Monday, July 4, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 04 07 11



புத்தகங்கள் வெகுவாக வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டவை.

பத்திரிக்கை வேலை பார்ப்பதாலும், பதிவுலகம் வந்ததாலும் முன்பிருந்த சிந்தனை முறைகள் தற்போது வெகுவாக மாறிவிட்டிருப்பதை சமீப காலமாக உணர்ந்து வருகிறேன்.

எதிலும் விமர்சனப் பார்வை, எதையாவது பதிவு செய்ய வேண்டி வலுக்கட்டாயமாக மூளையை வெவ்வேறு கோணங்களில் யோசிக்க வைப்பது, முக்கியமாக குறை கூறும் மனப்பான்மை அதிகரித்துவிட்டது. முன்பிருந்த கேரக்டரை மீட்டெடுக்க எட்டு வருடங்கள் முன்னர் என் வாழ்க்கையாய் இருந்த "How to win friends and influence people" புத்தகத்தை எடுத்து ரிவிஷன் செய்தேன்.

இந்த ஒரு புத்தகம் எனது வாழ்க்கையை, எனது கேரக்டரை சில விஷயங்களில் மேன்மையாய் மாற்றி விட்டிருக்கிறது என்பதை உணரும் பொழுது எவ்வளவு பெரிய பொக்கிஷம் வாழ்வில் கிடைத்திருக்கிறது என நினைத்து மகிழ்வடைந்தேன். எந்த புத்தகத்தை தவற விட்டாலும் இந்த புத்தகத்தை தவற விடாதீர்கள்.

புத்தகம் குறித்த எனது பார்வை : http://valaimanai.blogspot.com/2011/06/blog-post_30.html


மீபத்தில் படித்ததில் அசத்திய புத்தகம் 'கே.ஆர்.பி செந்தில்' எழுதிய 'பணம்'. வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்க செல்பவர்களின் கதைகள் அடங்கிய கலெக்ஷன்.  படிப்பதற்கு வெகு வெகு சுவாரஸ்யமாக இருந்தது. கொடுக்கும் காசுக்கு வொர்த் ரீடிங்!!

சுட்டி : http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D


ணைய பெருமக்களுக்கான சமீபத்திய புதுவரவு கூகுள் பிளஸ். பேஸ்புக்கை போலவே கூகுள் முயற்சி செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.  பதிவுகளில் இயங்கிய பலர் தற்போது கூகுள் பஸ், டிவிட்டர், பேஸ்புக்குகளில் தீவிரமாக இயங்குகிறார்கள். எனக்கு பஸ்ஸும், பேஸ்புக்கும் வசதியாக இருக்கிறது. ஆயினும் என்ன ஆனாலும் பதிவு எழுதிக்கொண்டே இருப்பதில் உறுதியாக இருக்கிறேன். இது தனி உணர்வு.

கிழக்கின் அதிரடி விற்பனையில் ஹாட் கேக் என்றால் அது பா.ராகவன் எழுதிய மாயவலை புத்தகம்தான். உலகின் அனைத்து தீவிரவாத இயக்கங்கள் பற்றிய இந்த புத்தகம் 1000+ பக்கங்கள் கொண்டது. ரூ.750 விலையான இது தற்போது சிறப்பு விலையாக ரூ.338க்கே கிடைக்கிறது.  போனா வராது பொழுது போனா கிடைக்காது என்பதால் உடனடியாக வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

இணைய விற்பனை சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-050-4.html

னது சில சமீபத்திய டிவிட்ஸ் & பஸ் :

தற்போது நிம்மதியாய் உறங்கும் ஒரே தி.மு.க. பிரமுகர் ஆற்காடு வீராசாமியாகத்தான் இருக்கும.

மனைவி திடீரென பேசாமல் இருந்தால் தனது எந்த தவறை கண்டுபிடித்துவிட்டாள் என அறியும் ஆர்வத்திலேயே சமாதான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டியதாக இருக்கிறது.

விலைவாசியால் பசித்திரு மின்வெட்டால் விழித்திரு டாஸ்மாக்கில் தண்ணித்திரு # தமிழகம் டுடே


Tuesday, June 28, 2011

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன் | வலைமனை






சுதந்தர இந்தியா சந்தித்த முதல் பெரிய அதிர்ச்சி, காந்தி கொலை!

வானொலியில் காந்தியின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டபோது பல இந்தியர்களால் அதை நம்ப முடியவில்லை.  ஏற்கமுடியவில்லை. 'வெள்ளைக்காரன் கூட காந்தியைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. சுதந்தரம் வாங்கியபிறகு நம்ம ஊர்க்காரன் ஒருத்தன் அவரைச் சுட்டுக் கொன்னிருக்கானே' என்று பேசிப்பேசி மாய்ந்தார்கள்.

'என்னது காந்தி செத்துட்டாரா?' என்கிற வாக்கியம் இன்று நையாண்டி வழக்காக புகழ் பெற்றது. 'இது பழைய செய்தி' என்பதை குறிக்கும் விதத்தில் அது கையாளப்படுகிறது. ஆனால் உண்மையில் காந்தி இறந்துவிட்டார் என்பது  புதிய செய்தியாக இருந்த அத்தருணத்தில் எவ்வளவு பெரிய அதிர்ச்சியில் தேசம் உறைந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

அதை துல்லியமாக எடுத்துக்கூறி, நடந்த சம்பங்கள், சுட்டவன், உடன் இருந்தவன், பிண்ணனியில் உதவியர்கள், அவர்கள் காந்திக்கு எதிராக இந்நிலைப்பாடு எடுத்ததற்கான காரணம், திட்டமிடுதல், செயல்படுத்துதல், வழக்கு விசாரணை, தீர்பபு என காந்தி கொலை சம்பவத்தினை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு ஒரு பெரும் வட்டம் அடித்து காந்தி கொலை சம்பவம் குறித்த அனைத்தையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.



எளிமையான உடை. சிக்கனம். இவைதான் நாதுராமின் அடையாளங்கள். சிகரெட் புகைக்க மாட்டார். மது அருந்தமாட்டார். ஒரே பலவீனம், காஃபி! நல்ல காஃபிக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடக்கவும் தயாராக இருப்பார்.


இப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்த நாதுராம் கோட்ஸேவுக்கு நாராயண் ஆப்தே என்கிற அதிஆடம்பரமான, ஆர்ப்பாட்டமான, பெண் வாசனை பட்டாலே கிறங்கி விழக்கூடிய ஒரு சிநேகிதம் கிடைத்தது பெரிய ஆச்சர்யம்தான்!


