக கண்டிக்கிறேன். 

பேசாம நம்ம லலித் மோடிக்கிட்ட காமன்வெல்த் கேம்ஸை ஒப்படைச்சிருந்தா சூப்பரா ஆர்கனைஸ் பண்ணி அட்டகாசம் பண்ணியிருப்பாரு. என்ன.... ஒரு தொள்ளாயிரம் லட்சம் கோடி ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்கும் அவ்வளவுதான்.






இன்னைக்கு வந்திருக்கிற லேட்டஸ்ட் நியூஸ்படி 76 நாடுகளுக்கு தலா ரூ.64 லட்சம் வீதம் மொத்தம் ரூ.46 கோடி லஞ்சம் கொடுத்து காமன்வெல்த் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறதாம் இந்தியா. ஏம்ப்பா இப்படி மானத்தை வாங்குறீங்க... லஞ்சம் கொடுக்கிறதுலயும் ஒரு மரியாதை வேணாமா..?  நம்ம ஊரு முட்டுசந்து ரோடு கான்ட்ராக்டுக்கே கோடி கணக்குல லஞ்சம்னு நியூஸ் வரும்போது... அல்பத்தனமா லட்சக்கணக்குல லஞ்சம் கொடுத்திருக்கீங்க.... அது சரி... நம்மகிட்டயே கூச்சப்படாம கைநீட்டி காசு வாங்குன அந்த அல்ப நாடுகள் யாருப்பா..?






திரைப்படம்
அவதார் - ஸ்பெஷல் எடிஷன் 3D












■  வேட்டைக்காரனுடன் ரிலீசான அவதார் திரைப்படம் சத்யமில் நிற்காமல் ஓடு ஓடுவென ஓடிக்கொண்டே இருந்தது. ரிலீசான சமயத்தில் பார்த்தது. மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்றிருந்தபோது அவதார் ஸ்பெஷல் எடிஷன் வெளியாகி இருக்கிறது. முந்தைய பதிப்பில் இல்லாத 20 நிமிடக் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்முறை பி.வி.ஆரில் பார்த்தேன். சாகக்கிடக்கும் தளபதியை கண்டு பேசுவது, வகுப்பு நடக்காத பள்ளிக்கூட காட்சிகள் என சில காட்சிகள் ஆங்காங்கே சேர்க்கப்பட்டு இருக்கிறது. படத்தின் தொழில்நுட்பத்தையும், கிரியேட்டிவிட்டியையும் குழுவினரின் உழைப்பையும் கண்டு மீண்டும் மீண்டும் பிரமிப்பு ஏற்படுகிறது. பி.வி.ஆரில் ஒரு சௌகரியம் 3D கண்ணாடியை 25 ரூபாய் வாங்கிக்கொண்டு நமக்கே கொடுத்து விடுகிறார்கள். அடுத்தடுத்த படங்கள் பார்க்க செல்லும்போது உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.





நாவல்
காசநோவா 99 - எண்டமூரி வீரேந்திரநாத்









■  எதிர்பாராத டிவிஸ்ட்டுகளுடன்  பரபரவென பறக்கும் நாவல். நாவலின் கதை இதுதான். காஷ்மீரை தங்கள் வசம் அபகரிக்க பாகிஸ்தான் ஒரு சதித்திட்டம் போடுகிறது.  அதன்படி ஃபாக்ஸ் எனப்படும் பாகிஸ்தான் உளவாளி இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் பணத்துடன் கிளம்பி வருகிறான்.  அவன் என்ன ஆனான் என தெரியாத நிலையில் பல வருடங்கள் கழித்து கதை ஆரம்பிக்கிறது.கதையின் நாயகர்கள் பாதுகாப்பு அதிகாரி மாந்தாதாவும் அவரது காணாமல் போன காசநோவா தம்பியும்தான். அவனது காதலியாக ஒரு பல் மருத்துவர். இவர்கள் மூவரை சுற்றி செல்கிறது கதை. அந்த ஃபாக்ஸ் என்ன ஆனான் எப்படி காஷ்மீரை பாகிஸ்தான் வசம் சேர்க்க சதி செய்கிறான் என்பதெல்லாம் கற்பனை செய்ய முடியாத திரில்லிங் சமாசாரங்கள். அவன் திட்டத்தை அறியும் இந்த மூவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என பக்காவான நாவல். நிறைய காதலும் நாவலில் உண்டு நகைச்சுவையுடன். புக் கிடைச்சா டிரை பண்ணி பாருங்க!
   






