Friday, January 13, 2012

நண்பன் இஸ் வெல்





காதல்,  கதையின் மையக்கருவாக இல்லாத படங்கள் தமிழில் குறைவு. அதிலும் ஃபீல் குட் வகை படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.  புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து காட்சி ஊடகங்களில் நேரத்தை அதிகம் செலவிடும் காலகட்டத்தில் ஒரு சினிமா, அதுவும் ஒரு தமிழ் சினிமாவில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒவ்வொரு படத்திலும் எப்படி ஒரு குற்றத்தை கிரியேட்டிவ்வாக புதிய முறையில் செய்யலாம் என்பதையே நாம் கற்க முடியும்.

ஒரு ஹீரோ, ரெண்டு ஹீரோயின், வில்லன் அப்புறம் கிளைமாக்ஸ் இடையிடையே பாடல்கள் என்கிற உருப்படாத திரை இலக்கணத்தை மீறி தமிழில் படங்கள் வருவது அரிது. அதிலும் அப்படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஹிட் ஆவது அதனினும் அரிது.

இவ்வாறான நிலையில் வெற்று இலக்கணங்களை உடைத்து புதிய பரிமாணத்தில் ஒரு படத்தை கொடுக்க முதன்முறையாக ஷங்கரும், மாஸ் ஹீரோவான விஜய்யும் முன்வந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்காலத்திற்கு ரொம்பவும் நல்லது.

தற்போதைய கல்வி கற்பிக்கப்படும் முறை குறித்தும் அது மாணவர்களின் பால் உண்டாக்கும் தாக்கத்தையும், இதற்கான மாற்று வழிகளையும் மையமாக வைத்து இன்னபிற பொழுபோக்கு சமாச்சாரங்களை சேர்த்துக்கொண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ்,  கெட்ட ஹிட் ஆகி பட்டையை கிளப்பிய படம். இன்று சீனாவில் கூட பல கல்லூரிகள் 3 இடியட்ஸ் படத்தை பார்க்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைக்கின்றன என்றால் அக்கதையின் வலு குறித்து அறிந்துக்கொள்ளலாம்.

அப்படியாகப்பட்ட டபுள் ஸ்டராங் கருத்துள்ள, படு சுவாரஸ்யமான நடையில் செல்லும் மெகா ஹிட்டான படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என நினைத்ததற்கே ஷங்கர் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ்  பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.

தமிழக மக்கள் தொகையில் 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் சொற்ப சதவிகதத்திலேயே இருப்பார்கள் என்பதால், ஷங்கர் எடுப்பதன் மூலமும், விஜய் நடிப்பதன் மூலமும் படத்தின் அற்புதமான கருத்துக்கள் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு போய் சேரப் போகிறது குறித்து மகிழ்ச்சியே.

ஆகவே குரங்கை நினைக்காமல் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிற கதையைப் போல் ஏற்கனவே 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் அமீர் - விஜய், சத்யராஜ் -  இரானி, மாதவன் - ஸ்ரீகாந்த் என ஒப்பீட்டு பார்வை இல்லாமல் பார்க்க முடிந்தால் நண்பனை ரசிக்கலாம்.  3 இடியட்ஸ் பார்க்காதவர்களுக்கு அந்தப் பிரச்சினை கூட இல்லை. இந்த படம் சுவையாகவும், நல்ல பல விஷயங்களை அறியத்தரும் புத்தகமாகவும் இருக்கும். இடையிடையே இலியான இடுப்பை ரசித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.

முதல் நாள் காட்சி -  சென்னை ஏ.ஜி.எஸ் திரையரங்கம்.




■  காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக சமயங்களில் விஜய்யை இவ்வளவு க்யூட்டாக அமைதியாக பார்த்ததாக ஞாபகம். அப்பாடா....  ஷங்கர் யாருடனாவது இணைந்தால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றவாறு சம்மந்தப்பட்ட நடிகரை வைத்து பிரமிப்பினை படத்தில் காட்டுவார்.   பல வருடங்கள் கழித்து அமைதியாக வரும் விஜய்யை பார்த்து நண்பனிலும் அதே பிரமிப்பு நமக்கு ஏற்படுகிறது.

