Wednesday, October 26, 2011

ஏழாம் அறிவு - மன்மதன் அம்பு - ஜெயித்தது எது?




சில மாதங்கள் முன்பு ஒரு விழாவில் : 


"மன்மதன் அம்பு படத்துடன் ஆரோக்கியமான போட்டி போடுகிறோம். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த இரண்டு படங்களில் எது அதிகம் ஜெயிக்கிறது பார்த்துவிடுவோம்" - ஏ.ஆர்.முருகதாஸ்


போதி தர்மன் எபிசோட் உள்ளிட்ட, தமிழர்களுக்கு இந்த படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கும் செய்திகளுக்காக பாராட்டப்பட வேண்டி படங்கள் வரிசையில் அமர்கிறது ஏழாம் அறிவு!

போதி தர்மன் என்றால் யார் என்பது தமிழகத்தில் அனேகமாய் யாருக்குமே தெரியாத நிலையில், நம்மிடையே மறக்கடிக்கப்பட்ட, தேசம் கடந்து இன்றும் பெருமையாய் நினைவு கூறப்படும் ஒரு தமிழனின் சரித்திரத்தை தூசு தட்டி எடுத்து லேட்டஸ்ட் கேமராக்களினாலும், டிஜிட்டல் ஒலிகளினாலும் செல்லுலாய்டில் செதுக்கி, பயங்கரமாக மார்க்கெட்டிங் செய்து, ஒரு நல்ல தீபாவளி நாளாய் பார்த்து அமளி துமளியாய் சில லட்சம் தமிழர்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்.  இவ்வகையில் போதி தர்மன் சரித்திரத்தை புத்தகமாக அச்சடித்திருந்தால் சில நூறு பிரதிகள் மட்டுமே போணியாகி இருக்கும். அதனால் சொல்லப்பட்ட செய்திக்கு ஏ.ஆர்.முருகதாசுசுக்கு நன்றிகள்.

முதல் அரை மணி நேரம் மட்டும் மிஸ் செய்துவிடாதீர்கள். கண்ணுக்குளிர்ச்சியான சைனா எபிஸோட். போதி தர்மனின் வரலாறை சுருக்கமாகமாகவும் கம்பீரமாகவும் பதிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதன் பிறகு தற்காலத்திற்கு திரும்புகிறது கதை. போதி தர்மரின் மறக்கடிக்கப்பட்ட வரலாறை போலவே நம்மிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட நமது பாரம்பரியம், நமது வீரம், மருத்துவம் உள்ளிட்ட நமது பண்டைய பெருமைமிகு மகத்துவங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை, மிரட்டும் வில்லன், அழகிய கதாநாயகி, அட்டகாசமான ஒளிப்பதிவு, விஞ்ஞானம் அஞ்ஞானம் எல்லாம் கலந்து சொல்வதே ஏழாம் அறிவு.

இந்த வாரம் முழுமைக்கும் ஏற்கனவே டிக்கெட் ஃபுல் ஆகிவிட்டது. டிக்கெட் எடுத்தவரில் நீங்களும் ஒருவர் என்றால், இத்துடன் எஸ் ஆகிவிடுங்கள். இல்ல பரவாயில்ல நீ சொல்லு என்பவர்கள் மேலே தொடரலாம்.

தையின் கரு என்னவென்றால்,

அந்த காலத்தில் தமிழர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும் இருந்தார்கள். 'யம்மா யம்மா', 'ரிங்கா ரிங்கா' போன்ற மொக்கையான பாட்டுகளை தேவையற்ற இடங்களில் திணித்தாலோ, படம் நெடுகிலும் ஹிப்னாடிசம் செய்தே  சாகடிக்கும் காட்சிகளை வைத்து இம்சித்தாலோ, அந்த கால தமிழர்களாக இருந்தால், நெட்டில் 250  ரூவா கொடுத்து டிக்கெட் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று தன்மானத்தோடு வெளிநடப்பு செய்திருப்பார்கள்.

ஆனா நேத்து படம் பார்த்த நான் உள்ளிட்ட தற்போதைய தமிழர்கள் காசு போகுதே என்கிற ஒரே காரணத்துக்காக முழு படத்தையும் மாடு மாதிரி உட்கார்ந்து பார்த்தோம்.

ஒருவேளை இயக்குனர், இக்கால தமிழர்கள் நமது பாரம்பரிய வீரத்தை மறந்துவிட்டோம் என்பதை பிராக்டிக்கலாக உணர்த்த விரும்பினாரோ என்னவோ...?

போதி தர்மர் போன்ற நாம் அறிந்திராத ஆச்சரியமான போர்ஷனை சொல்லி,  எடுத்துக்கொண்ட அருமையான கதைக்களனிற்கு ஈடாக, கஜினி, ரமணா போன்ற சுவாரஸ்யமான பிரசன்டேஷன் 7ஆம் அறிவு படத்தில் அமைக்கப்படவில்லை என்பதை மிகுந்த ஏமாற்றத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. காதல் காட்சிகளிலும், நகைச்சுவை காட்சிகளிலும் கஜினி தந்த ஏ.ஆர்.முருகதாஸா இது...? அவ்வளவு கற்பனை வறட்சியான காட்சிகள்.

பாடல்கள் படத்தை விட்டு தனியே விலகி நிற்கிறது. முன் அந்தி, எல்லேலம்மா பாடல்களில் ஸ்ருதி கண்ணிற்கு குளுகுளுவென இருப்பதால் ஏதோ மன்னித்து விடலாம்.  படத்தின் அடுத்த சோதனை ஸ்ருதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நீ......ள தமிழ் வசனங்கள். டப்பிங் ஆவது கொடுத்திருக்கலாம்.

அழகிய போதி தர்மா எபிசோடுக்கு திருஷ்டி பொட்டு அந்த டாக்குமென்டரி போன்ற வாய்ஸ் ஓவர். முருகதாஸ் அந்த போர்ஷனையும் கதையாகவே அமைக்க முடியாதவரா என்ன?

மிரட்டல் வில்லன் ஆரம்பத்தில் அசத்தினாலும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக அவர் ஹிப்னாடிஸத்தில் (நம்மளையும்) சாவடிப்பது அலுப்பை தருகிறது.

ஆனால் இதுபோன்ற குறைகள் ஒருபுறம் இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் ஏழாம் அறிவு.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மன்மதன் அம்பு படத்துடன் போட்டியிடுகிறோம் என முன்னர் ஒரு விழாவில் உற்சாகமாய் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் என்ன இருந்தாலும் உலக நாயகனோடு சவால் விட்டு யாரும் ஜெயிக்க முடியாது என்பது நிருபணமாகி இருக்கிறது. 