காந்தியை கொன்னது கோட்ஸே என்பது மட்டும் தெரியும். கொஞ்சம் நெற்றியை சுருக்கினால் ஆப்தே என்றொரு இன்னொரு பெயரும் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் இந்த புத்தகத்தை உலுக்கினால் கார்க்கரே, மதன்லால், கோபால் கோட்ஸே, பாட்ஜே, ஷங்கர் என காந்தி கொலையில் தொடர்புடைய ஏராளமான பெயர்கள் கொட்டுகிறது. வெறும் பெயர்கள் மட்டுமல்லாது ஒவ்வொருவரின் பின்னணிகளும் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் வெகு விலாவாரியாக விலக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.


...அவனுக்குள் சாவர்க்கர் கொளுத்திப் போட்ட நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருந்தது.    இதனால் தன்னுடைய ஹிந்துத்வா கொள்கைகளுடன் ஒத்துப்போகக்கூடிய இளைஞர்களைத் தேடிப் பிடிக்க ஆரம்பித்தான் நாதுராம். அவர்களுடன் பல விஷயங்களைப் படிப்பது, விவாதம் செய்வது, தங்களுடைய கொள்கைகளைப் பெரும்பான்மை மக்களிடையே கொண்டு செல்வதற்கான திட்டங்களைத் தயாரிப்பது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.


ரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் இவ்வாறு பூமியில் வாழ்ந்தார் என்றால் வரும் தலைமுறையினர் அதை நம்புவது கடினம் என விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போற்றும் அளவிற்கு வாழ்ந்த ஒரு மனிதரை, தேசம் போற்றிய மகாத்மாவினை, உலகம் வியந்த தலைவரை ஒருவன் நேருக்கு நேர் நின்று கொன்றான் என்றால் அவனது நிலை என்ன என்பதை அறிய மிகச்சிறந்த வாய்ப்பாக இந்த நூல் திகழ்கிறது.


கோட்ஸே, ஆப்தே இருவருடைய உடலும் சிறைச்சாலையிலேயே எரிக்கப்பட்டன. அந்த இடம் நன்றாகத் தோண்டி உழப்பட்டது. அவர்களுடைய சாம்பல், நதியில் ரகசியமாகக் கரைக்கப்பட்டது.


நூலாசிரியருக்கும் புத்தகத்தை வடிவமைத்தவருக்கும் வாழ்த்துக்கள். அட்டைப்படம், குறிப்பாக அந்த நிறம் புத்தகத்திற்கு ஏற்றவாறு வெகு சிறப்பாக அமைந்திருக்கிறது.




மகாத்மா காந்தி கொலை வழக்கு
ஆசிரியர் என்.சொக்கன்
விலை ரூ.130
https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html

________________________________

*** நீல நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 
Kizaku padhipagam valaimanai blogspot sukumar swaminathan mahatma gandhi assasination case book review N.CHokkan 

Monday, June 27, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 27 06 11




விகடனில் பெயர் வராதா என்பது கல்லூரி நாட்களின் கனவு. கடந்த வார விகடனில் எனது பெயருடன் பேஸ்புக் ஸ்டேட்டஸ் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. விகடனுக்கும், இணைய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

வெற்றி எப்.எம்மில் பதிவர் நண்பர் லோஷன் தினமும் நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார். காலை பொழுதுகளில் அவர் நடத்தும் விடியல் சிறப்பாக இருக்கிறது. சீரான குரல், சுவையான ஏற்ற இறக்கங்களுடன் அவரது தொகுப்பில் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 'நாள் ஒரு தளம்' பகுதியில் வலைமனை குறித்த அறிமுகம் தந்த அவருக்கும் வெற்றி எப்.எம் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெற்றி எப்.எம் கேட்க : http://www.vettri.lk/

கிழக்கு பதிப்பகம் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு போய் இருந்தேன். தவறவே விடக்ககூடாத விற்பனை. சுமார் 2000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நான் வெறும் 500 ரூபாய்க்கே வாங்கினேன். இந்த வருடத்திற்கான புத்தகங்கள் ஸ்டாக் வைத்து விட்டேன் வீட்டில்.

இடம் : எல்.ஆர்.சுவாமி ஹால், சிவா விஷ்ணு ஆலயம் எதிரில், சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில் , டி.நகர் | காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்.

ஆன்லைன் சிறப்பு விற்பனையும் உண்டு.
விவரங்களுக்கு : http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_11.html

முழுமையான திருப்தி தராமல் அவன் இவன் எவனோ மாதிரி இருந்தது. இதற்கு இன்னொருமுறை மாவீரனே பார்த்திருக்கலாம் போல. தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழில் அரிதாகவே ஜெயிக்கும். மாவீரன் சிறப்பான முயற்சி.

மீபத்தில் பல புத்தகங்கள் படித்தும் அது குறித்து பகிர முடியவில்லை. காரணம் கடந்த பல வாரங்களாக வீட்டில் லோ வால்டேஜ். இதுவே கூட பல புத்தகங்கள் படிக்கும் நிலையை உருவாக்கி விட்டது என்று சொல்லலாம். ஏரியாவில் யாராவது ரெண்டு பேர் ஏசி ஆன் செய்துவிட்டால் இங்கே கணிணி இயக்க முடியாது. சீக்கிரமாய் உஷ்ணம் நீங்கி, நான் பதிவெழுத சூரிய பகவான் கருணை காட்ட வேண்டும்.

னது சமீபத்திய சில டிவிட்ஸ்/பஸ் :


வேற்று கிரக வாசிகளை கண்டுபிடிக்க அமெரிக்கா காட்டும் ஆர்வம், வளர்ந்து வரும் தங்களது பிரம்மாண்ட படைகளுக்கு உலக மக்கள் தொகை தூசு என்பதாலா?


லேப்டாப் கொடுப்பதற்கு முதற்கட்டமாக பாடபுத்தகங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டிய அம்மா அவர்களை வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறோம்.


எதிரி ஜெயித்துவிட்டால் துன்புறட்டும் என எண்ணுபவன் நிலத்தில் கண்ணி வெடி புதைத்து வைப்பான் - கலைஞரோ சிம்பிளாய் பாட புத்தகத்தில் கவிதை எழுதி வைத்துவிட்டார் # ராஜதந்திரம்



Monday, May 23, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 23 05 11




லைவர் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்நிலையில் ஊரெங்கும் இஷ்டத்திற்கும் வதந்திகள் உலா வருகின்றன.  சனிக்கிழமையன்று தனுஷ் டிவிட்டரில் இந்த படத்தை வெளியிட்டார். இதிலும் பின்னால் காலண்டரில் இருக்கும் மேரி மாதாவை சுட்டிக்காட்டி இப்படம் இசெபெல்லாவில் எடுத்த பழைய படம் என பேசிக்கொள்கிறார்கள். எது எப்படியோ, ரஜினி மீண்டும் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பி வருவார்.