ஒரு ஸ்டூடன்ட்டாக மட்டும் விஜய் கொஞ்சம் இடறுகிறார். டொக்கோமா விளம்பரத்தில் கூட செம யூத்தாக இருந்தாரே...? எது எப்படியோ... விஜய் இதுபோன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் எஸ்.எம்.எஸ் ஜோக்குகளே அழிந்து விடும் ஆபத்தும் உள்ளது.

■  இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல படத்தில் வெறித்தனமாக விளாசி இருப்பவர் சத்யன் ஒருவர் மட்டுமே. படத்தை தூக்கி நிறுத்துகிறார். சத்யராஜும் தன் பங்கிற்கு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

■  மாணவ தோற்றத்திற்கு மூவரில் சூப்பராக ஃபிட் ஆகிறவர் ஜீவா மட்டுமே. அனுபவித்து நடித்திருக்கிறார் மனிதர்.  ஸ்ரீகாந்திற்கு இது டூ ஆர் டை மேட்ச் மாதிரி. திரையுலகில் அவரது இரண்டாம் இன்னிங்ஸ் இந்த படத்தையே நம்பி உள்ளதால், கிடைத்த பந்துகளில் சிக்ஸர் அடிக்காவிட்டாலும் சொதப்பாமல் இயன்ற அளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

■  நடிப்புக்கு ஆள் எடுங்கன்னா, இடுப்புக்கு ஆள் எடுத்த வகையில் இலியானாவும் இருக்கிறார். பாவம் நெஞ்செலும்புகள் தெரிகிறது.  சிவாஜியில் ஸ்ரேயாவை பார்த்துவிட்டு இப்படி ஒரு ஷங்கர் ஹீரோயினை மனசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது அக்காவாக வந்த அனுஹ்யாவே அவரை விட எனக்கு அழகாகத்தான் தெரிந்தார். சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ் லூஸ்ல விடுங்க.

உலக அளவில் மெகா ஹிட் ஆன (சன் டிவியில அப்படித்தான் சொல்றாங்க) எந்திரன் படத்திற்கு பின்னர் ஷங்கர் ஒரு ரீமேக் படம் செய்திருக்கிறார்.  அதுவும் கொஞ்சம் கூட மாற்றாமல் அதே கதை, அதே திரைக்கதை, அதே காட்சியமைப்புகள்.  தன்னை பாதித்த ஒரு பாசிட்டிவ், ஃபீல் குட் படத்தை தமிழக மக்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும் என தனது அத்தனை இமேஜுகளையும் மறந்து விட்டு நண்பன் தந்திருக்கும் இயக்குனர் ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நண்பன் - ஒரு நல்ல புத்தகம்!






Nanban Movie Review by blogger Sukumar Swaminathan
Valaimanai

5 comments:

CS. Mohan Kumar said...

Fully agree with your view.

Prabu Krishna said...

மூன்று மணி நேரம் எல்லாவற்றையும் மறந்து ரசித்தேன். அருமையான படம் நடித்த அனைவருக்கும்.

Anonymous said...

//ஆகவே குரங்கை நினைக்காமல் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிற கதையைப் போல் //

அதாவது.. பன்மோகனை நினைக்காமல் மௌனவிரதம் இருக்க சொல்வது போல்...Got It Sukumar.

Anonymous said...

//உலக அளவில் மெகா ஹிட் ஆன (சன் டிவியில அப்படித்தான் சொல்றாங்க) //

நானும் ரொம்ப நாளா கேக்கனும்னு நெனச்சேன். உலகத்த அளக்குற ஸ்கேலு எங்க விக்குதுன்னே தெர்லப்பா சாமி!

சாருஸ்ரீராஜ் said...

parthachu romba nalaiku appuram ore nagaichuvaiyana padam and positive approaches