ஆம்! ஏழாம் அறிவு. மன்மதன் அம்பு அளவிற்கெல்லாம் மொக்கை இல்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!
7aam arivu 7am arivu 7aam arivvu blog review by tamil blogger sukumar swaminathan
7th sense 7aam aarivu vimarsanam review
A.R.Murugadoss, Harris Jayaraj, Surya. Shruthi hassan
7ஆம் அறிவு 7ம் அறிவு ஏழாம் அறிவு பதிவு பதிவர்கள் விமர்சனம் வலைப்பூ வலைமனை சுகுமார் சுவாமிநாதன் 




Friday, October 21, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 21 10 11





ள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் எல்லா கட்சிக் கொடிகளையும் பார்த்து கண் பூத்து போய்விட்ட நிலையில் கடந்த வாரம் பளிச்சென ஒரு மினி வெள்ளைக்கொடி பேரணியை நெல்சன் மாணிக்கம் சிக்னலில் பார்த்தேன். 

(என் படங்களின் சோதனையை தாங்க) 'உன்னால் முடியும்'  என தமிழக மக்களுக்கு தலைவன் சொல்லும் வாசகம் பொறிக்கப்பட்டு, என் படங்கள் இங்கிருந்துதான் எடுக்கப்படுகின்றன என ஆந்திரா நோக்கி அவர் கைகாட்டும் சிறப்புமிக்க கொடி அது.

மற்ற கட்சிக்காரர்கள் பளீர் வேட்டி சட்டை போட்டுக் கொண்டு உலா வருவதையே பார்த்து பழகிவிட்ட நிலையில் இவர்கள் அழுக்கு ஜீன்ஸ், கட்டம் போட்ட காட்டன் சட்டையுடன் பைக்கில் உலா வந்ததை காண புதியதாக இருந்தது.

அது சரி.. பொட்டு பொடிசு கட்சியெல்லாம் உள்ளாட்சித் தேர்தல்ல தனித்தனியா பாலம் கட்டும்போது அணில் மட்டும் ஏன் வெறும் கல் எடுத்து தந்துக்கிட்டு இருக்காரு?








நீல நிறத்தில் சதுர வடிவிலான ஒரு தள்ளுவண்டி. மேல் உள்ள கதவை திறந்து அதில் எலுமிச்சை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அண்ணா யூனிவர்சிட்டியை சுற்றிய இடங்கள், ஏர்போர்ட் அருகில் என சென்னையின் பல சாலைகளின் அங்கம் இந்த இன்ஸ்டன்ட் லெமன் ஜுஸ் கடைகள்.

5 ரூபாய்க்கு சுர்ரென்ற நாக்கில் உரைக்கும் ஜுஸ் தருவார்கள். முன்பெல்லாம் குடித்திருந்தாலும் இப்போதெல்லாம் கலக்கப்படும் தண்ணீரின் சுகாதாரம் குறித்த பயம் காரணமாக தவிர்த்து வந்தேன்.

தற்போது அந்த தள்ளுவண்டிகளில் ஆச்சர்யம் கலந்த அப்டேட் ஆக சோடா வைத்து,  கண்முன்னே சீல் பிரித்து லெமன் சோடா தருகிறார்கள். சமீபத்தில் எம்.எம்.டி.ஏ காலனியில் கண்ணில் பட்ட ஒரு தள்ளு கடையில் குடித்துக்கொண்டே "இது நல்ல ஐடியாவா இருக்கே" என விசாரித்தபோது, "ஒருநாளைக்கு 50, 60 பாட்டில் போகுது சார்.. அந்த பாட்டில்ல இருக்கிற டேட் எடுத்து பாருங்க" என்றார். பார்த்தால் முந்தைய தின தேதி இருந்தது.

"ஸ்டாக் வண்டி வர்ற வழியிலயே மடக்கி எடுத்துட்டு வர்றேன் சார்" என மேலும் ஆச்சர்யமளித்தார்.



மெட்ரோ ரயிலோ மோனோ ரயிலோ ஏதோ ஒரு சிக்கு புக்கு சென்னையில் பறக்கப்போகும் நாள் வரை மனுஷன் டிராபிக்ல நொந்து நூடுல்ஸ் ஆயிடுவான் போல.
ஆனா நான் கேக்குறேன்.. இந்த டிராபிக்ல கொஞ்சம் கூட நிக்காம சர்ர்ருன்னு போயிடுற கலைஞர், ஜெயலலிதா இவங்க பெயரை கல்வெட்டுல போடும்போது, சிட்டி முன்னேற்றத்துக்காக டிராபிக் ஜாம் அவஸ்தையை பொறுத்துக்குற மக்கள் பெயரை எல்லாம் ஏன் போடக்கூடாது?


ரூம்ல நெறையா கொசு இருந்தா ஆக்டிவ் மோட் என்கிற விளம்பரத்தை வெறியோடு தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த மெஷினை வட்டமடித்தபடியே கொசு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறது.  எனக்கு தெரிந்து மனிதனுக்கு நிகராக டெக்னாலஜியில் தொடர்ந்து அப்டேட் ஆகி கொண்டிருக்கும் ஒரே ஜீவன் கொசு தான். சாக்ஸ்க்குள்ள எல்லாம் புகுந்து கடிக்குதுப்பா...!!

Wednesday, October 19, 2011

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை





திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் அதை
சட்டவிரோதமான வழிகளில் தேடுபவர்களின் நிலையை பலரது வாழ்வில் நடந்த நிஜமான கதைகளின் வாயிலாக கூறுகிறது 'ழ' பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'பணம்'.



ஆனால் நம் கில்லாடி ஆட்கள் மலாய், சீன, ஆங்கில மொழிகளை திறம்படக்கற்றுக்கொண்டு சிங்கப்பூரியன் என்று சொல்லிக்கொண்டு கம்பெனிகளில் வேலைக்குப்போய்விடுவார்கள். இப்படிப்போனவர்களில் பாதிப்பேர் தமிழகத்தில் கோடிசுவரர்கள், நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். மீதிப்பேர் குட்டிச்சுவர் ஆனார்கள்

பதிவுலகில் தொடராக வெளிவந்து பட்டையை கிளப்பிய பதிவர் எழுத்தாளர் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' மேலும் மெருகேற்றப்பட்டு புத்தக வடிவில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.

நமது பெண்களை வெளிநாட்டு பணிப்பெண் வேலைக்கு யாரும் அனுப்பவேண்டாம் என்பதற்கே இதை எழுதவேண்டி இருக்கிறது. அங்கு பணிப்பெண்கள் பற்றிய கதைகளை நான் மேலோட்டமாக மட்டுமே சொல்லியிருக்கிறேன். உங்கள் நண்பர்கள் அங்கிருந்தால் அவர்களிடம் கேளுங்கள் நிறைய கோபங்களும், சோகங்களும் கிடைக்கும்.