 ரஜினி வாழ்க்கையில் எதிர்கொண்ட சோதனைகளில் இதுவும் ஒன்று என்றே நினைக்கிறேன். அவர் பூரண குணமடைய பெற எனது பிரார்த்தனைகள். ரஜினி மருத்துவமனையை விட்டு ஆரோக்யமாக வந்தால் போதும் என யாவரும் விரும்பும் இந்நிலையில் ராணா படம் அடுத்த வருடம் வந்தே தீரும் என கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி கொடுத்திருப்பது எல்லாம் தேவையில்லாதது.


ப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் நடந்தது. பெங்களூரை வீழ்த்தி முதல் இடத்தில் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சூப்பர் கிங்ஸ் தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்த மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா மேட்ச் ஆவலை அதிகரித்தது. மும்பை ஜெயித்தால் சென்னை முதல் இரண்டு இடத்திற்குள் வரும் என்ற நிலையில் நானும் அந்த மேட்சை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டும்.

அந்த ஓவரை பாலாஜி வீசினார். முதல் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக ஃபோர், கடைசி பந்தில் சிக்ஸர் என விளாசி மும்பை வெற்றி பெற்று சென்னை ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது. சென்னை அணியின் இந்நாள் வீரர்கள் செய்யாவிட்டாலும் முன்னாள் அணி வீரர் பாலாஜி அதை செய்திருக்கிறார் என  என நினைக்கும்பொழுது பெருமையாக இருக்கிறது.

பாவம் அங்க என்னா கும்மு கும்முறாங்களோ தெரியல....



பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் நான்காம் சீரிஸ் வெளிவந்திருக்கிறது. சனிக்கிழமை இரவு வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில் பார்த்தேன். 3டி எஃபெக்ட்ஸ் அட்டகாசம். காட்டு பிரதேசங்கள், கடல் என பைரேட்ஸ் சீரிஸில் ஒரு அருமையான 3டி அனுபவம். ஆனால் கதைதான் ஒரு கண்றாவியும் புரியவில்லை. 3டிக்கு ஆசைப்பட்டு ஆங்கிலத்தில் பார்க்க வேண்டியதாகிவிட்டது.  படத்தில் நகைச்சுவை வரும் இடங்களில் அவ்வளவு பேர் புரிந்து கொண்டு சிரிப்பது வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. இந்த அவமானத்தை துடைக்க சீக்கிரமே தமிழில் பார்த்து சிரிக்க வேண்டும்.



கோ மூன்று முறை பார்த்துவிட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் ஒரு பத்திரிக்கையாளனாக இருப்பது கூட இருக்கலாம். ஒரு பத்திரிக்கைகாரன் என்னவெல்லாம் துணிச்சலாக செய்ய முடியாதோ அதையெல்லாம் திரையில் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும் வடிகால் உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம்.

மூன்றாம் முறை அம்மாவை அழைத்து சென்றேன். படத்தை பார்த்துவிட்டு, இதுக்குதான் நீ பத்திரிக்கை ஆபிஸ்ல வேலை செய்யறதே பயமா இருக்குங்கிறேன் என்றார்.

அது சரி நமக்கு பைக்கை நேராவே ஓட்ட தெரியாது, இதுல எங்க ஜீவா மாதிரி தலைகீழா எல்லாம் ஓட்டுறது. இதெல்லாம் சும்மாம்மா என்றேன். அப்படியும் அவர் அமைதியானதாய் தெரியவில்லை.

ஒருவேளை ஜீவா மேலே மேலே வந்து விழும் பியா போன்ற ஃபிகர்கள் பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும் என நினைத்து சொல்கிறாரோ??
Sukumar Swaminathan | Blog post | Feelings May 2011 | Valaimanai |
Notes on Rajni's Health, Pirates of the Carribean - on Stranger Tides, Ko movie experience | IPL Season 4 Match 70 KKR Vs MI, Chennai Super KIngs gains second spot 


Wednesday, May 11, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 11 05 11



டையாரில் எங்கேயோ 'பக்கட் பிரியாணி' விற்கிறார்கள், சூப்பராக இருக்கும் என கேள்விப்பட்டு கடந்த ஞாயிறு கோயம்பேட்டிலிருந்து 'பிரியாணித்தோம். '  அடையாறில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பின்புறம் உள்ள தெருவில் ஒரு வீட்டில் முன் இருக்கும் இடத்தில் ஷெட் அமைத்து, அங்கேயே சமைத்து செமையான பிரியாணி விற்பனை நடைபெறுகிறது. சனிக்கிழமையே போனில் ஆர்டர் எடுத்து விடுகிறார்களாம். அதற்கேற்றார் போல் சமைக்கிறார்கள். நாங்கள் போனபோது மணி 12. அப்பொழுதே எல்லாம் தீர்ந்திருந்தது. வந்திருந்தவர்களிடம் மீண்டும் ஆர்டர் எடுத்து மறுபடி சமைத்து கொடுத்தார்கள். ஒரு ஷேர் மட்டன் பிரியாணி ரூ.800. ஏழு பேர் சாப்பிடலாம். மக்கள் வந்து நின்று வாங்கி செல்கிறார்கள். சமைத்த பிரியாணியை அப்படியே பக்கெட்டில் அள்ளி அள்ளி மக்களுக்கு பார்சல் செய்து தருவது கண்கொள்ளாக் காட்சி. 


வெயிலில் அலைந்து சென்று வாங்கியதற்கு பலனாக நல்ல சுவையான பிரியாணி. மட்டன் பீஸ்களை தாராளமாக அள்ளி வழங்குகிறார்கள். நல்ல டேஸ்டாக இருக்கிறது.


முயன்று பாருங்கள். செல்லும்பொழுது தேவைக்கேற்ப பாத்திரம் எடுத்துச்சென்றுவிட்டால் வசதியாக இருக்கும். ஏமாற்றங்களை தவிர்க்க சனிக்கிழமையோ அல்லது ஞாயிறு காலையோ ஆர்டர் கொடுத்துவிட்டால் நலம்.


