Wednesday, October 19, 2011

பணம் - கே.ஆர்.பி செந்தில் | வலைமனை நூல் பரிந்துரை





திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் அதை
சட்டவிரோதமான வழிகளில் தேடுபவர்களின் நிலையை பலரது வாழ்வில் நடந்த நிஜமான கதைகளின் வாயிலாக கூறுகிறது 'ழ' பதிப்பக வெளியீடாக வந்துள்ள 'பணம்'.



ஆனால் நம் கில்லாடி ஆட்கள் மலாய், சீன, ஆங்கில மொழிகளை திறம்படக்கற்றுக்கொண்டு சிங்கப்பூரியன் என்று சொல்லிக்கொண்டு கம்பெனிகளில் வேலைக்குப்போய்விடுவார்கள். இப்படிப்போனவர்களில் பாதிப்பேர் தமிழகத்தில் கோடிசுவரர்கள், நிலச்சுவான்தார்கள் ஆனார்கள். மீதிப்பேர் குட்டிச்சுவர் ஆனார்கள்

பதிவுலகில் தொடராக வெளிவந்து பட்டையை கிளப்பிய பதிவர் எழுத்தாளர் கே.ஆர்.பி. செந்தில் எழுதிய 'பணம்' மேலும் மெருகேற்றப்பட்டு புத்தக வடிவில் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.

நமது பெண்களை வெளிநாட்டு பணிப்பெண் வேலைக்கு யாரும் அனுப்பவேண்டாம் என்பதற்கே இதை எழுதவேண்டி இருக்கிறது. அங்கு பணிப்பெண்கள் பற்றிய கதைகளை நான் மேலோட்டமாக மட்டுமே சொல்லியிருக்கிறேன். உங்கள் நண்பர்கள் அங்கிருந்தால் அவர்களிடம் கேளுங்கள் நிறைய கோபங்களும், சோகங்களும் கிடைக்கும்.

பதினெட்டு வருடங்கள் கண்டு, கேட்டு, உணர்ந்தறிந்த அனுபவங்களை நூல் ஆசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 'நான்' என தாமே சொல்வதாய் அமைத்திருக்கும் உத்தியால் நூல் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாய் இருக்கிறது. நூலுக்கும் வாசகருக்குமான அன்னியோன்யம் இதனால்  அதிகரிக்கிறது.

இந்திய முதலாளிகள் சம்பளம் கொடுக்கும்போது இந்திய ரூபாயில் கணக்குச் சொல்லி "இந்த மாதிரி சம்பளம் எல்லாம் உனக்கு இந்தியாவில் கிடைக்குமா?" என நக்கலடித்தே கொடுப்பார்கள். நம்ம ஊர் அடிமைகளும் "ஆமாண்ணே" பின்பாட்டு பாடும். ஆனால் பெரும்பாலோருக்கு பிடிக்காமல் பிரச்சினையும் செய்துவிடுவார்கள். முதலாளிகள் மண்டையை உடைத்த சம்பவங்களும் நிறைய உண்டு.

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு சென்று வாழ்க்கையை தொலைத்தவர்களது கதைகளும், அரிதாய் ஜெயித்தவர்களது கதைகளும் புத்தகம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். ஏஜென்ட்டுகளால் ஏமாற்றப்பட்டவர்கள், பயணங்களில் அலைக்கழிக்கப்பட்டவர்கள், எல்லை தாண்டுதல், சிறைவாசம், மனித விற்பனை, வேலைகளில் துன்புறுதல் என பல உணர்ச்சிபூர்வமான கதைகள். சில நெகிழ வைக்கின்றன. சில அதிர வைக்கின்றன.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் சென்று வேலைபார்ப்பது என்பதை நீங்கள் பொதுவாக ஏழை நாடுகளில் உள்ளவர்கள் பணக்கார நாடுகளுக்கு செல்வதே எனப்புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் பங்களாதேஷ், நேபாள், பூடான், பாகிஸ்தான் மற்றும் மியான்மார் நாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்க்கின்றனர்.


புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் வராத கன்டன்ட். அதையும்  சீரியஸாகவும், சுவையாகவும் சொல்லிய விதம். புத்தகம் முடிந்த உடன், சட்டென்று முடிந்தது போல உணரவைத்து, இதே அளவிலான இன்னொரு பாகத்தை இணைத்திருக்கலாமோ என வாசகனை எண்ண வைப்பது ஆகியன ஆசிரியர் கே.ஆர்.பி செந்திலின் வெற்றி.

இந்த புத்தகம் என் மனதிற்கு ரொம்பவும் நெருக்கமானது. காரணம் இதன் முகப்பு அட்டைக்கான டிசைனை நான் வடிவமைத்திருந்தேன். சிறப்பான தரத்தில் படைத்திருக்கும 'ழ' பதிப்பகத்தாருக்கும் இது போன்ற வீரியமிக்க எழுத்தை தந்திருக்கும் ஆசிரியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

______________________________


புத்தக சுட்டி :  http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

பணம்
ஆசிரியர் : கே.ஆர்.பி.செந்தில்
வெளியீடு : ழ பதிப்பகம்
விலை ரூ.90

சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.
_____________________________


வலைமனை நூலகம் : பிற நூல்கள் குறித்த அனுபவங்கள்
http://valaimanai.blogspot.com/p/blog-page_10.html

Panam K.R.P.Senthil Za padhipagam review by valaimanai sukumar swaminathan

6 comments:

SURYAJEEVA said...

பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

Best wishes to NEW blogger KRP.

இராஜராஜேஸ்வரி said...

வீரியமிக்க பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Romeoboy said...

பதிவில் படித்தது போல புத்தகத்தில் படிக்கும் போது சுவாரஸ்யம் இல்லை. முக்கியமாக நான் என்கிற கதாபாத்திரம்.

Unknown said...

மிக்க நன்றி! சுகுமார்...

aotspr said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி......
தொடர்ந்து எழுதுங்கள்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com