பதினெட்டு வருடங்கள் கண்டு, கேட்டு, உணர்ந்தறிந்த அனுபவங்களை நூல் ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'நான்' என தாமே சொல்வதாய் அமைத்திருக்கும் உத்தியால் நூல் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாய் இருக்கிறது. நூலுக்கும் வாசகருக்குமான அன்னியோன்யம் இதனால்  அதிகரிக்கிறது.

இந்திய முதலாளிகள் சம்பளம் கொடுக்கும்போது இந்திய ரூபாயில் கணக்குச் சொல்லி "இந்த மாதிரி சம்பளம் எல்லாம் உனக்கு இந்தியாவில் கிடைக்குமா?" என நக்கலடித்தே கொடுப்பார்கள். நம்ம ஊர் அடிமைகளும் "ஆமாண்ணே" பின்பாட்டு பாடும். ஆனால் பெரும்பாலோருக்கு பிடிக்காமல் பிரச்சினையும் செய்துவிடுவார்கள். முதலாளிகள் மண்டையை உடைத்த சம்பவங்களும் நிறைய உண்டு.

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு சென்று வாழ்க்கையை தொலைத்தவர்களது கதைகளும், அரிதாய் ஜெயித்தவர்களது கதைகளும் புத்தகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஏஜென்ட்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள், பயணங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள், எல்லை தாண்டுதல், சிறைவாசம், மனித விற்பனை, வேலைகளில் துன்புறுதல் என பல உணர்ச்சிபூர்வமான கதைகள். சில நெகிழ வைக்கின்றன. சில அதிர வைக்கின்றன.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் சென்று வேலைபார்ப்பது என்பதை நீங்கள் பொதுவாக ஏழை நாடுகளில் உள்ளவர்கள் பணக்கார நாடுகளுக்கு செல்வதே எனப்புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் பங்களாதேஷ், நேபாள், பூடான், பாகிஸ்தான் மற்றும் மியான்மார் நாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்க்கின்றனர்.


புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராத கன்டன்ட். அதையும்  சீரியஸாகவும், சுவையாகவும் சொல்லிய விதம். புத்தகம் முடிந்த உடன், சட்டென்று முடிந்தது போல உணரவைத்து, இதே அளவிலான இன்னொரு பாகத்தை இணைத்திருக்கலாமோ என வாசகனை எண்ண வைப்பது ஆகியன ஆசிரியர் கே.ஆர்.பி செந்திலின் வெற்றி.

இந்த புத்தகம் என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமானது. காரணம் இதன் முகப்பு அட்டைக்கான டிசைனை நான் வடிவமைத்திருந்தேன். சிறப்பான தரத்தில் படைத்திருக்கும 'ழ' பதிப்பகத்தாருக்கும் இது போன்ற வீரியமிக்க எழுத்தை தந்திருக்கும் ஆசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

______________________________


புத்தக சுட்டி :  http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

பணம்
ஆசிரியர் : கே.ஆர்.பி.செந்தில்
வெளியீடு : ழ பதிப்பகம்
விலை ரூ.90

சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_____________________________


வலைமனை நூலகம் : பிற நூல்கள் குறித்த அனுபவங்கள்
http://valaimanai.blogspot.com/p/blog-page_10.html

Panam K.R.P.Senthil Za padhipagam review by valaimanai sukumar swaminathan

Sunday, October 16, 2011

இன்டி பிளாக்கர் மீட் | வலைமனை





கடந்த ஞாயிறு அன்று சென்னையில் இன்டி பிளாகர் மீட்.  அழைப்பு வந்த உடனேயே ரெஜிஸ்டர் செய்திருந்தாலும் கடைசி நேரம் வரை 'ஏதாவது இங்கிலீஷ்ல கேள்வி கேட்டுடுவாங்களோ ' என்கிற பதட்டத்தால் போகலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருந்தது.

கடைசியில் போகலாம் என முடிவெடுத்து ஹயாட் ரெஜென்சிக்குள் நுழையும்பொழுது மணி 1.45 இருக்கும். வாசலிலேயே நமது பிலாசபி பிராபகரன் எதிர்ப்பட்டார். உள்ளே கீழே பேஸ்மென்டிற்கு சென்று பைக்கை பார்க் செய்கையில் கவுதம் இன்போடெக் ஆர்.வடிவேலனை கண்டேன். பார்க் செய்துவிட்டு மேலே என்ட்ரன்ஸ் வந்தால் அண்ணன் ஜாக்கி சேகர் உள்ளே ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். 



இருநூறுக்கும் அதிகமான பதிவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் நமது தமிழ்ப்பதிவர்கள் சுமார் 30 பேர் சென்றிருந்தோம். பெரும்பாலானோர் கடைசி வரிசையில் அமர்ந்தோம். தல ஜாக்கி சேகரை நிகழ்சசி ஒருங்கிணைக்கும் ஒரு பெண் கூப்பிட்டு கொண்டு போய் முன்னால் உட்கார வைத்தார்.  


நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம், தமிழ்நாடு மின்சார வாரியம் பாரம்பரிய முறைப்படி 10 விநாடி கரண்ட் செய்து அனைவரையும் வரவேற்றது சிறப்பு.


49 செகன்ட்ஸ் ஆஃப் ஃபேம் எனும் பகுதி முதலில் துவங்கியது. வந்திருந்தவர்களில் ரேண்டமாக 75 பதிவர்களுக்கு தங்களை பற்றிய அறிமுகம் செய்து கொள்ள 49 வினாடிகள் வழங்கப்பட்டது. ஜாக்கி சேகர், மணிகண்டன் நான் உள்ளிட்ட சில தமிழ் பதிவர்களுக்கே பேச வாய்ப்பு கிடைத்தது. ஜாக்கி பேசும்பொழுது 'ஜெய் ஜாக்கி' உள்ளிட்ட சங்கத்தின் கோஷங்களை எழுப்பி சரியான மாஸ் காட்டினோம்.



கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கே.ஆர்.பி.செந்தில், கேபிள், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த கார்க்கி மற்றும் வேறு சில பதிவர்கள் ஜாலியாக கமெண்ட் அடித்தபடி இருந்தோம்.

எங்களுடன் இருந்த ஒரு பதிவர் பேசி விட்டு அமர்கையில் எங்களைப் பார்த்து,  "பிளாக்ல எல்லாம் கமெண்ட் போடாதீங்கய்யா.. இங்க மட்டும்..." என கமெண்டிற்கு கமெண்ட் அடித்தார்.

பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களாக டாட்டா கிராண்டே கார் குறித்த அறிமுக உரை தரப்பட்டது.  தொடர்பான விளம்பரங்களையும் ஒளிபரப்பினார்கள்.


'ஹை டீ' இடைவேளை விட்டார்கள். சுமார் 1 மணி நேரம் இருக்கும். வந்திருந்த நம் தமிழ் பதிவர்கள் அனைவரையும் பார்த்து மகிழ்வாக உரையாட முடிந்தது. லக்கி, அதிஷா உடன் சேர்ந்து வேலாயுதம் வெற்றி வாய்ப்பு குறித்தும் சுறா ஏன் சரியாக போகவில்லை என்றும் கார்க்கியுடன் நீயா நானா நடத்திக்கொண்டிருந்தோம். 


நல்ல ஸ்நாக்ஸ் வகைகளை பரிமாறி இருந்தார்கள்.  பாஸ்ட்ரி, சிக்கன் ரோல் தவிர மற்ற எதன் பெயரும் தெரியவில்லை. ஆனால் எல்லாமே சுவையாக இருந்தது. கேபிள் சங்கர்ஜி பாஷையில்.. ம்ம்ம்.. டிவைன்..






இடைவேளை முடிந்து பதிவுகளை குறும்படங்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்களாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் இயக்கமான பிளாக்கலாக்ஸ் குறித்த விரிவுரை நடந்தது. நமது அதிஷாவின் 'மெட்ராஸ் பாஷையில் ஜென் கதைகள்' மேடை நாடகமாக அரங்கேறியிருக்கிறது என தொகுப்பாளர் சொன்னபோது ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது.


அடுத்ததுதான் சுவாரஸ்யமான விளையாட்டு, ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட சார்ட்டில் அரை மணியில் யார் அதிகம் பதிவர்களை சந்தித்து அதில் அதிகமாக கமெண்ட் பெறுகிறார்கள் என்கிற ஜாலியான போட்டி.

'ஐயாம் மொக்கை ஆர் யூ?' என சார்ட்டில் எழுதி முதுகில் கட்டிக்கொண்டார் லக்கி. தமிழ் பதிவர்கள் யாரும் இதை அவ்வளவு ஆர்வமாய் எடுத்துக்கொள்ளவில்லை. எங்களுக்குள்ளேயே எழுதிக்கொண்டிருந்தோம்.

கார்க்கியின் சார்ட்டில் வேலாயுதம் சூப்பர் பிளாப் என யாரோ தமிழ்நாட்டிற்கே தெரிந்த ரகசியத்தை எழுதியிருந்தார்கள்.  எங்காத்தா மேல சத்தியமா நான் 'மங்காத்தா ராக்ஸ்' மட்டும்தான் அவர் சாட்டில் எழுதினேன்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜாக்கி முதுகிலிருந்து சார்ட்டை கழட்டி கையில் வைத்துக்கொண்டார். ஏன் தல என்று கேட்டால், அனானியா வந்து பின்னூட்டம் போட்டுருவாங்கடா என ஜாலியாக சிரித்தார்.


இந்த விளையாட்டின் முடிவில் அதிகமாக கமெண்ட் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நகைச்சுவையான கமெண்ட்டுகளையும் கேட்டு பரிசுகள் கொடுத்தார்கள்.

ஒரு இளம்பெண் பதிவர் எழுந்து, "யார் எழுதியது தெரியலை. என்னோட சார்ட்டில் ரவுடி ஆஃப் பிளாகர் மீட்னு எழுதியிருக்காங்க. யார் எழுதியிருந்தாலும் கையை தூக்குங்க ப்ளீஸ்" என்றார்.  உடனே கடைசி வரிசையில் இருந்த நாங்கள் அனைவரும் கையை தூக்கி நான்தான் நான்தான் என்றோம்.  தொகுப்பாளர், அவருக்கு பரிசு வழங்கியதும் அதை வாங்கிக்கொண்டு எங்களைப் பார்த்து தாங்க்ஸ் என சொல்லி அவர் அமர்ந்தது செம க்யூட்.



இனிமையான சந்திப்பு, கடைசியில் அந்த டிஸ்கஷன் நிகழ்ச்சியில் ஹவ் கேன் வி ஹெல்ப் தமிழ் பிளாக்கர்ஸ் போர்ட் சர்ச்சைக்குரிய விஷயமானது.  அந்த போர்டை திரும்ப பெற வேண்டும் என ஒருங்கிணைப்பாளரிடம் முறையிட, அதற்கு அவர்கள் அந்த அர்த்தத்தில் தாங்கள் சொல்லவில்லை என வருத்தம் தெரிவித்து போர்டை திரும்ப பெற்றனர்.



இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோ பிளாக்கர் Pheno Menon அவர்களுடையது. த்ரூ தி லுக்கிங் கிளாஸ் என்கிற போட்டோ பிளாக் வைத்திருக்கிறார். அத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது.  இந்த புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த அவருக்கு எனது நன்றிகள்.

Thanks - Photo Courtesy : 



indiblogger tatagrande chennai meet hyatt regency valaimanai sukumar swaminathan

Thursday, October 13, 2011

மன்மோகன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? | கூடங்குளம்




மை டியர் மன்மோகன் சிங் சார்,

நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன். அப்பாவி தமிழ் பிளாக்கர். கடந்த வருடம் வரை அணுமின் உற்பத்தி குறித்து நேர்மறையான மனப்பான்மையையே நானும் கொண்டிருந்தேன். ஆனால் ஜப்பானில் நேர்ந்த விபத்திற்கு பிறகு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற டக்கர் நாடுகளே இருக்கும் அணு உலைகளை படிப்படியாக மூடிவிட முடிவெடுத்துவிட்ட நிலையில், கூடங்குளம் மிகவும் பாதுகாப்பானது என சொல்ல நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா..?

இல்ல அவ்ளோ பெரிய அப்பா டக்கரானு கேக்குறேன்.

ஒரு சுனாமி விபத்து, ஒரு பூகம்ப விபத்து விளைவிக்கும் சேதாரங்களை போன்றதல்ல ஒரு அணு உலை விபத்து.  மற்ற விபத்துகளால் நேரும் பாதிப்புகளை காலப்போக்கில் சீரமைத்து மறுபடி வாழ்க்கையை துவங்கலாம். 

ஆனால் அணு கதிர்களோ, செடிகள், விலங்குகள், மனித டி.என்.ஏ, நீர்நிலைகள் என எல்லாவற்றிலும் ஊடுருவி வரும் ஆயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பாதிப்படைந்த பகுதி மற்றும் அதை சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டரில் வரும் பகுதிகளையும் பயன்படுத்த தகுதியற்றவையாக மாறிவிடும்.