தொடர்புக்கு : உஸ்மான் பிரியாணி - 044 24918581






சென்னையில் கோடை காலம் வரப்போகிறது என அறிவிக்கும் முதல் ஆள் அண்ணன் தர்பூசணிதான். ஆளை அடித்துப்போடும் பளீர் சிவப்பில் தடாரென சென்னை சாலைகளில் பிப்ரவரி மாதமே வரிசை கட்ட ஆரம்பித்துவிடும்.  இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை ஒரு ஸ்லைஸ் விலை ரூ.5 ஆக இருந்தது. தற்போது சற்றே நீளமான ஸ்லைஸ் போட்டு வைத்து ரூ.10 என விற்பனை செய்கிறார்கள். சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் துண்டுகளாக வெட்டிப்போட்டு அதில் ஒரு பல் குத்தும் குச்சியை சொருகி வைத்து விற்பனை செய்வது தர்பூஸ் விற்கும் தமிழனின் அப்டேட்டட் ஹாஸ்பிட்டாலிட்டி சர்வீஸ்!


ஞ்சா கலர், ரோஸ் கலர் மருந்து சீட்டு போல் இருந்த டிக்கெட்டை மாற்றி தற்போது கோயம்பேடு ரோஹிணி தியேட்டரிலும் கம்ப்யூட்டர் பிரிண்ட் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் எதை மாற்றினாலும் விலையை டிக்கெட்டில் குறிப்பிடாததை மட்டும் மாற்ற மாட்டோம் என்பதில் மட்டும் உறுதியாய் இருக்கிறார்கள் போலும்.  இந்த டிக்கெட்டில் விலை எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஹன்சிகா மோத்வானியின் கையெழுத்திடப்படாத பரிசு பொருள் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.




ஃபிளாட்டில் இருக்கும் வாண்டுகள் கிரவுண்டுக்கு அழைத்துப்போக தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தனர். ஒருநாள் எல்லாத்துக்கும் லீவு விட்டு டிரஸ்ட்புரம் கிரவுண்டில் வெயிலை வீணாக்காமல் கிரிக்கெட் விளையாடியதில் எனக்குள் வெளி உலகத்திற்கு தெரியாமல் போய்விட்ட ஒரு மினி தோனியே ஒளிந்து கொண்டிருப்பதை அறிந்தேன். ஹி..ஹி..



வெளியூர் பயணங்கள் புறப்படும் பொழுதோ, ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுதோ தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் அம்மா ஒரு ரூபாய் போடுவது வழக்கம். ஓட்டு போட கிளம்பும் அன்று தெருமுனை பிள்ளையார் கோவில்ல நிக்கிறேன் வா.. என்று கூறி நடந்தார். எதுக்கும்மா என கேட்டால், நல்ல ஆட்சி வரனும்னு ஒரு ரூபாய் போட போறேன் அதான் என்றார்.


Monday, April 25, 2011

காஷ்மீர் - பா.ராகவன்






கார்கில் யுத்தம் வந்தபோது கன்யாகுமரி வரை வசித்த மக்கள் பணமும் துணிமணிகளும் மற்றவையும் அனுப்பி சாரே ஜஹன் சே அச்சா என்று பாடியதுதான் நமக்குத் தெரியும்.

உண்மையில் காஷ்மீரிகள் இந்தியர்கள் இல்லையா? அவர்கள் நம்மைப்போல் நினைப்பதில்லையா? உணர்வதில்லையா? ஏன்?



நினைவு தெரிந்து எனக்கு ரோஜா படத்தில் அறிமுகமானதுதான் காஷ்மீர் குறித்த சங்கதிகள். அதன் பின்னர் அவ்வப்போது கண்ணில படும் செய்திகள், ஒளிபடங்கள், சினிமாக்கள், டாக்குமன்டரிகள், கட்டுரைகளில் காஷ்மீர் குறித்து துண்டு துண்டாக அறியப்பெற்றாலும் முழுமையான காஷ்மீர் குறித்த வரலாறினை அறிய கூடிய சந்தர்ப்பமோ உண்மையை சொன்னால் அவசியமோ ஆர்வமோ எழுந்ததில்லை.

ஒருநாள் பா.ராகவன் அவரது இணைய பக்கமான ரைட்டர் பாரா டாட் காமில் 'காஷ்மீர்' புத்தகத்தை எழுதிய விதம் குறித்து அவர் எழுதியிருந்த பதிவு முதன்முதலாக காஷ்மீர் குறித்து அறியும் ஆர்வத்தை எழுப்பியது. நடந்து முடிந்த சென்னை புத்தக கண்காட்சியில் அந்த புத்தகத்தை வாங்கி அவரது கையெழுத்தையும் பெற்றேன்.


ஹரி சிங் 1947 வரை காஷ்மீரை ஆண்டார். நான்கு மனைவிகளையும் ஒரு மகனையும் அவர் பெற்றார். 

இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தரமடைந்தபோது, காஷ்மீர் எந்தப் பக்கம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற வினாவுக்கு விடையளிக்கத் தடுமாறித் திண்டாடி, இறுதியில் இந்தியாவின் பக்கம் சாய்ந்தார். பாகிஸ்தான் கோபம் கொண்டது.

காஷ்மீர் பிரச்னை என்பது அக்கணத்தில் தொடங்கியது.


கி.பி. 13ம் நூற்றாண்டில் காஷ்மீரை கைப்பற்ற வரும் மன்னன் துலூச்சா படைகளில் இருந்து புத்தகம் ஆரம்பிக்கிறது.  காஷ்மீரின் கடைசி மன்னரான ஹரி சிங் தனது தாத்தா சொத்தான காஷ்மீரை தர மறுப்பதும், அவருக்கு எதிராக அதிருப்தியில் இருக்கும் மக்களின் தலைவராக ஷேக் அப்துல்லா உருவெடுப்பதும் என புத்தகம், இந்திய சுதந்தர பிரிவினை காலகட்டத்தில் டேக் ஆஃப் ஆகி கடைசி வரை பரபரவென பறந்து கடைசியில் தற்போதைய கால கட்டங்களை சொல்லும் இடங்களில் மட்டும் சற்றே வேகம் குறைந்து முடிகிறது.

காஷ்மீரின் அரசியல் என்பது, காஷ்மீரை முன்வைத்துப் பெரும்பாலும் அதற்கு வெளியே இருப்போர் நடத்துவது. இது, கடந்த அறுபதாண்டு காலத்துக்கு மேலாக காஷ்மீரிகளுக்குப் பழகிவிட்ட ஒன்று. பழகிவிட்டதாலேயே ஏற்றுக்கொண்டுவிடக் கூடியவர்களாகக் காஷ்மீரிகள் இல்லை.

காஷ்மீர் குறித்த அரசியல், ஆயுத வரலாறு அறிந்து கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் காஷ்மீர் மக்களது தனித்துவமான உணர்வுகளையும் நாம் துல்லியமாக புரிந்து கொள்ள உதவுவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்
.
• நிஜாமின் அரண்மனையில் நூற்றுக்கணக்கான கலைப்பொருள்கள் உண்டு. இன்றுவரை வியப்பூட்டும் நினைவுச் சின்னங்கள். அவற்றுடன் ஒன்றாக நிஜாமும் ஆகிப்போனார்.

