Friday, November 14, 2014

ரோஹித் 264 | வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்

// முழுவதும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல...//


"நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் கிரிக்கெட் வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி போட்டு அடிக்க முடியும்னு எக்ஸ்பெர்ட்ஸ் சொல்றாங்க..
சொல்லுங்க.. சொல்லுங்க.. சொல்லுங்.. பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க..."

"அங்கனயா.. மும்பை இந்தியன்ஸ்னு டீம்ல அடிவாங்கிட்டு இருந்தோம்.. ஏன்யா நல்ல நாள் அதுவுமா அதை ஞாபகப்படுத்திக்கிட்டு..."




"பாஸு..  தலையில கை வைக்காதப்பா.. ஹலோ.. அப்பால நிக்குற பிரதர், கன்னத்துல கையை எடுப்பா.. நானே என்னைக்காச்சும் ஃபார்ம்ல இருக்கேன்.."


"தாலி கட்டுற நேரத்துல பெண்ணோ பையனோ காணாம போனா மண்டபத்துல மாட்டுனவங்களை மணமேடையில உட்கார வைக்கிற மாதிரி நம்மளை கூப்பிட்டவே யோசிச்சிருக்கனும்.. இப்பல்ல புரியுது ஏன் வெஸ்ட் இண்டீஸ் நைட்டோட நைட்டா எஸ் ஆனாங்கன்னு... "



"ரன் மழை.. ரன் மழைம்பாய்ங்களே...  இவ்ளோ அடிச்சும் ஒரு துளி கூட விழ மாட்டேங்குது..."



"அவ்ளோதாம்யா.. பத்து பதினைஞ்சு மேட்ச்ல வச்ச அரியர்ஸ்லாம் கிளியர் பண்ணியாச்சு.."

"நாங்க முதல் பெஞ்ச்ல மாசக்கணக்கா உட்கார்ந்து கஷ்டப்படுவோம்... கடைசி பெஞ்ச்ல உடகார்ந்து எல்லா கிளாஸ்லயும் தூங்குற நீங்க.. என்னைக்காவது ஒருநாள் படிச்சுட்டு வந்துட்டு படுத்துற பாடு இருக்கே.. அய்யோய்யோ..."


"நீங்கலாம் இருக்கீங்கற நம்பிக்கையிலதான வந்தோம்...
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..  "

"என்னைக்கும் இல்லாம கேக் வெட்ட கூப்பிட்டப்பவே புரிஞ்சிருக்கனும்.. அடுத்தது சிக்குன ஆட்டை வெட்ட போறாங்கன்னு.. "


"அடேய் ரோஹித்தா.. நான் இருவது செஞ்சுரிடா.."

"நான் இரண்டு டபுள் செஞ்சுரிண்ணே.. நூறு பெருசா.. இருநூறு பெரிசா..."



"ஹாங் வோர்ல்ட் கப்புக்கு டிக்கெட் போட்ருங்  மணி...  சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ"



Wednesday, November 12, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 12 11 14

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் நான் பிறந்த ஊர். கடந்த வார இறுதியில் அங்கு ஒரு திருமண நிகழ்ச்சி. எல்லாம் முடிந்து, சென்னைக்கு கிளம்புவதற்கு முன் சித்தப்பா வயலைப் பார்த்துவிட்டு வரலாம் என சென்றேன்.

வயலுக்கு போகும்  வழியில் முன்பெல்லாம் ஒரு கடை இருக்காது. இப்போது ஆச்சரியமாய் ஒரு டாஸ்மாக் முளைத்திருந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் முக்கிய இடத்தில் டாஸ்மாக் இருந்ததால் அதை மாற்றக் கோரி ஊர் மக்கள் சாலை போராட்டங்கள் செய்திருக்கிறார்கள். அதனால் இங்கே மாற்றப்பட்டுள்ளதாம்.

தற்போது இதன் விளைவாய், குளக்கரையில் பட்டப்பகலில் ரசனையாய் அமர்ந்து மிக்ஸிங் செய்து குடித்துக் கொண்டிருந்தவர்களை பார்க்க முடிந்தது. டாஸ்மாக்கை சுற்றி நான்கைந்து சிக்கன் தள்ளுவண்டிகள், மிக்சர் பாக்கெட்டுகள், வாட்டர் பாக்கெட் சகிதம் ஒரு சைக்கிள் கடை என ரம்மியமாய் இருந்த வயல் பகுதிகள் ரம்மாய் காட்சியளிக்கிறது.

ஆறு இருந்த இடத்தை சுற்றி நாகரிகம் வளர்ந்தது போல இனி ஆட்களே இல்லாத எந்த பகுதியாவது டெவலப் ஆக வேண்டும் என்றால் அதில் ஒரு டாஸ்மாக்கை வைத்து விட்டால் போதும் போல.