டிநகர் ரங்கநாதன் தெருவில் 'பலா சொளை பத்து ரூவா' என கூவுவது போல் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பது ஜப்பான் புகுயுஷிமாவை விட அதி நவீனமான அணு உலை என்றும் மிகுந்த பாதுகாப்பானது என்றும் நீங்களும் உங்கள் விஞ்ஞான பெருமக்களும் தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கிறீர்கள். 



அப்படியே வைத்துக்கொண்டாலும், ஒரு விபத்து ஒரு பேரழிவு நிலை என்று வந்துவிட்டால் நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் மனநிலையுள்ள அதிகாரிகள் அணு விபத்தை எதிர்கொண்டு எத்தகைய மீட்பு / சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


மீண்டும் மீண்டும் இது பாதுகாப்பானது, பயப்பட வேண்டாம், இந்த திட்டதிற்கு ஆதரவு தாருங்கள் என்றே நீங்கள் லெட்டர் எழுதப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கே ஒரே ஒரு கேள்வி...


ஒழுங்காக ஒரு ரோடு போட முடிகிறதா மிஸ்டர் சிங் உங்களால்?  மழை , வெயிலில் இந்திய நாட்டின் எந்த ரோடாவது அதற்கு செலவு செய்யப்பட்டதற்கு ஈடான தரத்துடன் விளங்குகிறதா...?



இருக்கிற எதையுமே ஒழுங்காக செய்யயாத அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்ட நீங்கள்...இந்த அணு உலையை அசால்ட்டாக பாதுகாப்பேன் என்று சொல்வதை பொதுஜனமான நாங்கள் எப்படி நம்ப முடியும் மிஸ்டர் சிங்...?


ரொம்பவும் வேண்டாம்.. ஒரு மூன்று மாதம் நாட்டில் எங்குமே குண்டு வெடிப்பு நிகழாமல் உங்களால் பாதுகாக்க முடியுமா..? சேர்ந்தாற்போல் ஒரு இரண்டு வருடம் ஆவதில்லை.. சீரான இடைவெளியில் ஏதாவது ரயில் கவிழ்கிறது.  விமானம் நொறுங்குகிறது.


இவையெல்லாம் விபத்துகள்.. விபத்துகள் இயற்கையானவை அவற்றை தடுக்க முடியாது என்று நீங்கள் கூறுவீர்களேயானால், அணு உலை விபத்தும் தவிர்க்க முடியாதது தானே...?


இல்லை.. அது நடக்கவே நடக்காது ... பயங்கரமான பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துள்ளோம் என்று மீண்டும் மீண்டும் சொல்வீர்களேயானால், 


மன்னிக்கவும் மிஸ்டர் சிங்.. இயற்கை உங்களை விட மிகப்பெரியது!   இயற்கையின் சீற்றம் இன்னமும் உங்கள் விஞ்ஞானத்தின் எந்த ஒரு தொழில்நுட்பத்திற்குள்ளும் அடங்காதது!





Tuesday, October 11, 2011

வர்ணம் - பார்க்க வேண்டிய படம்




ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பதிவர்களும் அழைக்கப்பட்ட மற்றுமொரு சிறப்புக் காட்சி.  பெரிய ஹீரோக்கள் இல்லாத.. ஏன், சிறிய ஹீரோக்களே கூட இல்லாத,  ஓப்பனிங் இல்லாத ஒரு லோ பட்ஜெட் படம். புதுமுக இயக்குனர்.

ஏதோ சுமாராய் இருந்தால் போதும் என மனதை தயார்படுத்திக்கொண்டு படம் பார்க்கத் துவங்கினால் அட்டகாசமான சப்ஜெக்ட்டை கையில் எடுத்துக்கொண்டு சில பல திருப்பங்களோடு போரடிக்காமல் முதல் பாதியையும் படு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதியையும் கொடுத்து அசர வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எம்.ராஜு.

அழகான காட்சிகளை சொல்லும் ஓவியங்களின் மேல் தெளிக்கும் வண்ணங்களை காண்பித்து ரம்மியமான டைட்டிலுடன் துவங்குகிறது படம்.  எடுத்துக்கொள்ளப்பட்ட கதைக்களனும் அதுதான். இயற்கையில் சமமாக படைக்கப்பட்ட மனித குலத்தின் மேல் தெளிக்கப்படும் 'வர்ணம்'  குறித்தது தான் கதைக்கருவும். இரட்டைக்குவளை முறை, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீதான அடக்குமுறை, அவர்களை அவமானப்படுத்துதல் முதலிய தீண்டாமை கொடுமைகளை காதல், மோதல், மர்மம் கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

இயல்பான திருவிழா காட்சிகளை கொண்ட பாடல், முனியின் கதை சொல்லும் பாடல் ஆகியன சிறப்பாக வந்திருக்கின்றன.   பின்னணி இசையும் குறிப்பிடும்படியாய் அமைந்திருப்பது படத்திற்கு பெரிய பலம்.  தங்கமாக நடித்திருக்கும் அந்த இளம்பெண், மோனிகா, நந்தா, கதை சொல்லும் இளைஞன், சம்பத் என பாத்திரங்கள் அனைவரது நடிப்பும் அருமையாக இருக்கிறது.

மோனிகாவை முனி பிடித்து விட அனைவரும் பயத்தில் உறையும்பொழுது, மணி மட்டும் அதன் பின்னணி அறிந்தவனாய் முறைத்துப்பார்ப்பது, தங்கத்துடன் பேசிவிட்டு வரும் செல்லத்தை துரத்தி துரத்தி விசாரிப்பது, அருவியில் படுத்தபடி கதை சொல்வது என பல காட்சிகள் கவிதையாய் ரசிக்க வைக்கிறது.

நன்றாக படித்த பணக்கார வீட்டு கதநாயகி லூசு பெண் போல விறைப்பாய் சுற்றும் கதாநாயகன் மேல் விழுந்து விழுந்து லவ் பண்ணும் உருப்படாத சினிமாக்களை எடுத்து வைத்துக்கொண்டு 'திருட்டு சி.டில பார்க்காதீங்க... தியேட்டர்ல வந்து படம் பாருங்க...'  என மைக்கை கடிக்கும் மனசாட்சியே இல்லாத இயக்கு'நார்'கள் மலிந்து வரும் காலத்தில், அரிதாய் அவ்வப்போது பூக்கும் குறிஞ்சிப் பூக்களில் ஒருவராய் பூத்திருக்கிறார் எஸ்.எம்.ராஜு.

வர்ணம் - சிறப்பான படைப்பு -  பார்க்க வேண்டிய படம்!

