இன்று மாலை உ பதிப்பகத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சங்கர் நாராயண் எழுதிய தெர்மக்கோல் தேவதைகள், யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப்பிறந்தவன் மற்றும் பதிப்பாளர் என்.உலகநாதன் எழுதிய நான் கெட்டவன் ஆகிய இந்த புத்தகங்களுக்கான முகப்பு அட்டைகளை நான் வடிவமைத்து இருந்ததனால் எனக்கு கூடுதல் மகிழ்வான விழாவாக இருந்தது. விழாவில் நான் எடுத்த புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன். மொபைலில் எடுத்தவை ஆதலால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.
பி.கு. : சில முக்கியமான புகைப்படங்களை தனியே எடுத்து வைத்துள்ளேன். அனேகமாய் அவைகளை வைத்து நாளை போட்டோ கமெண்ட்ஸ் வெளியிட உத்தேசித்துள்ளேன்.