Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Thursday, May 13, 2010

வலைமனை ஃபீலிங்ஸ் - 100வது பதிவு




100 வது பதிவு (இது என் தப்பு. இவ்ளோ கொடுமைக்கும் மன்னிச்சுடுங்க. ). 
ஒரு லட்சம் ஹிட்ஸ் (இது உங்க தப்பு ஹி.. ஹி....). 
160+ பாலோயர்ஸ் ( ஒரு வேலை தப்பா வழி  மாறி வந்திருப்பாங்களோ..?.) 
ச்சே.. எல்லாம் தப்பு தப்பா வருது. சரி இப்போ சரியா  சொல்றேன் நோட் பண்ணிகோங்க. 



    நூறு என்பதும்  ஒரு எண்ணிக்கையே என்றாலும் மற்ற பதிவுகளை போல இதுவும் ஒரு பதிவே என்றாலும் இங்கே கொஞ்சம் நின்று எல்லோருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பாக இதை நான்  எடுத்து கொள்கிறேன். இதுவரை ஒட்டு போட்டும் பின்னூட்டங்கள் கொடுத்தும் உற்சாகப்படுத்தும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், பதிவுகள் பலரை சென்றடைய வழிவகுக்கும் தமிழிஷ், தமிழ்மணம், திரட்டி குழுமத்தாருக்கும், பின் தொடரும் நல் உள்ளங்களுக்கும்  ட்விட்டர், பேஸ்புக் முதலியவற்றில் இணைப்புகள்  கொடுக்கும் முகம் தெரியா இணைய நண்பர்களுக்கும், தொடர்ந்து ஆதரித்தும் ஆலோசனைகள் வழங்கியும் பக்க பலமாய் இருக்கும் சக பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
தொடர்ந்து வாருங்கள். நிறை குறைகளை கூறுங்கள். 

  


ஐ.பி.எல் மேட்ச் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்த சமயம். திடீரென ஒரு நாள் கேபிள்ஜி போன் செய்தார். மேலே உள்ள கமெண்டை அப்படியே சொல்லி "யோவ் இது உன் பதிவில் போட்டதுதான, இங்க ஒரு டீ கடையில நிக்கறேன், எந்த சேனல் தெரியல, ஒரு எப்.எம் ரேடியோவில இந்த கமெண்டை அப்படியே சொல்லி இப்படி இன்டர்நெட்டில் கிண்டல் பண்றாங்கன்னு சொல்றாங்கய்யா"  என்றார். கேட்கவே மகிழ்ச்சியாய் இருந்தது.  வலைமனையை அறிந்த சில நண்பர்களும் அடிக்கடி இந்த படங்கள் இ-மெயிலில் பார்வர்ட் ஆகி வருவதாக சொல்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாலு பேரை சிரிக்க வைக்கும் ஆனந்தம் இருக்கிறதே அடடா.. அதன் சுகமே தனி.  அதே சமயம் யாரையும் குறி வைத்து தாக்காமல், முடிந்த அளவு சம்பந்தபட்டவர் படித்தாலும் மனம் புண்படக்கூடாது என்கிற அளவுகோளை வைத்து கொண்டு கமெண்ட் போடுகிறேன். ஒரு சாமானியனாக வாழும் போது நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் சில  நமக்கு டென்ஷன் கொடுக்கும், சில சிரிப்பை கொடுக்கும், இவ்வாறான விஷயங்களை எடுத்து ஜாலியாக கிண்டல் செய்து விட்டு போய் கொண்டிருக்கிறேன். இதில் தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிச்சுடுங்க..
அப்புறம் இன்னொரு விஷயத்துக்கும் மன்னிச்சுடுங்க... இனி கொஞ்சம் கொஞ்சம் எழுதலாமுன்னு இருக்கேன்!!!      (கமெண்ட்ஸ் மட்டுமே போடாதீங்க .. அப்பப்போ கொஞ்சம் எழுதுங்கன்னு சில நண்பர்கள் சொல்றாங்க... உன்னை எல்லாம் யாருய்யா எழுத  சொன்னதுன்னு கொதிப்படையும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன  )