• விளைவு, பாகிஸ்தான் காஷ்மீருக்குள் இடதுகால் வைக்க இந்தியாவே வசதி செய்து கொடுத்தாற்போல் ஆனது.

• ஊரெல்லாம் மரம் நட்ட அசோகர் அங்கேயும் சில ஆப்பிள் மரங்களை நட்டு ஆட்சி புரிந்திருக்கிறார்.

பா.ராவின் வழக்கமான வார்த்தை ஜாலங்கள் வாக்கிய மாயங்கள் இந்த புத்தகத்தில் அதிகமாக இல்லாமல் அளவோடு அதே சமயம் கூர்மையாக விளையாட விடப்பட்டிருக்கிறது.

காஷ்மீரிகளின் விடுதலை வேட்கை இயல்பானது. இந்திய அரசின் மீதான அவர்களுடைய கோபம் உண்மையானது. ஏதாவது செய்யவேண்டும் என்ற உள்மன எழுச்சி கூர்மையானது. பாகிஸ்தான் அதை எடுத்து வடிவமைத்து, செதுக்கிச் சீராக்கி, ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பத் தொடங்கியது.

ஆதி படையெடுப்புகள்,  மன்னர் வரலாறு, இந்திய பிரிவினை, மன்னர் ஹரி சிங்கின் காஷ்மீர் தனது சொந்த சொத்து என்கிற மனப்பான்மை, அக்காலகட்டத்தில் காஷ்மீரின் மக்கள் ஆதரவை வென்ற அப்துல்லா, முதலில் அவருக்கு நேருவின் ஆதரவு பின்னர் அவர்களது உறவில் விரிசல், அப்துல்லாவின் தொய்வடைந்த கடைசி கால நடவடிக்கைகள், இந்திரா காந்தியின் செயல்பாடுகள், பங்களாதேஷ் உதயம், காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தகிடுதித்தங்கள், நம்பிக்கை இழந்த மக்கள், தீவிரவாத இயக்கங்கள், இந்திய ராணுவ செயல்கள், அரசியல் இயக்கங்கள் என காலவாரியாக காஷ்மீர் குறித்து
"இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?" என அசர வைக்கும் அளவிற்கு முழுமையான அரசியல் வரலாற்று புத்தகமாக அமைந்திருக்கிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.


இந்த புத்தகத்திற்கு எத்தனையோ விதமான கவர்ச்சியான முகப்பு அட்டைகள்
வடிவமைத்திருக்க முடியும். ஆயினும் இந்த அட்டை வடிவமைப்பு,  இதன் நிறம் எனக்கு ஏனோ பெர்சனலாக ரொம்புவும் பிடித்திருக்கிறது. அரசியல் ஆயுத வரலாறு என்கிற சப் டைட்டிலுக்கு ஏற்றவாறு அட்டை வடிவமைப்பு அருமையான நிறத்துடன் சிறப்பாக அமைந்திருப்பதாக கருதுகிறேன்.

புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தில் முடியும் வாக்கியத்தையே இந்த புத்தகத்தின் பரிந்துரைக்கான வாக்கியமாக தர விரும்புகிறேன். அது -

காஷ்மீர் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள இது ஒரு தருணம்.
முயற்சி செய்யலாம்.


________________________________________________________________


காஷ்மீர் 
அரசியல் - ஆயுத வரலாறு

ஆசிரியர் : பா.ராகவன்
பதிப்பகம் : கிழக்கு
விலை : ரூ. 140
சுட்டி : 
https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html
_____________________________________________




பழுப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

_________________________________________________________________


_____________________________________________

Puthaga vimarsanam - nool anubavam - valaimanai noolagam 
Kashmir - pa.ragavan - book review - valaimanai - sukumar swaminathan 
Kizaku padipagam - Kizaku publications 

Thursday, April 7, 2011

வலைமனை ஃபீலிங்ஸ் - 07 04 11


லகக்கோப்பை வாங்கிய கையில் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஐ.பி.எல் சீசன் 4. புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என இரண்டு புதிய அணிகள், எல்லா அணிகளிலும் வீரர்கள் மாற்றம் என கடந்த முறைகளை விட சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.



மொத்தம் பத்து அணிகள் இருப்பதால் இம்முறை செமி பைனல்ஸ் கிடையாது. மாறாக விதிக்கப்பட்டிருக்கும் புதிய குவாலிஃபயர், எலிமினேட்டர் முறைகள் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

பத்து அணிகளில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். குவாலிஃபயர் 1ல் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி, வெற்றி பெறும் அணி பைனல்ஸ்க்கு தேர்வாகும்.

அடுத்து எலிமினேட்டர் போட்டியில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதி தோற்கும் அணி வெளியேற்றப்படும். அடுத்து குவாலிஃபயர் 1ல் தோற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வென்ற அணியும் குவாலிஃபயர் 2ல் மோதி, அதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் ஃ1ல் வென்ற அணியுடன் பைனல்ஸில் மோதும்.

இதனால் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு பைனஸ்ஸ் செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதலில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுகிறது. ஆனால் கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதலில் ஜெயித்தாலும் மறுபடி குவாலிஃபயரில் வென்றால்தான் உண்டு.

வழக்கமான அரையிறுதி சுற்றுக்குள் செல்ல முதல் 4 இடங்களுக்குள் சென்றால் போதும் என்றிருந்த நிலை மாறி தற்பொழுது முதல் 2 இடங்களுக்குள் செல்ல கடும போட்டி இருக்கும். எது எப்படியோ இவர்கள் நம் பொன்னான நேரத்தை திருடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் தோற்காமல் இருக்க முடியும்.

Blog note on IPL Season 4 - Qulaifier 1, Qualifier 2, Eliminator, Finals | Valaiamani Blogspot 


ரும் ஞாயிறு மாலை டிஸ்கவரி புக் பேலஸில் அய்யப்ப மாதவனின் 'தானாய் நிரம்பும் கிணற்றடி நூல் விமர்சனக் கூட்டம் இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ்:



Ayyappa Madhavan's 'Thaanai nirambum kinatradi' Sirukathai nool vimarsana koottam | Aganazigai

ண்பன் முதலாளியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவன், சனி, ஞாயிறுகளில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று சேவை செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பவன். ஒருநாள் அல்ல இருநாள் அல்ல தொடர்ச்சியாக கடந்த 2.5 வருடஙகளாக ஒவ்வொரு வார இறுதியிலும் சுமார் 60 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறான். நாங்கள் மற்ற நண்பர்கள் சினிமா, பீச் என கிளம்பி செல்லும் வேளையில் இவன் பிறர்க்கு தொண்டாற்றும் திசையில் பயணிப்பது.. உண்மையிலேயே நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.