Varnam varnamm varnam movie review valaimanai vimarsanam
monica monika nandha s.m.raju 
review by sukumar swaminathan valaimanai


Monday, October 10, 2011

சதுரங்கம் - பிளாக்கர்ஸ் ஷோ





பதிவர் அண்ணன் உண்மைத்தமிழன் மீண்டும் ஒரு பதிவர்களுக்கான சிறப்புக்காட்சிக்கு அழைத்திருந்தார்.  கடந்த முறை கரு.பழனியப்பன் அவரது மந்திரப்புன்னகை. இம்முறை சதுரங்கம்.

முதல் பாதியில் முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் தாமதமாக நான் சென்றதால் முழுமையான திரை விமர்சனம் எழுத முடியவில்லை.  படம் பல வருடங்கள் தாமதமாக வெளிவந்திருக்கிறது. ஆனாலும் பார்ப்பதற்கு புத்தம் புதிய காப்பியாக இருந்தது. எல்லாம் டிஜிட்டல் மாயம்.

நேர்மையான பத்திரிக்கை ரிப்போர்ட்டரால் பாதிக்கப்படும் ஒருவர் அவரது காதலியை கடத்தி வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறார். கடைசியில் எப்படி அந்த ரிப்போர்ட்டர் தனது காதலியை மீட்டார் என்பதே சதுரங்கம்.

அழுத முகத்துடன் இருக்கும் சோனியாவையும் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அழகாக காண்பித்திருக்கிறார்கள்.  கரு.பழனியப்பனின் வழக்கமான படங்கள் போலவே வசனங்கள் ஷார்ப். ஸ்ரீகாந்த்திற்கு பதில் மந்திரப்புன்னகை போல் அவரே நடித்திருக்கலாமோ என்று யோசித்தேன்.
மிதமான வேகத்தில் போரடிக்காமல் செல்லும் படத்திற்கு கிளைமேக்ஸ் பெரிய டிரா பேக்.

பாதி படமே பார்த்ததால் இதற்கு மேல் விமர்சித்தால் அது தர்மமாகாது.

படம் முடிந்து இயக்குனர் கரு.பழனியப்பனுடன் எங்களது அரட்டை  சுவாரஸ்யமாக இருந்தது. ஜாக்கி அவரது படங்கள் குறித்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். அதையெல்லாம் புன்னகையுடன் பழனியப்பன் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு இயக்குனராக தான் யோசித்த கிளைமேக்ஸை எடுக்க முடியாமல் போனதன் சிரமத்தை அவர் விவரித்த போது படத்தின் சொதப்பல் கிளைமேக்ஸுக்கான காரணம் புரிந்தது.


பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த சிறப்பு காட்சிக்கு பல பதிவர்கள், பேஸ்புக் நண்பர்கள் யாவரும் வந்திருந்தனர். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன், கே.ஆர்.பி.செந்தில், காவேரி கணேஷ், மயில்ராவணன், மணிஜி, பட்டர்பிளை சூர்யா, அதிஷா, யுவகிருஷ்ணா, தேனம்மை லஷ்மணன் மேடம் அதில் சிலர்.
_____


இதே போல் இன்று மாலை அண்ணன் உண்மைத்தமிழன் மாலை 6 மணிக்கு வர்ணம் சிறப்பு காட்சிக்கு அழைத்திருக்கிறார்.   ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு உள்ளே இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் இந்த காட்சி திரையிடப்படுகிறது. ஆகவே வர இயலும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

விவரங்களுக்கு : http://truetamilans.blogspot.com/2011/10/blog-post_08.html


Sathurangam sadhurangam sadurangam sonia agarwal srikanth karu palaniappan valaiamanai movie review


Thursday, September 29, 2011

யானி | வலைமனை நூல் பரிந்துரை




அந்த இசையை ரெய்கி வகுப்புகளில் கேட்டிருக்கிறேன். கடல் அலைகள் போல பரிதலிக்கும் நம் மன ஓட்டத்தை அப்படியே படிப்படியாக குறைத்து ஒரு ஏரி போன்ற அமைதி நிலைக்கு மனதை கொண்டு வரும் வல்லமை படைத்தது. உட்கார்ந்த இடத்திலேயே கண்மூடினால் நம்மை பிரபஞ்சத்தின் கடைக்கோடியில் மிதக்க வைக்கும் வீரியம் கொண்ட இசை அது.  வெகு நாட்கள் கழித்துதான் அந்த இசை யானி உருவாக்கிய 'ஒன் மேன்ஸ் ட்ரீம்' என தெரிய வந்தது.

அதே போல் கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக வீணாய்ப்போன ஒரு நெட்வொர்க் மார்கெட்டிங் மீட்டிங் நிகழ்ச்சிகளில் மேடை ஏறும்பொழுதெல்லாம் அந்த கம்பீரமான இசையை ஸ்பீக்கரில் அதிர விடுவார்கள். யாராக இருந்தாலும் நாடி நரம்பெல்லாம் உடனடியாக உற்சாகம் ஏறி மனதை குதூகலமான மனநிலைக்கு மாற்றிவிடும் இசை அது.  அதுவும் யானி இசையமைத்தது தான். பெயர் 'சந்தோரிணி'.

இவ்வாறான பல இசைகள், இசைத்தொகுப்புகளை படைத்த இசை மேதை யானி. கிரீஸில் பிறந்து துவக்கத்தில் பாக்ஸிங், புட்பால் , நீச்சல் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கி எதிலும் தன் ஆற்றலுக்கான முழு திருப்தி பெறப்படாமல் இசை மேதையாய் உருமாறியவர்.

ஜாக்கிரதையாகப் போய் வா என்றெல்லாம் சொல்ல மாட்டேன் யானி. பயணம் உனக்குப் புதிய அனுபவங்களைக் கொடுக்கட்டும்.  கஷ்டம் வந்தால் எதிர்கொள்ளப் பார். ஒன்றும் வரவில்லையென்றால் சந்தோஷம்.  ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.  வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. எம்மாதிரியான அனுபவங்கள் என்று தேர்ந்தெடுப்பது உன் கையில்.

யானி ஓர் இசை மேதை என்று பலருக்கு தெரிந்திருக்கும். நமது ஊரில் தாஜ்மஹால் முன்னே இசை நிகழ்ச்சி நடத்தியவர் என்ற வகையில் சிலருக்கு ஞாபகமிருக்கும். ஆனால் "யானியா யாரது?" என கேட்கக் கூடிய பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கும் அவரது இசை முன்னமே வெகு பரிச்சயமான ஒன்று என்பதுதான் வேடிக்கையான விஷயம்.