நகைச்சுவை





■  கோயில் காளை திரைப்படத்தில் வரும் இந்த கவுண்டர் அண்டு கோ காமெடி காட்சி எப்பொழுது பார்த்தாலும் ரொம்பவும் ரசித்து கண்ணில் நீர் வர சிரிப்பேன்.  ராமைய்யா ஒஸ்தாவைய்யா..  என கோரஸ் பாடுவதாகட்டும், கடைசியில் அடிவாங்கிவிட்டு ஏன்டா சொல்லலை என கேட்பதாகட்டும் கவுண்டர் கவுண்டர்தான்.....






டிவிட்டர்






■  எல்லோரும் இருக்காங்களே அதனால நாமும் இருப்போம்னு சமீபத்தில் ஒரு பதிவர் டிவிட்டர்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்காரு. ஆனா ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம்னு ஒன்னும் தெரியாம அவர் முழிச்சிக்கிட்டிருப்பதை பார்த்தா செம காமெடியா இருக்கு. ஏன்யா உனக்கெல்லாம் இந்த வேலைன்னு திட்ட விரும்புகிறவர்கள் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி  http://twitter.com/sukumarswamin




இந்த வார விட்ஜெட்






■   காமினி சவால் சிறுகதைக்கான பிளாஷ் விளம்பர இணைப்பு தர கீழ்கண்ட கோடிங்கை காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் பேஸ்ட் செய்யவும்.






விபரங்களுக்கு இந்த அறிவிப்பைச் சுட்டவும்





<embed src="https://5260715446677696916-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/evergreenrose/suku.swf" quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" width="200" height="200"></embed>


<a href="http://www.parisalkaaran.com/2010/09/blog-post_14.html" target="_blank">விபரங்களுக்கு இந்த அறிவிப்பைச் சுட்டவும்</a>

Wednesday, September 22, 2010

எம்.ஜி.ஆர்கிட்ட என்னவோ இருந்திருக்கு







வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை



வாத்யார் -  நூல் அனுபவம் - புத்தக விமர்சனம்


சிறு வயதில் அக்கா, அண்ணன் செய்த சேட்டைகளால் எனக்கே தெரியாமல் நான் எப்படி ரஜினி ரசிகன் ஆனேனோ, அதேபோல் அப்பா அம்மாவின் ரசிப்புகளால் எம்.ஜி.ஆர் மேல் ஒரு ஈர்ப்பு உள்ளுக்குள் தானாக வளர்ந்திருந்தது. இப்போ ரஜினி மாதிரி அப்போ எம்.ஜி.ஆர் என்கிற அளவில் ஒரு கட்டத்தில் நான் அறிந்திருந்த எம்.ஜி.ஆர், பின்னர் நான் வளர வளர கண்டு,  கேட்டு, படித்த விஷயங்களால் எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் மட்டுமல்ல பெரும் மக்கள் சக்தியை தன்னகத்தே வைத்து பல மாயாஜால வித்தைகளை புரிந்த தலைவர் என்கிற அளவில் உணர்ந்திருந்தேன். 


அவரைப் பற்றி கொஞ்சம் ஆழமாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என யோசித்து வைத்திருந்த சிறு எண்ணமானது,  ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வாத்யார் புத்தகத்தை பார்த்த உடன் அதை வாங்க வைத்துவிட்டது. எம்.ஜி.ஆர் படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ படத்தைப் பார்த்தது போலிருந்தது வாத்யார் நூல்.




ஏழு வயதில் தொடங்கிய பயிற்சி. கதாநாயகனாக நடிப்பதற்கு இருபத்து முன்று ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. 