து 2016, 2021 எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்பொழுது தொடங்க போவதாக இருக்கும் விஜய்யின் கட்சிக்கு இப்பொழுதே ஒலிக்கும்   " தமிழன் வீர தமிழன் தலைமை தாங்கும் ஒருவன்"  என்கிற லேட்டஸ்ட் பிரசார பாடலை ஒரு எங்கு கேட்டாலும் டென்ஷன் ஆகிறது. நீங்க கேக்கலைனா எனக்கு ஒண்ணும் இல்லை.. என்னிடம் இவ்வாறான விஷயங்களை விரும்பும் என் ரசிகர்களுக்காக இதை நான் செய்தே தான் தீருவேன் என்பது தான் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு  இன்று விஜய்யின் பதிலாக இருக்கிறது.  
  அண்ணா  உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு கேக்குறேண்ணா... சமீபத்துல ஒரு பேட்டியில், மக்களுக்கு ஒரு பிரச்சனைனா இறங்கி போரடுவேன்னு சொல்லி இருக்கீங்க.. இப்போ எங்களுக்கு உங்க படங்கள் ஒரே விதத்தில் வருவதும், நிமிடத்திற்கு ஒருமுறை  உங்கள் படம் சூப்பர் ஹிட் என விளம்பரம் வருவதும் பெரும் பிரச்சனையாக இருக்குதுன்னு சொல்றோம். முதல்ல இதுக்கு என்னை பண்ண போறீங்க... உங்களுக்கு பிடிக்கலைனா பார்க்காதீங்க... என் ரசிகர்களுக்காக நான் இப்படிதான் நடிப்பேன்னு எல்லாம் சொல்ல கூடாது. அப்போ நாளைக்கே நீங்க முதல்வர் ஆனா ( ஒரு பேச்சுக்கு சொல்றேன்) உங்களுக்கு ஒட்டு போட்டவங்களுக்கு  மட்டும் சலுகைகள் கொடுத்திட்டு  வேறு கட்சிக்கு ஒட்டு போட்டவர்களை அம்போவென விட்டுடுவீ ங்களா? 
  சரி என்னமோ போங்க. அடுக்கடுக்காய் இப்போ எங்கு பார்த்தாலும் உங்களுக்கு கடிதம், அறிவுரை, இ-மெயில்னு இதே விஷயம் திரும்ப திரும்ப  அதிக அளவில் சொல்லப்பட்டு வருது. ஆனா வழக்கம் போல இது எதையும் கண்டுக்காம "நான் வச்சதுதான் சட்டம்"னு நீங்க தொடர்ந்தீங்கன்னா.. சாரி பாஸ் நீங்க தமிழக முதல்வர் இல்ல.. அமெரிக்க ஜனாதிபதி ஆகுற மைண்ட் செட்ல  இருக்கீங்கனு அர்த்தம். 

___

.சி.சி. போட்டியில் இந்தியா செமி பைனல்ஸ் போக முடியாதது ஒரு விதத்தில் நல்லதே என தோன்றுகிறது. இப்படி சொதப்பு சொதப்பு என சொதப்பும் டீம் தப்பி தவறி செமி பைனல்ஸ் போய் பாகிஸ்தானுடன் மோதி நாயடி பேயடி வாங்கி இருந்தால் அவ்வளவுதான். உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை இந்தியாவை வென்றதில்லை என இருக்கிற வறட்டு கவுரமும் புஸ் ஆகி இருக்கும். தோனி எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும்னு ரவி சாஸ்திரி ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சொன்னது நினைவிற்கு வந்தது  ! வாழ்க தோனி ! வளர்க அவர் படை !

___


த்யம் போய் இருந்தேன். How to Train your Dragon - 3D  படம் பார்க்க.  1 மணிக்குதான் ஷோ போட்டிருந்தார்கள். 11 மணிக்கே  போய்விட்டதால் என்ன செய்வதென பார்த்தேன். 11.15 க்கு சுறா படம். டிக்கெட் வாங்கி விடலாமா என ஒரு நிமிஷம் டெம்ப்ட் ஆனாலும் டக்கென அந்த தப்பான எண்ணத்தில் இருந்து சுதாரித்து கொண்டேன். மேலே Blur கேமிங் சோனில் ஐந்தாம் தளத்தில் எப்போதும் பிசியாக இருக்கும் Wii கேம்ஸ் அன்று காலியாக இருக்கவே ஆசை தீர விளையாடினேன். கையில் ஒரு ஒயர்லெஸ்  ரிமோட் கொடுக்கிறார்கள். அதை நாம் பேட் போல பிடித்து கொண்டு விளையாட திரையில் சிக்ஸ், போர் என பால் பறக்கிறது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக ஐந்து ஓவரிலேயே 80 ரன்கள் எடுத்தேன். அப்புறம் 1 மணி ஆகி விடவே படம் பார்த்து விட்டு கிளம்பினேன். 
 என்னது படம் பத்தி சொல்லவே இல்லையேனு கேக்குறீங்களா.. சிம்பிளா சொல்லனும்னா ஒரு ஊரு.. அதுக்கு ஒரு பிரச்சனை. அந்த பிரச்னையை நம்ம ஹீரோ எப்படி டீல்  பண்ணி மக்களை காப்பாத்துறாரு.. இதான் கதை!  சுறா கதை மாதிரியே இருக்குல்ல?  என்னது மறுபடியும் முதல்லேயிருந்தானு நீங்க அலறுவது காதில விழுது. இதோட முடிச்சுக்குவோம். 