எந்த ஆங்கிளில் அழகாக தெரிகிறேனோ அதில் ஒரு கிளிக் பண்ணிடுங்க என்றால், இந்த ஷாட்லதான் மாப்ள பார்க்கிற மாதிரி இருக்க என எடுத்து தருகிறார்கள் நண்பர்கள். எவ்வளவு பயிற்சி இருந்தாலும் ஊர் பசங்க கிண்டலை சமாளிப்பது  கஷ்டம்.
•••

ஊருக்கு கிளம்ப வேண்டி இருந்ததால் இன்டர்ஸ்டெல்லார் காலை 9 மணி காட்சி வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில் பார்க்க வேண்டிய நிலை. பேஸ்புக் பேஜில் அவர்கள் சொன்னதுபோல் சப் டைட்டில் காண்பிக்கப்படவில்லை. சப் டைட்டில் கூட பரவாயில்லை. மெயின் டைட்டிலையே காண்பிக்கவில்லை. ஏதேதோ டிரைலர்கள் ஓடிக் கொண்டிருக்க படாரென கதாநாயகன் அவரது குழந்தைகளுடன் காரோட்டிக் கொண்டு செல்லும் காட்சியில் படம் ஆரம்பித்தது.  டென்ட்டுக் கொட்டகையில் கூட எனக்குத் தெரிந்து இப்படி நடந்தது இல்லை. என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா என அவர்களது பேஸ்புக் கணக்கிற்கு கேள்வி அனுப்பினால் இதுவரை பதில் இல்லை!

மற்றபடி படம் சுமாராக புரிந்தது. வீட்டிற்கு வந்து கதையை தேடி படித்த பின்தான் பரவாயில்லை படம் நல்லாத்தான் இருக்கு என்ற முடிவுக்கு வர முடிந்தது.

ஆனால் இன்னமும் எனக்கு ஸ்பேஸ் பிக்ஷன் என்றால் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய கண்சிமிட்டும் விண்மீன்கள் நாவல்தான். அதற்கு முன்னால் இன்டர்ஸ்டெல்லார் எல்லாம் சுமார்தான்.

•••

சரக்கடிக்கிறவங்களுக்கு கூட சங்கம் இருக்கு. ஆனா எங்க ஆளுங்களைத்தான் ரத்தம் குடிக்கிற காட்டேரி கணக்கா ஓட்டுறாங்க. இதுக்கெல்லாம் ஒரே தீர்வு 'கேண்டி கிரஷ் விளையாட்டு மேம்பாட்டு மையம்' ஆரம்பிக்கிறதுதான். இருள் விலகட்டும்!

•••

டாங்கா மாரின்னு அனேகன்ல ஹாரிஸ் போட்ட பாட்டு கேட்டுட்டு இருந்தேன். "கொஞ்ச நாளா இந்த நாக்க முக்க பாட்டை போட்டு அலற விடாம இருந்த.. மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா...?" என கிச்சனில் இருந்து அம்மா உடனே கத்துறாங்க. 
# சாரிங்க பாஸ் வழக்கம்போல எல்லா தரப்பு சாட்சியும் உங்களுக்கு எதிராவே இருக்கு.

•••

கோபியின் வீடியோ வெளியான பின்னர் இனியும் கத்தி தானே செய்த இட்லி என முருகதாஸ் சொன்னால் அதை சட்னி கூட நம்பாதுதான். அதற்காக இன்னமும் அவரை துவைத்து தொங்கப் போட்டு கொண்டிருப்பது நியாயமாக படவில்லை. இதற்கு முன்னால் அவரே யோசித்து சமூகத்திற்கு சொல்லியிருக்கும் கருத்துக்களையும் அதனால் மக்கள் அடைந்த பலனையும் யோசித்து பாருங்கள்.

உதாரணத்திற்கு துப்பாக்கியில் கூட தண்ணீர் மேலாண்மை குறித்து அவர் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். ஒரு இரவு கடற்கரையில் படுத்து தூங்கி எழுந்ததும் மறுநாள் காலை டீ ஷர்ட்டை உள்புறம் வெளிபுறமாய் திருப்பி மாற்றி போட்டுக் கொள்வார் விஜய். இதனை நாம் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் துவைப்பதற்காக ஆகும் தண்ணீர் எவ்வளவு சேமிக்கப்படும் என யோசித்து பாருங்கள்.!

நான் சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் பனியன் போடுறேன். என் ஐடியாவை தாஸ் சார் சுட்டுட்டாருன்னு யாராச்சும் கிளம்புனீங்க அப்புறம் அவ்ளோதான் சொல்லிட்டேன்.