விருது வழங்கும் விழாக்கள், சவால் நிகழ்ச்சிகள், ஏன்.. எழுத்தாளர் முகில் ஒரு டிவீட்டில் சொன்னது போல் சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட இவரது இசை வெகு பிரசித்தம். இப்படிப்பட்ட வகையில் இவரது இசை தொகுப்புகள்  இன்னாருடையது என அறியப்படாமேலே பட்டி தொட்டியெங்கும் நம் நாட்டிலும் ஹிட் ஆனவைதான்.

யானியின் மீதான நியாயமான காதலில் அடியேன் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சுபதினத்தில் கிழக்கு அதிரடி விற்பனையில் யானியின் புத்தகத்தை வாங்கி சமீபத்தில் படித்து முடித்தேன்.

சிருஷ்டி என்பதை மறுபிறப்பு என்பதாகவே யானி கருதினார். அடிப்படையில் அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் இசையைப் பொருத்த அளவில் அவருக்கு இதில் இரண்டாம் அபிப்பிராயமே கிடையாது.  இசை எப்போதும் இருப்பது. தன் முழு வடிவில். பூரணதுவத்தில். புதிய இசை என்று ஒன்று கிடையாது.  ஓடும் பெருநதியிலிருந்து ஒரு கை நீர் அள்ளி நான் தருகிறேன்.  என்னைப் போல் எத்தனையோ பேர் தருகிறார்கள். நான் அள்ளும் இடத்தின் மகத்துவம் அப்படி. நான் அளிப்பது உன்ககுப் பிடித்திருக்கிறதா? நல்லது. முன்னோருக்கு நன்றி சொல்வேன்.

சித்தார்த் ராமானுஜன் சிறப்பான படைப்பினை அளித்திருக்கிறர்.  உன்னதமான இசைக்கோவைகளை அள்ளி அள்ளி கொட்டிக்கொண்டிருக்கும் யானியின் வாழ்க்கை கதை வெகுவாக சிலிர்ப்படைய வைக்கிறது. எதிலும் அடங்காத ஆற்றல், திருப்தியின்மை, பெரும் இலக்குகளை நிர்ணயித்தல், அதை நோக்கி பேய்த்தனமாக உழைத்தல் என பின்னியெடுக்கிறார் மனிதர்.

கண்டிப்பாக அனைத்து வகை கிரியேட்டர்களும் படிக்க வேண்டிய நூல். புத்தம் புதிய உத்வேகம் தருகிறது.  யானியை படிக்கும்பொழுதுதான் நாம் என்ன வேகத்தில் நம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என்றே உரைக்கிறது. மிஸ் பண்ணக் கூடாத லேபிளில் அடங்கும் புத்தகம்.

"நான் ஒரு நீச்சல் சாம்பியன். நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இசைக்கடலில் என்னால் கரையோரம் நின்று தூண்டில் போட மட்டுமே இன்றுவரை முடிந்திருக்கிறது.!"


கடலளவு பரந்த அவரது அந்தக் கனவு இன்றும் தொடர்கிறது!

__________________________________

யானி - ஒரு கனவின் கதை
சித்தார்த் ராமானுஜன்

புத்தகம் குறித்த சுட்டி
https://www.nhm.in/shop/978-81-8493-235-5.html

_______________________________

சிகப்பு நிற எழுத்துக்கள் புத்தகத்தில் எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
____________________________

வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 


Valaimanai Tamil Book review - tamil buthaga vimarsanam
isai medhai yaani  oru kanavin kadhai sidharth ramanujan
kizaku padipagam kilakku publications 

Monday, September 19, 2011

பிரியாணி வித் அண்ணே அப்துல்லா






பஸ் உலகில் ஒரு கால் வைத்திருப்பது எவ்வளவு நல்லது என்பதை சமீபத்தில் அறிந்தேன். இல்லையென்றால் பெரும் இழப்புகள் நேரிடும் போல் இருக்கிறது. அன்று அப்படித்தான், பிரியாணியை இழந்திருப்பேன்.

மாலை மெரினாவில் ரம்ஜான் பிரியாணி விருந்து அளிப்பதாக அண்ணன் அப்துல்லா பஸ் இட்டிருந்தார். அதைப்பார்த்து அலறியடித்துக்கொண்டு, மாலை 5 மணிக்கெல்லாம் மெரினாவில் கூடி இருந்த பதிவர்கள் மத்தியில் ஐக்கியம் ஆனேன்.

வார நாளில் விருந்தினை ஏற்பாடு செய்திருந்தாலும் பிரியாணி அழைத்ததனால்... மன்னிக்கவும் அண்ணன் அப்துல்லா அழைத்ததனால் அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து அனைவரும் வந்திருந்தனர்.

பல தெரிந்த முகங்கள், சில தெரியாத முகங்கள் என வழக்கம் போல மெரினாவில் வட்ட மணல் மாநாடு துவங்கியது. வானம் வேறு இருட்டிக்கொண்டு வந்து, எங்கே விருந்து கேன்சல் ஆகிவிடுமோ என்கிற இயற்கையான பயம் என்னுள் அப்பிக்கொண்டது. வட்ட மாநாடு கலைந்து அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்த போது,

பான்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி காதலின் தீபம் ஒன்று ரஜினி போல   மணலை வெறித்தபடி அடி மேல் அடி வைத்துக்கொண்டிருந்தார் அண்ணன் ஆதி.

"என்னண்ணே.. சீரியஸாய் ஏதோ யோசிச்சிக்கிட்டிருக்கீங்க.. அடுத்த குறும்படம் பத்தியா..?" என்றேன்.

"இல்ல. இது அதை விட பெரிசு.." என்றார் சிரிக்காமல்.

ஆதி & கோ குறும்படம்னாலே நாலு அணுகுண்டுக்கு சமம்.. அதை விடப்பெரிசுன்னா எத்தனை உசுரு போகப்போகுதே தெரியலையே என பதறியபடி "நல்லா வருவீங்கண்ணே.. நல்லா வருவீங்க..." என்றபடி எதிர் திசையில் எஸ்கேப் ஆனேன்.

மழை வரும் போல் இருந்ததால், அனைவரையும் அவரது அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்தார் அப்துல்லா.  இடத்தை விசாரித்துக்கொண்டு அனைவரும் ஆளாளுக்கொரு பைக் பிடித்து கலைகையில், அண்ணன் பால பாரதி எதிர்பட்டார்.

பால பாரதி!

2009 ஆம் ஆண்டு மெரினாவில் எனது முதல் பதிவர் சந்திப்பில் அவரை பார்த்து கொஞ்சம் பயந்து போய் இருக்கிறேன். எப்போதோ பார்த்த ஹிந்தி பட வில்லன் உருவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.  பின்னர் நடேசன் பூங்காவில் ஒரு பதிவர் சந்திப்பில் அவர் அருகில் அமர்ந்து கொஞ்சம் பயம் போய் இருக்கிறது. மற்றபடி அதிகமாய் பேசியது இல்லை.