வறுமையை சமாளிக்க சிறுவயதிலேயே நாடக கம்பெனியில் சேர்ந்து நடிப்பை கற்று, பின்னர் இளமையில் எதிர்கால குழப்பங்களோடு சினிமா சில்லறை வேஷங்களில் தலைகாட்டி வாய்ப்பு கனிய காத்திருந்து பின்னர் ஹீரோவாகி என சாதாரண ராமச்சந்திரன் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் ஆக பட்ட கஷ்ட நஷ்டங்கள் என ஆரம்பிக்கிறது நூல்.


படத்தில் தசாவதார நடனம் ஒன்று இடம்பெற்றது.  ஆனால் அதை நீக்க வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். நான் தி.மு.கவில் இருக்கிறேன். கொள்கைக்குச் சரிவராது என்றார்.


எம்.ஜி.ஆரின் தி.மு.க விசுவாசம்,  கட்சிக்கான உழைப்பு, பின் அடைந்த அவமரியாதை என எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையின் முதல் பாதி விஷயங்கள் என்னைப் போன்ற பெரும்பாலான இன்றைய தலைமுறை அறிந்திராதவை. 


எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டார்!


முற்றுப்புள்ளி என்றுதான் நினைத்தார்கள்;உண்மையில் அது கால்கோள் விழா!

17 அக்டோபர் 1972. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. லாரியில் ரசிகர்கள். ரயிலில் ரசிகர்கள். பேருந்தில் ரசிகர்கள். எங்கு பார்த்தாலும் ஒரே கோஷம்.


எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, தி.மு.க, அ.தி.மு.க சார்ந்த தமிழக அரசியல் குறித்து பேசப்படும்பொழுதெல்லாம் எனக்கு பாதியில் இருந்து படம் பார்ப்பது போல் இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் எந்த சூழ்நிலையில், ஏன் தனியாக கட்சி ஆரம்பித்தார், ஆட்சியமைப்பு, அவரது செயல்கள், அதற்கான எதிர்வினைகள், அவைகளை அவர் சமாளித்த விதம், அவரது எண்ண ஓட்டங்கள் என பரபரவென பறக்கிறது வாத்யார் புத்தகம்.


இந்திராவுக்கும் எதிரியாவிடக்கூடாது, மொரார்ஜிக்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் பாடு திண்டாட்டமாகத்தான் இருந்தது. 

நடிப்பு வேறு, அரசியல் வேறு என்றாலும் விரைவாக கற்று,  மத்தியிலும் கண் வைத்து சூழ்நிலைக்களுக்கேற்ப காய் நகர்த்தி என 'என்னா ஷோ காண்பிச்சிருக்காருய்யா வாத்யாரு' என நமக்கே பல இடங்களில் சொல்லத் தோன்றுகிறது.



உண்மையில் எம்.ஜி.ஆருக்கு சிவாஜியின் வெற்றி மலைப்பை ஏற்படுத்தியிருந்தது. சிவாஜி பராசக்தியில் நடிக்க வந்தபோது எம்.ஜி.ஆர் உச்சத்தில் இருந்தார். ஆனால் இன்று சிவாஜியோ தொடர் வெற்றிகளால் விஸ்வரூபம் எடுத்திருந்தார். எம்.ஜி.ஆருக்குப் படுத்தால் தூக்கம் வரவில்லை. கனவிலும் கூட சிவாஜி கணேசன் வந்து கொண்டிருந்தார்.


அரசியலும் சினிமாவும் எம்.ஜி.ஆருடன் எப்படி இரண்டற கலந்திருந்தது என்பதை நாம் 



இந்தப் புத்தகத்தில் தெள்ளத்தெளிவாக அறியலாம். நடிப்பில் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்கும் இடையே நிலவிய போட்டியும், எம்.ஜி.ஆரின் மனநிலையும் சில ஆச்சர்யமான விஷயங்களுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. 





தேவர் பிலிம்ஸ் தேவருடன் ஒப்பந்தம் போட்டதாகட்டும், மு.க.முத்துவை புகழ்ந்து எழுதிய வாலியை கூப்பிட்டு கலாய்ப்பதாகட்டும் சில விஷயங்களை மறைக்காமல் தைரியமாக சொல்கிறது இந்நூல்.