•••

'Chill morning.. Enjoying hot coffee @Cafe day' என மொபைலில் ஸ்டேட்டஸ் போடுகிறார் ஷேர் ஆட்டோவில் அருகில் இருக்கும் இளம்பெண். இல்ல... நான் கேக்குறேன்.. என்ன இது? பேஸ்புக்குக்குன்னு ஒரு தர்மம், நியாயம் இல்ல..? Withனு போட்டு பக்கத்துல இருக்க என் பேரை டேக் பண்ண வேணாம்?

Tags : Kumbakonam Nachiyar Koil, Tasmac, Interstellar, Kansimitum vinmeengal endamoori virendranath

Wednesday, October 29, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 29 10 14

நல்லவேளை பால் விலையைத்தான் ஏத்தி இருக்காங்களாம். நாங்கூட டீ, காபி விலையைத்தான் ஏத்திட்டாங்களோன்னு பயந்துட்டேன். இதுக்கும் மக்களின் முதல்வர்க்கு நன்றி சொன்னோம்னு வழக்கம்போல ஜெயா டிவியில் போட்டுக்கோங்க தல.

•••
படிக்கிறோமோ இல்லையோ எது கிடைத்தாலும் ஃபார்வார்ட் செய்யும் முரட்டு வியாதிக்கு பெயர் என்னவென்று தெரியவில்லை. 'Advance Diwali Wishes' என இன்று காலை வாட்ஸப்பில் ஒரு மெசேஜ். அதுக்குங் கீழே 'First wishes best wishes'னு கேப்ஷன் வேற.

•••
'இந்த முகத்தை யார் காசு கொடுத்து பார்ப்பது?' என முதல் படத்தில் விமர்சனம் செய்த பத்திரிக்கையை, ஐம்பது படங்களுக்கு பின்னர் 'அடுத்த சூப்பர் ஸ்டார்' என பட்டம் வழங்கச் செய்ய வைத்தது துணிவு, தன்னம்பிக்கை, அயராத உழைப்பே தவிர அப்பா இருக்கிறார் என்கிற பின்னணி அல்ல.
அப்படியாகப்பட்ட திறமை படைத்த ஒரு ஆளுமை, அவரோ அவரைச் சார்ந்தவர்களோ தெரிந்தோ தெரியாமலோ செய்த / செய்து கொண்டிருக்கும் அரசியல் ஆர்வக்கோளாறுகளினால் இன்றைக்கு சம்பாதித்த பெயரை, மதிப்பை சரித்துக் கொள்ள வேண்டிய சூழல்.
Time to lead என்கிற கேப்ஷனை நீக்கி முன்பு ஒரு படத்தை வெளியிட்டார்கள். அதற்கு ஒரு நன்றி நவிலல். இப்போது தயாரிப்பாளர்கள் பெயரை எடுத்து படத்தை வெளியிடும் நிலை. அதற்கும் நன்றி தெரிவிக்கிறார். நாளை விஜய் என்கிற பெயரையே எடுத்து படத்தை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டால் கூட அதற்கும் அசராமல் நன்றி சொல்வாரோ என்னவோ. ஆளுங்கட்சி ஆதரவு ச.ம.உ அண்ணன் சரத்குமார் கூட தனது படங்கள் வெளியீட்டின் போது இத்தனை நன்றிகள் சொன்னதில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொத்த குடும்பத்தையே திரையரங்கத்திற்கு இழுக்கக் கூடிய சக்தியை ரஜினிக்கு அடுத்து சந்தேகமேயில்லாமல் விஜய் சம்பாதித்து வைத்திருக்கிறார். சுறா, ஆதி போன்ற டெம்ப்ளேட்களினால் அவரின் மீது ஆர்வம் விட்டுப் போன என்னைப் போன்ற பொதுவான ரசிகர்களை, நண்பன், துப்பாக்கி என பயணித்து தற்போது திரும்பி பார்க்க வைக்கிறார்.
இனி வரும் காலங்களில் அரசியல் என்ற கேள்விக்கு 'ஆம்', 'இல்லை', 'இருக்கலாம்' என சொல்லப் போகும் அவரது பதில் முக்கியமானது. மக்கள் விரும்பும் வகையில் காமெடி, ஆக்ஷ்ன், ரொமான்ஸ் யாவும் ஒன்றாக கைவரப் பெற்றவரான விஜய், அரசியலுக்கு 'இல்லை' என பதிலளித்துவிட்டு நிம்மதியாக அடுத்தடுத்த உயரங்களை தொடலாம்.
அதே சமயம்... 'ஆம்', 'இருக்கலாம்' என்று கூட பதில் சொல்ல அவருக்கு உரிமை உண்டு. அந்நிலையில் இந்த நன்றி அறிக்கை, சோக வீடியோக்களை விட்டுவிட்டு எதிர்வினைகளை சந்திப்பதே 'யார் பார்ப்பது?' இல் இருந்து 'அடுத்த சூப்பர் ஸ்டாரு'க்கு உயர கூடிய அளவு ஆற்றல் பெற்றவருக்கு மேலும் அழகு!