"சார், உங்களுக்கு அப்துல்லா அண்ணன் ஆபிஸ் எப்படி போறது தெரியுமா?" என்றேன்.

"இடம் சொன்னாங்க. எப்படி போறது தெரியலை.. வா முதல்ல ஒரு டீயை போடுவோம்." என்று அங்கிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்ற பின் ஒரு டீ கடையில் நிறுத்தினார்.

"எங்க வேலை செய்றீங்க சுகுமார்?" என்றார் வண்டியை நிறுத்திக்கொண்டே.

நான் அதிர்ச்சியுடன், "என்ன சார் சுகுமார்னு சொல்றீங்க" என்றேன்.

"யோவ்.. அதானே உன் பேரு. இல்லயா?" என்றார்.

"இல்லை சார்.. எனக்கு உங்களை தெரியும்.. உங்களுக்கு என்னை தெரியும்னு நான் நெனைக்கவே இல்லை" என்றேன்.

"அடப்பாவி.. ஏதோ உன் பேரு வேற போல இருக்கு...நான் தான் தப்பா சொல்லிட்டேனோனு நெனச்சேன்." என்றார் சிரித்துக்கொண்டே.

அவருக்கு என்னை தெரிந்திருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. போட்டோ கமெண்ட்ஸ் குறித்து ஊக்குவித்து பேசினார். மகிழ்வாய் இருந்தது.

பின்னர் தேடி பிடித்து அப்துல்லா அண்ணன் அலுவலகம் சேர்ந்தோம்.  அங்கு கான்பெரென்ஸ் ஹாலில் அரட்டை கச்சேரி துவங்கியது.  

சிறிது நேரத்திற்கெல்லாம் அண்ணன் அப்துல்லாவும் கேபிள்ஜியும் வந்து சேர்ந்தார்கள்.

"அண்ணே.. மழையா.. ஒன்னும் பிரச்சனை இல்லையே.." என்றேன்.

"இல்ல... இல்ல.. லேசா நனைஞ்சிட்டோம். அவ்ளோதான்" என்றார்.

"அட உங்களை எவன் கேட்டான், பிரியாணிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?"  என்ற என்னை முறைத்துவிட்டு, அதையே வழக்கம் போல் மூச்சு விட சிரமப்படும் அளவிற்கு சிரித்து சிரித்து பக்கத்தில் யாரிடமோ சொன்னார்.

அப்துல்லா அண்ணனிடம் அதுதான் சிறப்பு. அவர் மொக்கை ஜோக் அடித்துவிட்டு சிரித்தாலும், அந்த மொக்கைக்காக இல்லாவிட்டாலும் அவர் சிரிக்கும் அழகிற்காகவாவது பதிலுக்கு சிரிக்க தோன்றும்.

விருந்து துவங்கியது. அது போல ஒரு மட்டன் பிரியாணியை வாழ்வில் சாப்பிட்டது இல்லை. அரிசி மிருதுவாக இருந்ததா இல்லை ஆட்டுக்கறி மிருதுவாக இருந்ததா என இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவ்வளவு சுவையாக இருந்தது.

சிறப்பான இந்த விருந்து நிகழ்வினை குறித்து பதிவிட முடியாமல் வால்டேஜ் பிரச்சினை துரத்தியடித்துக்கொண்டே இருந்தது.  இவ்வளவு சிரமம் எடுத்து விருந்தளித்த அப்துல்லா அண்ணனின் அன்பிற்காக இல்லாவிட்டாலும்,  அடுத்த முறை பிரியாணி விருந்திற்கான ஏற்பாடுகளை அவர் இப்போதே துவங்குவதற்கு ஊக்கமளிக்கவாவது இதை பதிவிட விரும்பினேன்.

இந்த முறை இந்த வாய்ப்பை தவற விட்டவர்கள் அடுத்த முறையும் ஏமாற்றத்தை தவிர்க்க இப்போதே தங்கள் பிரியாணிக்கான முன் பதிவை துவங்கலாம்.

BIRIYANI என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் ஆப்சனை ( A.மட்டன் B.சிக்கன் C.வான் கோழி ) தேர்ந்தேடுத்து, உங்கள் குடும்பத்திற்கும் பக்கத்துக்கு வீட்டு காரர்களுக்கும் தேவைப்படும் பார்சல்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு அண்ணன் அப்துல்லா மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Wednesday, August 31, 2011

மங்காத்தா - விதிகளை உடைத்த அஜித்




தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம்.  கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்.

தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள் கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.

 எவ்வளவு கெட்டவனாக ஹீரோவை காண்பித்தாலும் கடைசியில் ஒரு பிளாஷ்பேக் வைத்து அவன் நல்லவன்தான் என ஒரே சீனில் மாறும் சாதாரண சினிமாவாக அமையாத கிளைமேக்ஸ் தமிழுக்கு புதுசு.


த்ரிஷா, ஆன்ட்ரியாயை விட அஞ்சலி அழகாக தெரிகிறார். லட்சுமி ராய்க்கு பதில் வேறு யாரையாவது போட்டிருக்கலாம்.  அழகான ஒளிப்பதிவு, அடுத்தடுத்து நகரும் விறுவிறுப்பான காட்சிகள், ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவை என போரடிக்காமல் செல்கிறது மங்காத்தா.


பல இடங்களில் அஜித்தின் புதிய தோற்றம் அட்டகாசமாக இருக்கிறது. ஆனாலும் ஏன் இப்படி எல்லாம் நடிக்க/பேச சம்மதித்தார் என தோன்றும் அளவிற்கு இருக்கும் சில இடங்களை தவிர்த்திருக்கலாம்.  இரண்டாம் பாதியில் சேஸிங் காட்சிகள் நீளமாக இருக்கிறது.

பின்னணி இசை அட்டகாசம். அதற்கு உழைத்தது போல் பாடல்களுக்கு உழைக்கவில்லையோ யுவன் என தோன்றுகிறது.  அனுபவ இயக்குனர்கள், அஜித்திற்கு ஹிட் படங்களை தருவதில்லை எனும் கூற்றை தைரியமான படைப்பை சிறப்பாக கொடுத்து உடைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

ஏகன், அசல் மூலம் சோர்ந்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இந்த மங்காத்தா. மற்றவர்களுக்கு போரடித்து போன வழக்கமான மாஸ் ஹீரோ சப்ஜெட்டுகளிலிருந்து ஒரு மாற்று அனுபவமாக அமையும்.

Mangatha Mankatha Movie reivew vimarsanam valaimanai sukumar swaminathan blog review
Thala 50 Ajith Ajithkumar venkat prabhu Mankathaa