Tuesday, June 28, 2011

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன் | வலைமனை






சுதந்தர இந்தியா சந்தித்த முதல் பெரிய அதிர்ச்சி, காந்தி கொலை!

வானொலியில் காந்தியின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டபோது பல இந்தியர்களால் அதை நம்ப முடியவில்லை.  ஏற்கமுடியவில்லை. 'வெள்ளைக்காரன் கூட காந்தியைக் கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. சுதந்தரம் வாங்கியபிறகு நம்ம ஊர்க்காரன் ஒருத்தன் அவரைச் சுட்டுக் கொன்னிருக்கானே' என்று பேசிப்பேசி மாய்ந்தார்கள்.

'என்னது காந்தி செத்துட்டாரா?' என்கிற வாக்கியம் இன்று நையாண்டி வழக்காக புகழ் பெற்றது. 'இது பழைய செய்தி' என்பதை குறிக்கும் விதத்தில் அது கையாளப்படுகிறது. ஆனால் உண்மையில் காந்தி இறந்துவிட்டார் என்பது  புதிய செய்தியாக இருந்த அத்தருணத்தில் எவ்வளவு பெரிய அதிர்ச்சியில் தேசம் உறைந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

அதை துல்லியமாக எடுத்துக்கூறி, நடந்த சம்பங்கள், சுட்டவன், உடன் இருந்தவன், பிண்ணனியில் உதவியர்கள், அவர்கள் காந்திக்கு எதிராக இந்நிலைப்பாடு எடுத்ததற்கான காரணம், திட்டமிடுதல், செயல்படுத்துதல், வழக்கு விசாரணை, தீர்பபு என காந்தி கொலை சம்பவத்தினை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு ஒரு பெரும் வட்டம் அடித்து காந்தி கொலை சம்பவம் குறித்த அனைத்தையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.



எளிமையான உடை. சிக்கனம். இவைதான் நாதுராமின் அடையாளங்கள். சிகரெட் புகைக்க மாட்டார். மது அருந்தமாட்டார். ஒரே பலவீனம், காஃபி! நல்ல காஃபிக்காகப் பல கிலோமீட்டர் தூரம் நடக்கவும் தயாராக இருப்பார்.


இப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்த நாதுராம் கோட்ஸேவுக்கு நாராயண் ஆப்தே என்கிற அதிஆடம்பரமான, ஆர்ப்பாட்டமான, பெண் வாசனை பட்டாலே கிறங்கி விழக்கூடிய ஒரு சிநேகிதம் கிடைத்தது பெரிய ஆச்சர்யம்தான்!


காந்தியை கொன்னது கோட்ஸே என்பது மட்டும் தெரியும். கொஞ்சம் நெற்றியை சுருக்கினால் ஆப்தே என்றொரு இன்னொரு பெயரும் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் இந்த புத்தகத்தை உலுக்கினால் கார்க்கரே, மதன்லால், கோபால் கோட்ஸே, பாட்ஜே, ஷங்கர் என காந்தி கொலையில் தொடர்புடைய ஏராளமான பெயர்கள் கொட்டுகிறது. வெறும் பெயர்கள் மட்டுமல்லாது ஒவ்வொருவரின் பின்னணிகளும் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் வெகு விலாவாரியாக விலக்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு.


...அவனுக்குள் சாவர்க்கர் கொளுத்திப் போட்ட நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருந்தது.    இதனால் தன்னுடைய ஹிந்துத்வா கொள்கைகளுடன் ஒத்துப்போகக்கூடிய இளைஞர்களைத் தேடிப் பிடிக்க ஆரம்பித்தான் நாதுராம். அவர்களுடன் பல விஷயங்களைப் படிப்பது, விவாதம் செய்வது, தங்களுடைய கொள்கைகளைப் பெரும்பான்மை மக்களிடையே கொண்டு செல்வதற்கான திட்டங்களைத் தயாரிப்பது போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.


ரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் இவ்வாறு பூமியில் வாழ்ந்தார் என்றால் வரும் தலைமுறையினர் அதை நம்புவது கடினம் என விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போற்றும் அளவிற்கு வாழ்ந்த ஒரு மனிதரை, தேசம் போற்றிய மகாத்மாவினை, உலகம் வியந்த தலைவரை ஒருவன் நேருக்கு நேர் நின்று கொன்றான் என்றால் அவனது நிலை என்ன என்பதை அறிய மிகச்சிறந்த வாய்ப்பாக இந்த நூல் திகழ்கிறது.


கோட்ஸே, ஆப்தே இருவருடைய உடலும் சிறைச்சாலையிலேயே எரிக்கப்பட்டன. அந்த இடம் நன்றாகத் தோண்டி உழப்பட்டது. அவர்களுடைய சாம்பல், நதியில் ரகசியமாகக் கரைக்கப்பட்டது.


நூலாசிரியருக்கும் புத்தகத்தை வடிவமைத்தவருக்கும் வாழ்த்துக்கள். அட்டைப்படம், குறிப்பாக அந்த நிறம் புத்தகத்திற்கு ஏற்றவாறு வெகு சிறப்பாக அமைந்திருக்கிறது.




மகாத்மா காந்தி கொலை வழக்கு
ஆசிரியர் என்.சொக்கன்
விலை ரூ.130
https://www.nhm.in/shop/978-81-8493-596-7.html

________________________________

*** நீல நிற எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களாகும்.

வலைமனை நூலகம் - பிற நூல்கள் குறித்த அனுபவங்கள் 
Kizaku padhipagam valaimanai blogspot sukumar swaminathan mahatma gandhi assasination case book review N.CHokkan 

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
புத்தகம் வாங்கி படிக்க வேண்டும்.