•••
தீபாவளிக்கு இப்பொழுதெல்லாம் புதுவகை குண்டுகள் வீட்டிற்குள் வந்து விழுகின்றன. தங்க நகையினை தீபாவளி பரிசாக கொடுத்து மனைவிக்கு வாழ்த்து சொல்கிறார்கள் மாடல் கணவன்கள். ஹே.. என்னங்கடா.. வர வர கலவரத்தை தூண்டுற விளம்பரங்களா வருது..?

•••
ஜெயா டிவியில் கடந்த ஞாயிறு மதியம் 'சிவகாசி'. மாலை 'பரமசிவன்' போட்டாங்க. நாங்க தல, தளபதி ரசிகர்கள் வேணும்ன்னா சண்டையை விட்டுட்டு ஆயுதங்கள்லாம் ஒப்படைச்சிட்டு சரண் அடைஞ்சு இருப்போம். இந்த மாதிரி அணு ஆயுதங்களை பிரயோகிச்சு இரு தரப்புக்கும் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி இருக்க வேணாம். 

•••

"என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...?" என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு கிடைத்துள்ள பொக்கிஷ வாக்கியம். இன்னமும் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களானால் இந்த வீடியோவை பார்த்துவிடவும். விஜய் அவர்ட்ஸை ஜீ தமிழ் கலாய்த்ததற்கு சரியான பதிலடி. 

•••
அம்மா உள்ளே சென்றது முதலே அதகளப்பட்டது பேஸ்புக். அவர் வெளியே வந்த அன்று என் டைம்லைனில் ஒரு போஸ்ட் கண்ணில் பட்டது.  

"வெற்றி.. வெற்றி.. அம்மாவுக்கு ஜமீன் கிடைத்தது". 

ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கு. இதுல புதுசா ஜமீனோட சொத்தையும் சேர்த்து கணக்கெடுத்தா என்னாகுறது? இதுக்குதான் 'அமைதியா இருங்க அப்ரசண்டீஸ்களா'ன்னு அம்மா வெளிய வந்ததும் அறிக்கை விட்டாங்க. 

Wednesday, October 15, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 15 10 14



கடந்த ஞாயிறு அன்று மாலை யுவன் ஷங்கர் ராஜா இசையில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், வரலஷ்மி சரத்குமார், ஹாட் ஷு டான்ஸ் கம்பெனி வழங்கிய 'சிகாகோ' இசை நாடக நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். கலைஞர்களின் அட்டகாசமான நடன அமைப்புகளுக்கு ஏற்றவாறு கண்ணைக்கவரும் ஒளியமைப்பு, அலங்கார உடைகள், அழகான பின்னணி அமைப்புகள் என அசத்தி இருந்தார்கள். பாடிக்கொண்டே நடனமாடி நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே விஷ்ணு, பவதாரிணி, யுவன்ஷங்கர் ராஜா, பார்த்திபன், நாசர், குஷ்பு, விக்ராந்த் ஆகியோர் வந்திருந்தனர். நடுவில் விஜய் சேதுபதியையும் பார்க்க முடிந்தது. மனதைக் கவரும் ஜாஸ் இசை இரவாக அமைந்தது.

•••

சூப்பர் டிடெர்ஜெண்ட் பவுடர் இருக்கான்னு கேட்டா, அப்படி ஒண்ணு வந்திருக்கான்னு எதிர் கேள்வி கேட்குறாங்க கடையில. என் தலைவி ஹன்சிகா ரெண்டு மூணு மாசமா 'சூப்பர் .. சூப்பர்'னு என்ன அழகா பாட்டு பாடி விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க... அந்த சிரிப்புக்காவது நீங்க தெரிஞ்சி வச்சிருக்க வேணாம்? என்னய்யா கடை நடத்துறீங்க?

•••

சில பாடல்கள் வழக்கமான Genreகளில் அடங்காது. 'முன்பே வா' எல்லாம் பாடலே அல்ல. அது ஒரு மாயாஜாலம். 'ஜனனி ஜனனி' தெய்வீகம். 'தென்றல் வந்து தீண்டும்போது' ஒரு மெஸ்மரிசம். 'காற்றின் மொழி' பாடலோ சிறந்த தியானம். இது போன்ற பாடல்கள், 'நான்' என்பதை மறந்து அந்தந்த இசை துகள்களில் ஒளிந்திருக்கும் வேறொரு உலகத்திற்குள் கரையச் செய்யும் வல்லமை பெற்றவை.