சத்துணவு திட்டம் என்றபோது எம்.ஜி.ஆரை நோக்கி கை கூப்பிய மக்கள், சாராய பேர ஊழல் வெடித்தபோது அதிகாரிகளை நோக்கியே கைகளை நீட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் மீது சந்தேகத்தின் நிழல்கூட விழவில்லை. அதுதான் எம்.ஜி-ஆர் என்ற மந்திர வார்த்தையின் பலம். 




மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் காலங்களை கடந்து இன்றும் இமேஜ் வட்டத்தையும், ஏராளமான ரசிகர்களையும் வைத்திருக்கும் எம்.ஜி.ஆர் எனப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன் பற்றி சொல்லப்படும் இந்த புத்தகம் வெறும் வாழ்க்கை வரலாறு புத்தகம் என்றில்லாமல் சிறந்த தன்னம்பிக்கை புத்தகமாகவும் அமைந்துவிட்டிருக்கிறது.

'என்னவோ இருந்திருக்குடா இவர்கிட்ட' என நான் அடிக்கடி நினைத்திருந்த எம்.ஜி.ஆர் வாழ்வின் முக்கிய கட்டங்களை, ஏறத்தாழ 70 வருடங்களை  பாஸ்ட் பார்வார்ட் செய்து நமக்கு எம்.ஜி.ஆர் உடனே பயணித்த அனுபவத்தை வரவழைப்பதால் நூலாசிரியர் ஆர்.முத்துக்குமார் நிச்சயமாய் பாராட்டுக்குரியவர்.




அட்டைப்படம் அருமை. புத்தகத்தில் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்கள் சிறப்பு

வாத்யார்
ஆர்.முத்துக்குமார்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.120



புத்தகம் குறித்த சுட்டி


-------


குறிப்பு : ஹைலைட் செய்யப்பட்ட வரிகள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்



keywords : MGR, M G Ramachandran life history, Vadhyar by R.Muthukumar, Book Review, MGR Rare stills, Kalaignar, dmk, admk, annadurai, Kizakku padhipagam


Thursday, September 16, 2010

ஃபீலிங்ஸ் - 16 - 09 - 10


எதிர்பார்ப்பை குறைக்கும் எந்திரன்

 பாபா படம் வருவதற்கு முன்னால் பாபா கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் என பத்தே வினாடிகள் போட்ட விளம்பரம் பரபரப்பை அள்ளியது. 'பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல' என போடப்பட்ட ஒரே ஒரு டிரைலரினால் சிவாஜி ஹைப் ஹைவோல்டேஜில் எகிறியது.  


ஃபேஸ்புக்கில் சுட்டது..  எந்திரன் டிரைலருக்கான டிக்கெட்


ஆனால் இப்போது எந்திரனுக்கு செய்யப்படும் மார்கெட்டிங்கை பார்க்கும்போது கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. இயல்பாகவே ரஜினி படங்களுக்கு ஏற்படும் எதிர்பார்ப்பு கூட இவர்கள் அடிக்கும் மார்கெட்டிங் கூத்தால் வெகுவாக குறைகின்றது.





■  ஹிந்தி ரோபோவுக்கான ஒரு இசை விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. அது நொல்லை இது நொட்டை என காய்ச்சி எடுத்திருந்தார்கள். படிக்கும்போது ரஜினி ரசிகராய் டென்ஷன் ஆனாலும் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகராய் கொஞ்சம் உண்மை போலத்தான் தோன்றுகிறது.






இதென்ன சின்னபுள்ளதனமா இருக்கு






■  அது என்னதான்டா இருக்கு இந்த ஃபேஸ்புக் பார்ம்வில்லி கேமில் என்று சென்று பார்த்தால் நல்ல காமெடியாக இருக்கிறது. விதை விதைக்கனும் அறுவடை செய்யனும் அது இதுன்னு மூழ்கியவர்களுக்கு சுவாரஸ்யமான கேம். புதியதாக வந்திருக்கும் பிரன்டியர்வில்லி கேம் சும்மா விளையாடிப் பார்த்தேன். கொடுத்திருக்கும் படம் எனது பார்மில் எடுக்கப்பட்டது. (இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்குறவங்க ப்ரீயா விடுங்க.. )