இதற்காக சமீபத்தில் முதலாளிக்கு விருதும் கிடைத்திருக்கிறது.  வாழ்த்துக்கள் முதலாளி!  முதலாளியை தொடர்பு கொள்ள : mudalali@gmail.com


Mudalai | Dreams Alive | Working for a Noble Cause

மீபத்தில் நான் டிவிட்டியவை சில :

செய்தி : அழகிரிக்கு அளித்த பாதுகாப்பு வாபஸ் - அண்ணன் அழகிரிக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அச்சமின்றி நிம்மதியாக வாழ முடியும்? 



கையில் தாமரை பூவுடன் பாஜக வேட்பாளர் வீடு வீடாக ஓட்டு சேகரித்ததை பார்த்தேன். அதுக்கு டப்பர்வேர் டப்பா எடுத்துட்டு போனாலாவது ரெண்டு விக்கும்

செய்தி : சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் உண்ணாவிரதம் # இது ஏப்ரல் ஃபூல் நியூஸாதான் இருக்கும். எப்பவும் அங்க அடிதடிதான நடக்கும்?

தான் அடித்தால் வேட்பாளர் மஹாராஜா ஆகிவிடுவார் என மக்களாட்சிக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிக்கும் கேப்டன் மேல் இந்திய இறையாண்மை சட்டம் பாயாதா?


தங்கள் கட்சி மீட்டிங்கிற்கு 4 கேமராக்களை அனுப்பினால் கேப்டன் மீட்டிங்கிற்கு 40 கேமராக்களை அனுப்புகின்றனர் ஆளுங்கட்சியினர். 


ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடிக்கிறார் விஜயகாந்த் -திருமா # இருந்த 50 பேரை 1000ம்னு சொல்றீங்களே திட்டுறீங்களா பாராட்டுறீங்களா?

இறுதி போட்டியினை பிரதிபா பாட்டீல், ராஜபக்ஷே பார்க்கின்றனர் # ஒண்ணு 'சைலண்ட்' பொம்மை இன்னொன்னு 'சைனா' பொம்மை

என் கணவருக்கு மக்களிடத்தில் நடிக்கத் தெரியாது என போன வாரம்தான் சொன்னார் அண்ணியார் # அடிக்கத் தான் தெரியும் என சொல்லவே இல்லையேம்மா..

கூகுளில் பூனம் பாண்டேவின் எந்த ஸ்டில்லை தேடிப் பார்த்தாலும் ஏற்கனவே இந்தியா கோப்பையை 90% ஜெயித்துவிட்டதாக தெரிகிறது.



Valaimanai Blogspot | Feelings | Mixted Blog Notes By Sukumar Swaminathan


Monday, April 4, 2011

தொலையும் சொர்க்கம் - சென்னை திரு.வி.க பூங்கா








கையில்இருந்த சொர்க்கம் நழுவிப் போனாற் போல் இருக்கிறது திரு.வி.க பூங்காவை மூடியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சுமார் 8 ஏக்கர் அளவிலான இந்த பூங்காவில் பாதியை எடுத்துக்கொள்ளப்போகிறார்களாம். கையில் புத்தககத்துடன் உள்ளே நுழைந்தால் அந்த இயற்கை சூழலில் கிடைக்கும் வாசிப்பனுவமே தனி. கணிணி எனக்களித்து அருள் புரிய ஆரம்பித்த தொப்பை சதவிகிதத்தை கணிசமாக குறைத்த பெருமை இந்த பூங்காவிற்கு உண்டு.




காதில் பாட்டுடன் வியர்க்க விறுவிறுக்க இங்கு நடக்கும் மனிதர்களை கண்டாலே ஒரு தனி சுறுசுறுப்பு வந்துவிடும்.  வளைந்து செல்லும் வட்ட பாதையில் அடிக்கடி பார்க்கும் ஜாக்கிங் முகங்கள், மரங்களின் அடியில் விழுதாய் மடியில் விழுந்து கிடக்கும் காதலர்கள், ஐந்து ரூபாய்க்கு அட்டகாசமான டீ கொடுக்கும் அந்த நண்பர், சுண்டல் வேணுமாய்யா என ஏக்கத்துடன் கேட்கும் அந்த 70 வயதை தாண்டிய பாட்டி, குறுகுறுப்புடன் நடக்கும் பள்ளி கூட சிறுமிகள், அவர்களை பின்தொடர்ந்து சில சமயம் சுள்ளான்கள், அம்மாக்களின் கண்காணிப்பில் விளையாடி மகிழும் சுட்டி பாப்பாக்கள், ஷட்டில் விளையாடி களைத்து மகிழும் அங்கிள்கள், சிட்டியில் செட்டிலாகி போன சோழ சேர பாண்டிய வாரிசுகளுக்கு ஊரை நினைவூட்டும் சென்னை சங்கமம் என அனைத்து காட்சிகளும் இங்கு ஒரே நாளில் நினைவுக்குறிப்புகளாய் நின்று போய் விட்டது.





இனி சில வருடங்கள் கழித்து இங்கே ரயில் நிலையம் வந்து விடும். அது போக மிச்ச இடத்தில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்திருந்தாலும், அது இனிப்பை எடுத்துக்கொண்ட கரும்புச் சக்கையாகவே வெளிவரும். எத்தனை மரங்கள்.. எத்தனை செடிகள்.. நகரத்தில் வேறு எங்கு போவது இவ்வளவு பெரிய பூங்காவிற்கு..? வாய்ப்பே இல்லை...!!

 பைக்குகளும் கார்களும் தவணைகளில் சுலபமாக கிடைப்பதினால் சென்னை நெடுஞ்சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் இந்த ரயில் திட்டத்திற்காக இந்த தியாகத்தை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.


ஆனாலும் இந்த திட்டத்திற்காக செலவிடப்படும் தொகையை விட.. இந்த பூங்கா கொடுத்திருக்கும் விலை பல மடங்கு அதிகமானது. அது வெறும் பணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. புத்துணர்ச்சி, ஆரோக்யம், விளையாட்டு,  காதல், அமைதி என பலரது தேடல்களுக்கான விடைகள் கிடைக்கப்பெறும் மனம் சம்பந்தப்பட்டது.



இனி சில வருடங்களில் காட்சிகள் மாறும். இங்கு டி.நகர் போல, பாரிஸ் முனை போல எக்மோர் போல மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். சில நூறு பேரின் தேவைகளை தினம் தீர்த்து வைத்த இந்த பூங்கா பல ஆயிரம் பேரின் பயண தேவைகளை பூர்த்தி செய்யும் அவசியமான ரயில் நிலையமாக அப்போது மாறியிருக்கும்.