இது போல் எல்லோருக்கும் ஒரு பட்டியல் இருக்கும். எனது பட்டியலில் சமீபத்திய சேர்க்கை 'அம்மா அம்மா' பாடல். மேலே உள்ள பாடல்களுடன் இந்த பாட்டை ஒப்பிட்டு சொல்லவில்லை. அப்படி செய்யவும் முடியாது. ஆனால் ஒவ்வொரு பாட்டிற்கும் இருக்கும் தனித்தன்மை போல இந்த பாடலில் சொல்ல முடியாத துயரத்தை கொண்ட இசை துகள்கள் ஒளிந்திருப்பதாக உணர்கிறேன். வாழ்த்துக்கள் அனிருத்!

•••


விஜய் டி.வியில் நிகழ்ச்சியை வழங்குபவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட். நிதானமான பாவனை, பக்குவமான பேச்சு என எளிதில் யாரையும் கவரும்படி இருப்பார். சமீபத்தில் அவர் செய்து காண்பித்த கேரளா கோழி ரோஸ்ட் சமையல் குறிப்பை கடந்த ஞாயிறு அன்று வீட்டில் செய்து பார்த்தேன். செய்வதற்கு மிக எளிமையாகவும் அட்டகாசமான சுவையுடனும் இருந்தது. முயன்று பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=cPSdKDUlODc

Tags : Vijay Tv Samayal Samayal, Venkatesh Bhat, Hot Shoe Dance Company's Chicago Musical, Hansika Super Detergent powder, Amma Amma Song VIP Anirudh

Wednesday, October 8, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 08 10 14



இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டித்தொடர் வரும் 12ம் தேதி துவங்க இருக்கிறது. சென்னையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் புக்கிங் துவங்கிவிட்டன. 100 ரூபாயிலிருந்து டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. ஹிட் ஆகிவிட்டால் ஐபில் போல விலை ஏற்றிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

'தயவு செஞ்சு லோகோவை மாத்துங்க' என சென்னை அணியின் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் கமெண்ட் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது. வழக்கமான சிங்கம், புலி, கரடி என யோசிக்காமல் கிரியேட்டிவ்வான ஐடியா. அவரவர் அணி லோகோ வீட்டில் இருக்கிறதோ இல்லையோ, நமது அணி சின்னமான திருஷ்டி பொம்மை நாட்டில் பலரது வீடுகளில் ஏற்கனவே இருக்கிறது :)

அபிஷேக் பச்சனுடன் தல தோனியும் தற்பொழுது இந்த அணியின் கோ ஓனர் ஆகி இருக்கிறார். எனது கவலை எல்லாம், மேட்ச் ஜெயிப்பது போல் இருந்தால், நான்தான் முடித்து வைப்பேன் என வழக்கம்போல் தோனி கிரவுண்டில் இறங்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்!

***

கடந்த வாரம் Times Now சேனலில் மோடியின் மேடிஸன் ஸ்கொயர் அமெரிக்க நிகழ்வினை பார்த்துக் கொண்டிருந்தேன். ஷங்கர் படத்திற்கு இணையான மேக்கிங்கில் இருந்தது.

தேசிய கீதத்தின் போது மோடியின் முகம் மீது ஒரு லேயரில் தேசிய கொடி பறக்கிறது.  30 வருடங்களுக்கு முன்னரே ஐயா எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதி வைத்த கட்டுரைகளை ஒத்த கருத்துக்களை ஹிந்தியில் பிரதமர் பேச அமெரிக்க இந்திய கொடிகளுடன் மோடியின் உருவம் பொறித்த பதாகைகளை அசைத்தபடி 'மோடி மோடி' என அரங்கமே அதிர்கிறது. இது போதாதென்று எந்த பிரதமருக்கும் இல்லாத பிரம்மாண்ட வரவேற்பு என மோடி பராக்கிரமங்களை கீழே ஸ்க்ரோலிங்கில் ஓட விட்டுக் கொண்டிருந்தது சேனல்.

இதையெல்லாம் உடன் பார்த்துக் கொண்டிருந்த நண்பன், நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி 'மோடிஜிதான்டா அடுத்த பிரதமர்.. அவருக்குதான் ஓட்டு போடுவேன்.. மன்மோகன் சிங்கை வீட்டுக்கு அனுப்பனும்' என்கிறான். ஃபன்னி ஃபெல்லோ..!