விருந்து




சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் இருக்கும் சுரங்கப்பாதைக்கு முன்னர் ஹோட்டல் சுப்ரபா எனும் உணவகம் இருக்கிறது. மதிய உணவு அங்கு தடபுடலாய் இருக்கும். தலை வாழை இலை போட்டு, முதலில் பருப்பு நெய்யுடன் ஆரம்பிக்கிறார்கள். கூட்டு,பொரியல், பச்சடி அல்லது ஸ்பெஷல் சட்னி, ஊறுகாய், அப்பளம் வைக்கப்படும். பிறகு அருமையான சாம்பார், வத்தல் குழம்பு அல்லது மோர் குழம்பு, ரசம், கெட்டி மோர் என அனைத்தின் ருசிகளும் அமர்க்களமாய் இருக்கும்.  சப்ளையர்கள் கவனிப்புதான் இங்கு ஸ்பெஷல்.  கேட்க கேட்க முகம் சுளிக்காமல் கூட்டு, பெரியல் வைப்பதாகட்டும், குடிக்க குடிக்க கடைசியில் மோர் கொடுப்பதாகட்டும், உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு போன ஃபீலிங் வருகிறது. விலை ரூ.40 என நினைக்கிறேன். அந்த பக்கம் போனால் முயற்சி செய்து பாருங்கள்.




விளம்பரம்


■  ஷாருக்கான், அமிதாப் தோன்றும் விளம்பரங்களுக்கு தமிழில் ஏன்தான் இப்படி கர்ணகொடூரமாய் கிழவன் போல் இழுத்து இழுத்து டப்பிங் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. அமிதாப்பின் சாம்பியன்ஸ் லீக் விளம்பரத்தையும், ஷாருக்கின் பெப்ஸோடன்ட் விளம்பரத்தையும் அடுத்த முறை கண்ணை மூடி கேட்டுப்பாருங்கள்.


■  ஹமாம் சோப் விளம்பரத்தில் 'ஆட்டோல பசங்க கூட ஒட்டிக்கிட்டு போறாளே அதான்' என ஆக்ரோஷமாய் தாத்தா கேரம் காயினை அடிப்பார். இது குறித்து பதிவிட வேண்டும் என முன்னரே யோசித்திருந்தேன். தற்போது அது டப்பிங்கில் மாற்றப்பட்டு தூசு கீசு பட்டிருக்கும் என வருகிறது. இதுக்கு விளம்பரத்தையே மாற்றியிருக்கலாம்.





■  'வான் எ டான்ஸ்?' என ஹிரிதிக் அழைப்பதும் அந்த பெண் 'ஐ கான்ட்' என புன்னகைப்பதும்,  பின்னர் ஹிரிதிக் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்துக்கொண்டு காட்டுவதும் அதற்கு அந்த பெண் பின்னாலேயே சென்று டான்ஸ் ஆடுவதும் என மகா காமெடியான விளம்பரம் ஒன்று ரொம்ப நாட்களாய் ஓடுகிறது. நிஜத்தில் ஏதாவது ஒரு பெண்ணிடம் இப்படி பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினால் நான் என்ன நாய்குட்டியா என பட்டென்று அடிதான் விழும். எந்த எந்த விளம்பரத்துக்கோ 'இதை முயன்று பார்க்காதீர்கள்'னு கேப்ஷன் போடுறாங்க.. முதல்ல இதுக்கு போடுங்கப்பா..


போட்டோ கமென்ட்ஸ்


சென்ற வாரம் அறிவித்திருந்த போட்டோ கமென்ட்ஸ் போட்டிக்கு எதிர்பார்த்ததை விட அதிகமாய் கமென்ட்ஸ் குவிந்திருக்கிறது. அனைவருக்கும் மிக்க நன்றி. பேனர் டிசைன் செய்து முடிவுகளை அறிவிக்க வேண்டி இருப்பதால் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் வெளியிடுகிறேன். நண்பர்கள் பொறுத்துக்கொள்ளவும்.