அமேசான் தளத்தில் இன்றைய ஆஃபர்களை காண 

Friday, January 22, 2010

பொங்கல் பீலிங்க்ஸ்

இந்த முறையும் புத்தக கண்காட்சி சென்றிருந்தேன். தினமும் பதிவுலகில் கண்காட்சி குறித்தும் அங்கு நிகழ்ந்த 'பதிவர் சந்திப்புகள்' குறித்தும் பல பதிவுகள் வந்திருந்தபடியால் புத்தகங்களில் ஒரு கண்ணும் யாராவது பதிவர்கள் கண்ணில் படுகிறார்களா என இன்னொரு கண்ணும் வைத்தபடி இருந்தேன். 8.30 க்கு கண்காட்சி மூடப்படும் என 8.15க்கு அறிவித்ததால் கடைசி நேர பரீட்சைக்கு கட கட வென படிப்பது போல நான்கைந்து வரிசை ஸ்டால்களை அவசரமாய் கடக்க வேண்டி இருந்தது. சில புத்தகங்கள் வாங்கினேன். நான் தேடி போன எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய 'வெற்றிக்கு ஏழு படிகள்' கிடைக்கவில்லை. பதிப்பித்த அல்லயன்ஸிலேயே ஒன்று கூட இல்லை. கடைசி வரை பதிவர் நண்பர்கள் யாரையும் பார்க்க முடியாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

* * *


சென்னை அமைந்தகரையில் உள்ள வ.உ.சி பூங்காவில் சென்னை சங்கமம் சென்றிருந்தேன். நல்ல திருவிழா கூட்டம். பூங்காவின் நடுவே மேடை அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடந்தபடி இருந்தது. சென்னை சங்கமத்தில் எனக்கு பிடித்த முதல் விஷயம் அதன் ப்ரோமோ விளம்பர டிசைன்கள்.... வடிவமைத்தவர்களுக்கு பாராட்டுகள்.



பூங்கா முழுவதும் சமையல் வாசம். உணவு ஸ்டால்களில் நல்ல கூட்டம். டோக்கன் வாங்க பெரிய்ய்ய்ய்ய்ய லைன். சமையல் நிபுணர் தாமுவின் ஸ்டாலில் விருதுநகர் பிரியாணி வாங்கி சூடாக இறக்கினேன்.


ஸ்டாலுக்கு சற்று தொலைவில் சமையல் கலைஞர் தாமு அமர்ந்திருந்தார். பல சமையல் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். என்னிடம் கூட ஒரு புத்தகம் இருப்பதாய் ஞாபகம். டி.வி. சமையல் நிகழ்ச்சிகளிலும் பார்த்திருக்கிறேன். அம்மா சொல்லி இருக்கிறார். மற்ற சமையல் நிபுணர்கள் கையில் க்ளவுஸ், ஸ்டைலான உபகரணங்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் பொழுது, இவரது செய்முறை படு சிம்பிளாக இருக்கும். அப்படியே வெறுங்கையில் சிக்கனை மசாலாவில் பிரட்டி சட்டியில் போடுவார். எந்த ஒரு செயற்கை தனமும் இருக்காது.



அவரை பார்த்ததும் அது நினைவுக்கு வரவே, அவரிடம் அம்மா சொன்னதை அப்படியே சொன்னேன். "அதாங்க முக்கியம். அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லுங்க " என்றார் அன்பாய் சிரித்து கொண்டே. பதிலுக்கு அவரது ஸ்டால் பிரியாணி சூப்பர் என சொல்லிவிட்டு நகர்ந்தேன். பிறகு மற்ற ஸ்டால்களில் நெத்திலி பிரை, ஜிகர் தண்டா போன்ற ஸ்மால் ஸ்மால் ஐய்டங்களையும் கொஞ்சம் கொரித்தேன்.
பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்தால் எப்படி ஆங்கிள் பார்த்தாலும் போட்டோ பிரேமுக்குள் செம கூட்டம். சென்னை சங்கமம் இத்தனை வருடம் நடந்தாலும் இந்த முறை கூட்டம் கொஞ்சம் கூடி இருக்கிறது.



நான் போன பொழுது துள்ளவைக்கும் நாட்டுபுற பாடல்கள். நாதஸ்வர, மேள சத்தங்கள் என அமர்க்களமாய் இருந்தது.
தஞ்சை, மதுரையை கண்ணால் பார்த்தே பல தலைமுறைகள் ஆகிவிட்ட என்னை போன்ற சென்னை வாழ் சோழ, பாண்டிய வாரிசுகளுக்கு சென்னை சங்கமம் நல்லதொரு அனுபவம். காரணமான கனிமொழி மேடத்திற்கு பாராட்டுக்கள்.
புத்தாண்டு பிறந்ததும் புத்தக கண்காட்சி, சரியாய் அது முடிந்ததும் அடுத்து சென்னை சங்கமம் என நல்ல பெஸ்டிவல் பீலிங்க் இப்பொழுதெல்லாம் சென்னையில் நிகழ்கிறது.

***

பொங்கல் அன்று கொளத்தூர் கங்கா திரை அரங்கம் வழி சென்ற போது காதில் கேட்டது சிரிக்க வைத்து. ஆயிரத்தில் ஒருவன் ரிலீசால் அலைமோதிய கூட்டத்தை கட்டுபடுத்த மைக்கில் அறிவித்தார்கள்
"ஆயிரத்தில் ஒருவன், குட்டி டிக்கட் புல்லு..... தயவு செஞ்சு வீட்டுக்கு போய் வேற வேலையை பாருங்க.. இல்லைனா வேட்டைக்காரன் டிக்கட் இருக்கு வாங்க...!"