# தட் 'தேர்தல் முடிஞ்சிடுச்சில்ல.. பிரசாரத்தை எப்போ சார் முடிப்பீங்க...?' மொமண்ட்!

***


ஏதாச்சும் டீஸரோ, போஸ்டரோ வந்தா அது எதுல இருந்து காப்பின்னு கண்டுபிடிச்சு சொல்லலைன்னா நம்மளை இணையவாசியா ஒத்துக்க மாட்டாங்க. அதனால் என் பங்குக்கு இதை கண்டுபிடிச்சிருக்கேன். பைப்புக்குள்ள இறங்கி பல பேரை அடிச்சு நொறுக்கி பல தடைகள் கடந்து இளவரசியை காப்பாத்துற மேரியோவின் லைப் ஹிஸ்டரிதான் கத்தி படத்தின் கதை. எப்பூடி?

# ஐ காப்பிடா - கத்தி காப்பிடா - புரூ காப்பிடா

***

தங்கள் படங்கள் வரும்பொழுது சில ஹீரோக்கள் சி.டி. பஜார்களில் அதிரடி ரெய்டு நடத்தி "ஏன்டா இப்படி ஏமாத்தி பிழைக்கிறீங்க?" என கம்பீரமாய் கேட்கிறார்கள். ஆனால் பாருங்கள் 30 ரூபாய் பாப்கார்னை 150 ரூபாய்க்கு கேள்வி எதுவும் கேட்காமல் வாங்கி செல்கிறான் ரசிகன்.

# பஜார்ல பண்ணா ரத்தம்; மல்டிபிளக்ஸ்ல பண்ணா தக்காளி சட்னி

Wednesday, September 3, 2014

டெஸ்ட் மேட்ச்ல சங்கு - ஒன் டேல கிங்கு



"என்ன மச்சான் .. 'டெஸ்ட்'ல அவ்ளோ கேவலமா தோத்தானுங்க???"

"அதான் இப்போ  'அரியர்ஸ்' வச்சி அடிக்கிறாங்களே.."



"அஞ்சு நாள் வெளாடுறதுலாம் ஒரு வெளாட்டாம். அதுல நாங்க தோத்துட்டோமாம். போங்கய்யா யோவ்..  அவனவனுக்கு ஐ.பி.எல், ஆட் பிலிம் ஷுட்டிங்னு ஆயிரம் வேலை இருக்கு. இதுல நின்னு நிதானமா வெளயாடுனுமாம். வாட் எ வேஸ்ட் ஆப் டைம், மணி ஆன்ட் எனர்ஜி"



"ஆங்.. டெஸ்ட் மேட்ச்ல சார்கிட்ட அடி வாங்குனவங்க எல்லாம் திருப்பி கொடுத்திட்டீங்கல்ல.. ?ஓ.கே பாஸ் நீங்க போய்ட்டு அடுத்த ஆளை  உள்ள தள்ளிவிடுங்க."




"போங்க தம்பி.. என்னைய அவுட் ஆக்குனதுக்கெல்லாம் ஒரு செலிப்ரேஷனா.. ? இது எப்படி தெரியுமா இருக்கு..? அஞ்சான் டீசர் ஹிட்டுன்னு கேக் வெட்டி கொண்டாடுனாங்க  பாரு.. அப்படி இருக்கு."




"கையில பேட் எடுத்து சும்மா போர் வாள் மாதிரி சொழட்டி சொழட்டி அடிக்கிறியே... நீ ரெய்னா இல்ல மச்சி கோச்சடையான்ல வர்ற ராணா"

"எப்போ பாரு கடைசியில வந்து சும்மா நின்னு பேரு வாங்கிக்கிறியே மாமா... நீ தோனி இல்ல ... அதே கோச்சடையான்ல கிளைமேக்ஸ்ல மட்டும் வர்ற சேனா.."





"ஆங்.. லெப்ட்ல பூசு...  ஆங்.. ரைட்ல பூசு...
ஒன் டே மேட்ச்ல வசமா மாட்டுனீங்களா..  இப்போ எப்படி பூ மிதிக்கிறோம் பாருங்க.."






"டெஸ்ட் மேட்ச்ல கிரீஸ் டப்பாவை எப்படி எட்டி உதைச்சீங்க...?"

Wednesday, July 30, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 30 07 14

விழாவை சிறப்பிக்க வந்தவங்களுக்கெல்லாம் போகும்போது தேங்காய் பை கொடுத்தா அது கல்யாணம். விருது கொடுத்தா அது விஜய் அவார்ட்ஸ் என்பது போல் ஆகிவிட்டது. உதாரணமாக ஷாருக் வந்ததற்காக வழங்கப்பட்டது போல் இருந்த என்டெர்டெயினர் அவர்ட். அவர் பேசும்பொழுதும் இதை லைட்டாக குறிப்பிட்டார். 

