Monday, May 23, 2011

வலைமனை | ஃபீலிங்ஸ் 23 05 11




லைவர் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்நிலையில் ஊரெங்கும் இஷ்டத்திற்கும் வதந்திகள் உலா வருகின்றன.  சனிக்கிழமையன்று தனுஷ் டிவிட்டரில் இந்த படத்தை வெளியிட்டார். இதிலும் பின்னால் காலண்டரில் இருக்கும் மேரி மாதாவை சுட்டிக்காட்டி இப்படம் இசெபெல்லாவில் எடுத்த பழைய படம் என பேசிக்கொள்கிறார்கள். எது எப்படியோ, ரஜினி மீண்டும் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பி வருவார்.

 ரஜினி வாழ்க்கையில் எதிர்கொண்ட சோதனைகளில் இதுவும் ஒன்று என்றே நினைக்கிறேன். அவர் பூரண குணமடைய பெற எனது பிரார்த்தனைகள். ரஜினி மருத்துவமனையை விட்டு ஆரோக்யமாக வந்தால் போதும் என யாவரும் விரும்பும் இந்நிலையில் ராணா படம் அடுத்த வருடம் வந்தே தீரும் என கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி கொடுத்திருப்பது எல்லாம் தேவையில்லாதது.


ப்படி நடக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் நடந்தது. பெங்களூரை வீழ்த்தி முதல் இடத்தில் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சூப்பர் கிங்ஸ் தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும், அடுத்த மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா மேட்ச் ஆவலை அதிகரித்தது. மும்பை ஜெயித்தால் சென்னை முதல் இரண்டு இடத்திற்குள் வரும் என்ற நிலையில் நானும் அந்த மேட்சை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டும்.

அந்த ஓவரை பாலாஜி வீசினார். முதல் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக ஃபோர், கடைசி பந்தில் சிக்ஸர் என விளாசி மும்பை வெற்றி பெற்று சென்னை ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது. சென்னை அணியின் இந்நாள் வீரர்கள் செய்யாவிட்டாலும் முன்னாள் அணி வீரர் பாலாஜி அதை செய்திருக்கிறார் என  என நினைக்கும்பொழுது பெருமையாக இருக்கிறது.

பாவம் அங்க என்னா கும்மு கும்முறாங்களோ தெரியல....



பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் நான்காம் சீரிஸ் வெளிவந்திருக்கிறது. சனிக்கிழமை இரவு வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில் பார்த்தேன். 3டி எஃபெக்ட்ஸ் அட்டகாசம். காட்டு பிரதேசங்கள், கடல் என பைரேட்ஸ் சீரிஸில் ஒரு அருமையான 3டி அனுபவம். ஆனால் கதைதான் ஒரு கண்றாவியும் புரியவில்லை. 3டிக்கு ஆசைப்பட்டு ஆங்கிலத்தில் பார்க்க வேண்டியதாகிவிட்டது.  படத்தில் நகைச்சுவை வரும் இடங்களில் அவ்வளவு பேர் புரிந்து கொண்டு சிரிப்பது வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. இந்த அவமானத்தை துடைக்க சீக்கிரமே தமிழில் பார்த்து சிரிக்க வேண்டும்.



கோ மூன்று முறை பார்த்துவிட்டேன். எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் ஒரு பத்திரிக்கையாளனாக இருப்பது கூட இருக்கலாம். ஒரு பத்திரிக்கைகாரன் என்னவெல்லாம் துணிச்சலாக செய்ய முடியாதோ அதையெல்லாம் திரையில் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும் வடிகால் உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம்.

மூன்றாம் முறை அம்மாவை அழைத்து சென்றேன். படத்தை பார்த்துவிட்டு, இதுக்குதான் நீ பத்திரிக்கை ஆபிஸ்ல வேலை செய்யறதே பயமா இருக்குங்கிறேன் என்றார்.

அது சரி நமக்கு பைக்கை நேராவே ஓட்ட தெரியாது, இதுல எங்க ஜீவா மாதிரி தலைகீழா எல்லாம் ஓட்டுறது. இதெல்லாம் சும்மாம்மா என்றேன். அப்படியும் அவர் அமைதியானதாய் தெரியவில்லை.

ஒருவேளை ஜீவா மேலே மேலே வந்து விழும் பியா போன்ற ஃபிகர்கள் பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும் என நினைத்து சொல்கிறாரோ??
Sukumar Swaminathan | Blog post | Feelings May 2011 | Valaimanai |
Notes on Rajni's Health, Pirates of the Carribean - on Stranger Tides, Ko movie experience | IPL Season 4 Match 70 KKR Vs MI, Chennai Super KIngs gains second spot 


6 comments:

MSV Muthu said...

hey, you cannot find out what's happening to thalaivar? shame on you man!

Balakumar Vijayaraman said...

good one :)

கிரி said...

//ஒருவேளை ஜீவா மேலே மேலே வந்து விழும் பியா போன்ற ஃபிகர்கள் பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும் என நினைத்து சொல்கிறாரோ??//

அதே தான்! :-)

Unknown said...

//ஒருவேளை ஜீவா மேலே மேலே வந்து விழும் பியா போன்ற ஃபிகர்கள் பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும் என நினைத்து சொல்கிறாரோ??//

இப்படி ஒரு ஆசையா சார் :-)

middleclassmadhavi said...

feelings shared - nice!

மன்மதகுஞ்சு said...

பியா போல பிகர் இருந்து அது வீட்டில உங்க வீட்டுக்காரம்மாவுக்கு தெரிஞ்சு அதனால வீட்டில நடக்கப்போகும் IPL இண்டோர் மட்சை நினைச்சு சொல்லியிருப்பாங்க போல