அன்றைய நாட்களில் ஒருநாள் கையில் புத்தகத்துடன் நான் பயணிக்கும் அந்த ரயிலில், பக்கத்தில் அமர்ந்து மாட்டும் அப்பாவி சிறுவனிடம் "அப்போ எல்லாம் இந்த இடம் எப்படி இருக்கும் தெரியுமா ??" என்று மட்டும் நான் போரடிக்காமல் இருக்க வேண்டும்.

_______________________________________________

Image Courtesy : magneos.com   ramyamohan.sulekha.com  acjnewsline.org    thehindu.com

Sunday, April 3, 2011

உலக கோப்பை வெற்றி - விட்டுவிட விரும்பாத தருணம்





இதோ இந்தியா உலகக்கோப்பையினை இரண்டாம் முறையாய் வென்றே விட்டது. வாழ்நாளுக்கும் மறக்க முடியாத இத்தருணத்தை ஒரு டைரிக்குறிப்பின் அளவிற்கேனும் பதிவு செய்து வைத்து விட மனம் ஆசைப்படுவதால் கொண்டாட்டங்கள் முடித்த உடனேயே இந்த பதிவை எழுத உட்கார்ந்துவிட்டேன். ஏனெனில் இந்த நிமிடங்கள் அபூர்வமானவை. உற்சாகமூட்டுபவை. பெருமைப்பட வைப்பவை. இதை அப்படியே விட்டு விட மனதில்லை.

Sachin Tendulkar and Gautam Gambhir walk with the trophy

போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தோனி சொல்லியிருந்தார். இந்த உலகக்கோப்பையை சச்சினுக்காக பெற்றுத்தருவோம் என்று. அதே போல் இன்று சச்சின் கையில் கோப்பையை பார்க்க மகிழ்சசியாக இருக்கிறது. அனைவரும் அவரை தலையின் மேல் தூக்கி வைத்து வலம் வருவது சிலிர்ப்பாக இருக்கிறது.


பங்களாதேஷ் உடனான முதல் போட்டி ஆரம்பித்த அன்று எனது ஃபேஸ்புக் புரஃபைல் புகைப்படத்தை இவ்வாறாக மாற்றினேன். ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது இம்முறை தோனி மீது. ஐபிஎல் வென்றதும், சாம்பியன்ஸ் லீக் வென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முதல் சுற்றுகள் முடிந்த உடன், இருந்த நம்பிக்கைக்கு எல்லாம் அடுத்தடுத்து சோதனையாக அணிகள் வரிந்து கட்டி வரத்துவங்கின. முதலில் ஆஸ்திரேலியா. மூன்று முறை உலக சாம்பியன்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த காலிறுதி போட்டி அதிகபட்சமாக இதயத்துடிப்பை எகிறச்செய்தது. கடைசி ஓவர்களில் யுவராஜும் ரெய்னாவும் தில்லாக விளையாடி வென்றது மறக்க முடியாத அனுபவம். பார்க்கும் நமக்கே படபடப்பாய் இருக்கிறதே.. எப்படி இவர்கள் நின்று விளையாடுகிறார்கள் என நினைத்து நினைத்து ஆச்சர்யப்பட்டேன். என்றைக்கு ஆஸ்திரேலியாவை கோப்பை பெற முடியாமல் தோற்கடித்து அனுப்பினார்களோ அன்றே நாம் முழு வெற்றி பெற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

அடுத்து பாகிஸ்தான் அரையிறுதியில். அந்த ஆட்டத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியா அளவிற்கு படபடப்பை எகிறச்செய்யும் டைட் மேட்சாக இல்லையென்றாலும் மோதும் அணிகளுக்கான மதிப்பு மற்றும் பகை நாடுகள் என்ற பொதுவான பதம் காரணமாக இந்தியா ஜெயிக்கும் வரை படபடப்பாகவே இருந்தது. ஆனால் இந்த போட்டியில் பாக் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக அப்ரிடி பேச்சு உண்மையான ஸ்போர்ட்மேன் ஷிப்பை வெளிப்படுத்தியது.

அடுத்ததாக இலங்கை. இங்கிலாந்தை விக்கெட் லாஸ் இன்றி அவர்கள் அடித்த விதம் கண்டு பயந்து போயிருந்தேன். ஆனால் இன்று தோனியும் அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றிவிட்டனர்.

கோப்பையை வென்று விட்டு அதே எளிமையாக தோனி பேசுகிறார். கோப்பையை பெற்றுக்கொண்டு அணியினரிடம் கொண்டாட கொடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இதைப்போன்ற ஒரு தலைமைப் பண்பு, திறமை, தன்னடக்கம்தான் அவரை மென்மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.

பள்ளிப்பருவத்தில் காம்ப்ளி அழுது கொண்டே உலகக்கோப்பை கனவை தகர்த்து வெளியேறியது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த தீராத ஏக்கத்திற்கு மருந்தாக இன்றைய சச்சின், சேவாக், பஜ்ஜியின் ஆனந்த கண்ணீர்த்துளிகள் அமைந்திருக்கின்றன. நீண்ட நாட்களாக காலில் குததியிருந்த முள் ஒன்று நீங்கினாற் போல் இருக்கிறது.

சிறப்பான இரவு. மகிழ்வாக தூங்கப்போகிறேன். தோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

The champions celebrate with the World Cup trophy

Monday, March 28, 2011

ழ பதிப்பக புத்தக வெளியீட்டு விழா போட்டோஸ் + கமெண்ட்ஸ்





நேற்று ழ பதிப்பகத்தின் புதிய 4 புத்தகங்கள் வெளியிடும் விழா சிறப்பாக நடைபெற்றது.  நான்கு புத்தகங்களுக்குமான முகப்பு அட்டைகளை நான் வடிவமைத்து இருந்ததனால் எனக்கு இது மிக மகிழ்வான விழாவாக இருந்தது.
மாலை 5.30 மணிக்கே பதிவர்கள் வரத்துவங்கி இருந்தனர். 6.30 மணிக்கெல்லாம் ஹால் ஃபுல்லாகி விழா துவங்கியது.

வழக்கம் போல சுரேகா நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார். வழக்கத்திற்கு மாறாக மணிஜி கமெண்ட் ஏதும் அடிக்காமல் அமைதியாக இருந்தார்.

கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், ஓ.ஆர்.பி.ராஜா,  தண்டோரா மணிஜி, பலாபட்டறை ஷங்கர், சுரேகா, கார்க்கி, லக்கி லுக் யுவ கிருஷ்ணா, அதிஷா,  உண்மைத்தமிழன், விந்தை மனிதன் ராஜாராம், குகன், அகநாழிகை பொன் வாசுதேவன், பிலாசபி பிரபாகரன், வேர்கள் பாண்டியன், ஆயிரத்தில் ஒருவன் மணி, சர்க்கஸ் சிங்கம், பார்வையாளன், அஞ்சா சிங்கம், மெட்ராஸ் பவன் சிவக்குமார் உள்ளிட்ட பல பதிவர்கள் வந்திருந்தார்கள். ( பலரது பெயர்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)  நான்கு புத்தகங்களும் மேம்பட்ட தரத்தில் இருக்கின்றன. பெருமுயற்சி செய்திருக்கும் ழ பதிப்பகத்தாருக்கும், எழுத்தாளர்களுக்கும சிறப்பான வாழ்த்துக்கள்.


 மேலும் என்னென்ன நடந்தது என உங்களுக்கு பிளாஷ்பேக்கில் சொல்கிறேன் வாருங்கள்....


விழா துவங்கும் முன்னர் :- ழ பதிப்பக தூண்கள் பதிப்பாளர்கள் கே.ஆர்.பி.செந்தில் மற்றும் ஓ.ஆர்.பி.ராஜா
(தூண் போலவே ரெண்டு சைட்ல நிக்கிறாங்க பாருங்க)


வளைஞ்சு வளைஞ்சு ஒருவர் போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்.. யார்ரா அது நமக்கு போட்டியா என விசாரித்தால் அவர் பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி(இடமிருந்து மூன்றாவதாக இருப்பவர்). அடிக்கடி சேட்டிலும், மெயிலிலும், போனிலும் தொடர்பு கொள்ளும் அவரை முதல் முறையாக நேரில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.



கைகட்டிக்கொண்டு இருப்பவர் பதிவர் காவேரி கணேஷ்
(நிஜமாகவே சிறியோர் பெரியோர் என யாருடனும் மிக மரியாதையாக பழகுபவர்)

ஒரே ஆங்கிளில் போஸ் கொடுக்கும் இருவர் :- பதிவர்கள் லக்கி லுக் என்கிற யுவகிருஷ்ணா (பவுடர் கொஞ்சம் சாஸ்தியாயிடுச்சோ பாஸ்?) மற்றும் அதிஷா


வீட்டில் வைத்து அனுப்பிய விபூதியுடன் பயபக்தியுடன் உள்ளே நுழைகிறார் எழுத்தாளர் கேபிள் சங்கர். 'ஹலோ துபாயா பிரதர் மார்க் இருக்காரா?' என்பது போல் போன் பேசுவது பதிவர் தண்டோரா மணிஜி




வரவேற்புரை ஓ.ஆர்.பி.ராஜா



தொப்பி போட்டுக்கொண்டு கன்னத்தில் மருவுடன் பதிவர் உண்மைத்தமிழன்.
(மாறுவேஷத்துல வந்தா எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா..?)


ஆனாலும் அநியாயத்துக்கு யூத்தாக இருக்காருல்ல?
(இல்லைன்னு சொன்னா போன் போட்டு திட்டுவாரு..)



என் உலகநாதன் எழுதிய 'சாமானியனின் கதை' நூலை வெளியிடுகிறார் கட்டிடவியல் வல்லுநர் ராஜமாணிக்கம்.. பெற்றுக்கொள்கிறார் பதிவர் தண்டோரா மணிஜி


என்.உலகநாதன் எழுதிய 'வீணையடி நீ எனக்கு' நூலை வெளியிடுகிறார் வழக்கறிஞர் சாமிதுரை.. பெற்றுக்கொள்கிறார் பதிவர் யுவகிருஷ்ணா


கே.ஆர்.பி.செந்தில் எழுதிய 'பணம்' நூலை வெளியிடுகிறார் முத்து... பெற்றுக்கொள்கிறார் பதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன்.. 

'கொத்து பரோட்டா' நூலை வெளியிடுகிறார் பேராண்மை, மாப்பிள்ளை திரைப்பட ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்.. பெற்றுக்கொள்கிறார் கவிஞர் நேசமித்ரன் ஃபிரம் நைஜீரியா..


உரையாற்றுகிறார் ராஜமாணிக்கம்




உரையாற்றுகிறார் சாமிதுரை



எப்பவும் கெட்டப் சேஞ்சில் வரும் பதிவர் பலாபட்டறை ஷங்கர் இம்முறை பழைய கெட்டப்பிலேயே வந்திருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.

மறுநாள் எக்ஸாமிற்கு படிப்பதை போல சீரியஸாக படிப்பவர் பதிவர் விந்தை மனிதன் ராஜாராம்... 







சத்தியமா இனி ஏதாவது ஃபங்ஷன் என வந்தால் கார்க்கி பக்கத்தில் மட்டும் நிற்கக்கூடாது என முடிவெடுத்து விட்டேன். மனிதர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஜோக்குளை அள்ளித்தெளிக்கிறார். சிரித்து மாளவில்லை.











ஓ.ஆர்.பி.ராஜாவுடன் பதிப்பாளர் குகன்


பதிவர்கள் மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிராபாகரன் ( நேயர் விருப்பத்தின்படி விரைவில் பதிவுலகிற்கு திரும்ப கோரிக்கை வைக்கப்படுகிறது)  மற்றும் தொழிலதிபர் எல்டெக் ஜெயவேல்.



நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பதிவர் சுரேகா.. அவருடன் கல்யாணம் ஆனதிலிருந்து பதிவுலகில் காணாமல் போன பதிவர் ஏதோ டாட் காம் பிரதாபன் (பாஸ்.. உங்களுக்காகதான் கிரைண்டர் மிக்ஸி எல்லாம் தராங்க.. இனிமே வேலை அவ்வளவா இருக்காது.. கொஞ்சம் பதிவும் எழுதுங்க)




தலை சீவிட்டு வந்தா போட்டோ எடுக்கிறேன்னு பதிவு போட்டு இருந்தீங்களே என அருகே வந்து பேசினார் பதிவர்கள் வேர்கள் பாண்டியன்.  பரவாயில்லை நம்ம பதிவையும் படிக்கிற ஒரு நல்லவர் இருக்கிறார் என போட்டோ எடுத்துக் கொண்டேன். நம்ம பிளாக்கையும் படிக்கிறாங்கன்னு சொன்னா தங்கமணி நம்பவே மாட்டேங்குது அதுக்குதான். ஹி...ஹி.
நன்றி.. மீண்டும் வருக...!!!