Monday, July 4, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 04 07 11



புத்தகங்கள் வெகுவாக வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டவை.

பத்திரிக்கை வேலை பார்ப்பதாலும், பதிவுலகம் வந்ததாலும் முன்பிருந்த சிந்தனை முறைகள் தற்போது வெகுவாக மாறிவிட்டிருப்பதை சமீப காலமாக உணர்ந்து வருகிறேன்.

எதிலும் விமர்சனப் பார்வை, எதையாவது பதிவு செய்ய வேண்டி வலுக்கட்டாயமாக மூளையை வெவ்வேறு கோணங்களில் யோசிக்க வைப்பது, முக்கியமாக குறை கூறும் மனப்பான்மை அதிகரித்துவிட்டது. முன்பிருந்த கேரக்டரை மீட்டெடுக்க எட்டு வருடங்கள் முன்னர் என் வாழ்க்கையாய் இருந்த "How to win friends and influence people" புத்தகத்தை எடுத்து ரிவிஷன் செய்தேன்.

இந்த ஒரு புத்தகம் எனது வாழ்க்கையை, எனது கேரக்டரை சில விஷயங்களில் மேன்மையாய் மாற்றி விட்டிருக்கிறது என்பதை உணரும் பொழுது எவ்வளவு பெரிய பொக்கிஷம் வாழ்வில் கிடைத்திருக்கிறது என நினைத்து மகிழ்வடைந்தேன். எந்த புத்தகத்தை தவற விட்டாலும் இந்த புத்தகத்தை தவற விடாதீர்கள்.

புத்தகம் குறித்த எனது பார்வை : http://valaimanai.blogspot.com/2011/06/blog-post_30.html


மீபத்தில் படித்ததில் அசத்திய புத்தகம் 'கே.ஆர்.பி செந்தில்' எழுதிய 'பணம்'. வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்க செல்பவர்களின் கதைகள் அடங்கிய கலெக்ஷன்.  படிப்பதற்கு வெகு வெகு சுவாரஸ்யமாக இருந்தது. கொடுக்கும் காசுக்கு வொர்த் ரீடிங்!!

சுட்டி : http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D


ணைய பெருமக்களுக்கான சமீபத்திய புதுவரவு கூகுள் பிளஸ். பேஸ்புக்கை போலவே கூகுள் முயற்சி செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.  பதிவுகளில் இயங்கிய பலர் தற்போது கூகுள் பஸ், டிவிட்டர், பேஸ்புக்குகளில் தீவிரமாக இயங்குகிறார்கள். எனக்கு பஸ்ஸும், பேஸ்புக்கும் வசதியாக இருக்கிறது. ஆயினும் என்ன ஆனாலும் பதிவு எழுதிக்கொண்டே இருப்பதில் உறுதியாக இருக்கிறேன். இது தனி உணர்வு.

கிழக்கின் அதிரடி விற்பனையில் ஹாட் கேக் என்றால் அது பா.ராகவன் எழுதிய மாயவலை புத்தகம்தான். உலகின் அனைத்து தீவிரவாத இயக்கங்கள் பற்றிய இந்த புத்தகம் 1000+ பக்கங்கள் கொண்டது. ரூ.750 விலையான இது தற்போது சிறப்பு விலையாக ரூ.338க்கே கிடைக்கிறது.  போனா வராது பொழுது போனா கிடைக்காது என்பதால் உடனடியாக வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

இணைய விற்பனை சுட்டி : https://www.nhm.in/shop/978-81-8493-050-4.html

னது சில சமீபத்திய டிவிட்ஸ் & பஸ் :

தற்போது நிம்மதியாய் உறங்கும் ஒரே தி.மு.க. பிரமுகர் ஆற்காடு வீராசாமியாகத்தான் இருக்கும.

மனைவி திடீரென பேசாமல் இருந்தால் தனது எந்த தவறை கண்டுபிடித்துவிட்டாள் என அறியும் ஆர்வத்திலேயே சமாதான பேச்சுவார்த்தையை துவங்க வேண்டியதாக இருக்கிறது.

விலைவாசியால் பசித்திரு மின்வெட்டால் விழித்திரு டாஸ்மாக்கில் தண்ணித்திரு # தமிழகம் டுடே


1 comment:

middleclassmadhavi said...

ஃபீலிங்க்ஸ் - கலக்கல்