ரா.ஒன்னில் ரஜினி. சென்னை எக்ஸ்பிரஸ் படம். வருடா வருடம் விஜய் அவர்ட்ஸ் என சமீப காலமாக வடக்குத்தளபதி ஷாருக்கின் தமிழ்மண் மீதான பாசம் என்னைப் போன்ற இளகிய மனம் கொண்ட ரசிகர்களை புல்லரிக்க வைக்கிறது. "இங்க வர்ற உணர்வே நல்லா இருக்கு. நீங்க நான் வர்றதுக்காக விருது கூட தர வேணாம். பெரிய கலைஞர்கள் எல்லாம் இருக்கிற இந்த காற்றை சுவாசிச்சாலே போதும்" என்று அவர் சொன்னபொழுது 'அரசியலுக்கு வா தலைவா' என என்னையும் அறியாமல் உரக்க கத்திவிட்டேன். ஆனால் டிவிக்குள் இருந்ததினால் அது அவருக்கு கேட்கவில்லை. யாராவது ஹிந்தி தெரிந்தவர்கள் மக்கள் உணர்வை சொல்லி அவரை அழைத்து வந்தீர்களானால் 2016ல் கேப்டன், அடுத்த சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் செம டஃப் கொடுக்கலாம்.

•••




நேற்று முன்தினம் வில்லிவாக்கம் ரயில்வே கிராஸிங் தாண்டி ஒரு சின்னப் பையன் லிப்ட்டிற்கு கை காட்டினான். 'என் படங்கள் இங்கே இருந்து எடுக்கப்படுகின்றன' என ஆந்திராவை நோக்கி மக்கள் இயக்க கொடியில் விஜய் கை காட்டுவாரே.. அதே படம் பொறிக்கப்பட்ட கர்சீப் கையில். 
திங்கட்கிழமை காலை அதுவுமா நல்ல தீனிதான் என நினைத்து ஏற்றிக் கொண்டே பேச்சு கொடுத்தேன்.
"என்னய்யா.. விஜய் ஃபேனா...?"
"ஆமாண்ணா.." என பிரகாசமாகி விஜய்யின் வீர தீர பராக்கிரமங்களை மூச்சு விடாமல் எஸ்.பி.பி போல பாட்டாவே பாடிக்கொண்டு வந்தான். ஐ.சி.எப் சிக்னலுக்கு முன்னர் நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டு "தேங்கஸ்ண்ணா" என்றவனிடம்  நான், 
"ஆமா.. உங்களுக்குதான் இளைய தளபதின்னு பட்டம் இருக்குல்ல. ரஜினியோட சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏன்யா எடுத்துக்கிட்டீங்க" என்றேன். 
"அவர்தானண்ணா  பர்ஸ்ட்டு இளைய தளபதியா நடிச்சாரு!" என்று ஒரு குண்டை போட்டான்.
"என்னய்யா சொல்ற.. இது எப்போ நடந்துச்சு" என்றேன் அதிர்ச்சியாய்.
"ஆமாண்ணா.. கோச்சடையான் பாத்தீங்களா.. அதுல இளமையா தளபதியா நடிச்சாருல்ல... அதுக்கு நாங்க ஏதாச்சும் கேட்டோமா??" என்றான் சீரியஸாய். 

இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் விஜய் அண்ணாவை யாரும் அடிச்சிக்க முடியாது என நினைத்துக் கொண்டே "நீயெல்லாம் நல்லா வருவய்யா.. நல்லா வருவ.." என சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினேன்.

Wednesday, July 23, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 23 07 14

வழக்கமாக #சி.எஸ்.கேடா #இந்தியாடா #தோனிடா என்று டேக் போட்ட எங்களை #இஷாந்த்டானு எல்லாம் டேக் போட வச்சிட்டீங்களேடா இங்கிலாந்து பாய்ஸ். இதுக்கும் மேலயா நீங்க கிரிக்கெட் விளையாடனும்? போங்கடா... போய் புள்ள குட்டிங்களை கிரிக்கெட் கோச்சிங்ல சேருங்க.

•••


இது தலைநகர் தில்லியின் லேட்டஸ்ட் புகைப்படம் (!). இப்பொழுதெல்லாம் மழை தண்ணீர் நிற்பதில்லையாம். கொசு கடிப்பது கூட இல்லையாம். மக்கள் அனைவரும் 'முவாங் சுவாங்' என சைனா பாஷையிலே ஜோக் அடித்து சிரித்து இன்புற்ற நிலையில் இருக்கிறார்களாம்.

