Sunday, March 27, 2011

கேபிள் சங்கரின் கொத்து பரோட்டா - கே.ஆர்.பி செந்திலின் பணம்





ன்று மாலை 6 மணிக்கு 'ழ' பதிப்பக புத்தக வெளியீட்டு விழா இருக்கிறது.  கேபிள் சங்கர் (எ) சங்கர் நாராயணின் பதிவுலக பாப்புலர் டைட்டில் 'கொத்து பரோட்டா',  கே.ஆர்.பி செந்திலின் மெகா ஹிட் சீரிஸ் 'பணம்'   ஆகியன புத்தகங்களாக வெளிவருகின்றன.  மேலும் இவையுடன் என்.உலகநாதன் எழுதி இருக்கும் 'வீணையடி நீ எனக்கு', 'சாமானியனின் கதை' ஆகிய 2 புத்தகங்களும் வெளிவருகின்றன.

நண்பர்களின் புத்தகங்கள் வெளிவரும் சந்தோஷமான தருணத்தில் 'மீண்டும் ஒரு காதல் கதை'க்கு அடுத்து இந்த நான்கு புத்தகங்களுக்கான முகப்பு அட்டைகளை நான் டிசைன் செய்திருக்கிறேன் என்பது கூடுதல் சந்தோஷம்.







   சென்னை கே.கே.நகர் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகாமையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

கையில் கேமராவோடு வருவேன்.. பேட்டரி வீக்காக இருப்பதால் முதலில் வருபவர்களுக்கே புகைப்படங்களில் முன்னுரிமை கொடுக்கப்படும். நாளை காலையோ இன்றிரவோ பதிவும் இடப்பட இருப்பதால எல்லோரும் பவுடர் போட்டு தலை சீவி வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லை பரட்டை தலையோடுதான் வருவேன் என அடம்பிடிப்பவர்கள் அப்படியும் வரலாம். எப்படியோ வந்தா சரி.

மேலும் விபரங்களுக்கு :  கேபிள் சங்கர்    கே.ஆர்.பி.செந்தில்


5 comments:

Chitra said...

கையில் கேமராவோடு வருவேன்.. பேட்டரி வீக்காக இருப்பதால் முதலில் வருபவர்களுக்கே புகைப்படங்களில் முன்னுரிமை கொடுக்கப்படும். நாளை காலையோ இன்றிரவோ பதிவும் இடப்பட இருப்பதால எல்லோரும் பவுடர் போட்டு தலை சீவி வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இல்லை பரட்டை தலையோடுதான் வருவேன் என அடம்பிடிப்பவர்கள் அப்படியும் வரலாம். எப்படியோ வந்தா சரி.




........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சூப்பர் அழைப்பு!


அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

எழுத்தாளர்களாகி விட்ட முன்னாள் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்:)

iniyavan said...

நன்றி தலைவரே!

Unknown said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Sukumar said...

@chitra
நன்றி....

@ ராஜ நடராஜன்
நன்றி...

@ என்.உலகநாதன்
வாழ்த்துக்கள் சார்...

@ விக்கி உலகம்
நன்றி...