"துபாய் எங்க இருக்குன்னு கேட்டா ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும்பேன்"கிற மாதிரி தேர்தல் நேரத்தில் சீன எழுத்துக்களை போட்டோஷாப்பில் சரியாய் கூட அழிக்காமல் சீனத்து பஸ் ஸ்டான்ட் போட்டோவை போட்டு,  'மோடியின் குஜராத்தை பாரீர்' என மார்க்கெட்டிங் பண்ண நல்லவங்களுக்காக இந்த பதிவை டெடிகேட் பண்றோம்.

# ஆப் கி பார்.. கொசு கடிக்குது சார்! போட்டோஷாப்லயே கொசுவை எப்படி கொல்றதுன்னும் சொல்லிக்குடுத்தீங்கன்னா...

•••

சூளைமேடு மெயின்ரோடை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் வடகிழக்கு மாணவ மாணவிகளை பார்க்கலாம். சுரீரென மண்டையைப் பிளக்கும் சென்னை வெயிலையே 'போடா வெண்ணெய்' என சொல்வது போல் இவர்களது நிறம் மட்டும் எத்தனை வருடம் இங்கிருந்தாலும் மாறுவதே இல்லை. படிக்க வரும்பொழுதே ரிசர்வேஷனில்தான் வருவார்கள். அதனால் இவர்களை ஜோடியாகத்தான் பார்க்க முடியும். 

அன்றொருநாள் நெல்சன் மாணிக்கம் சாலையில் பைக்கை ஓரங்கட்டி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அதிசயமாக தனியாக ஒரு வடகிழக்கு பெண்ணை பார்த்தேன். என்னை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தார். 

"ஆஹா... இவங்க பாஷை நமக்கு புரியாதே.. அவசரத்திற்கு நமக்கு வாயில இங்கிலீஷ் வேற வராதே.. லிப்ட், கிப்ட் கேட்டா பைக்குல பெட்ரோல் வேற இல்லையே" என மனதில் பல குழப்பங்களுடன் அந்த பெண்ணை எதிர்நோக்க, அவரோ "அண்ணா ... வேர் இஸ் ஸ்கைவாக்..?" என சிம்பிளாக கேட்டார். 'அண்ணா'வில் 'ண'கர உச்சரிப்பு கூட அவ்வளவு சுத்தமாக இருந்தது.

அன்றுதான் தெரிந்துகொண்டேன். ஊருக்கு வந்த உடன் முதல் வேலையாக உள்ளூர் பாஷையில் 'அண்ணா' என்கிற வார்த்தையை வடகிழக்கு பெண்களும் கற்று வைத்துக்கொள்கிறார்கள் என்று.


Wednesday, July 16, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 16 07 14


ஒருவழியாக கால்பந்தாட்ட திருவிழா முடிந்துவிட்டது. கிரிக்கெட் மேட்ச் பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு இடையிடையே கமர்ஷியல்ஸ், கீழே பேனர் ஆட்ஸ், பிட்ச்சில் லோகோ என எதுவும் இல்லாமல் பார்க்க லோக்கல் மேட்ச் போல இருந்தது. நமது BCCI இடம் FIFA அமைப்பை இரண்டு மாதம் பாடம் படிக்க சொல்ல வேண்டும். ஐடியா இல்லாத பசங்க!

•••

வழக்கமாக வாக்கிங் போகும் பார்க்கில் சென்ற வாரம் நெத்திலி மீன்கள் சைஸில் ஒரு காதல் ஜோடி. பெண் முன்னே செல்ல பத்தடி தள்ளி பையன் சென்றவாறே பேச... அவர்களை பார்ப்பவர்கள் இருவருக்கும் சம்பந்தம் இல்லை என நினைக்கும் வகையில் யாருக்கும் தெரியாமல் லவ் பண்றாங்களாமாம். கொண்டையை மறைக்காத 'பாடி ஸ்டுடா' போல் நாமும் இதேபோல் எவ்வளவு கேனைத்தனமாகவெல்லாம் இருந்திருக்கிறோம் என்று ஹிஸ்டரியை நினைத்து செம சிரிப்பாய் சிரித்துக்கொண்டே வாக்கினேன்.

•••

தமிழில் ஒரு குறிப்பிடும்படியான ஆவணத்தொடர் துவங்கியிருக்கிறது. 'யாதும் ஊரே' என பெயரிடப்பட்டுள்ள இதன் முதல் அத்தியாயம் லண்டனில் உள்ள மியூசியத்தை சுற்றி நகர்கிறது.

தெளிவான, மிதமான, கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு ஆவணப்படத்தை தொடர்ந்து பார்க்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்படும் பொருளுக்கு உரிய பாரம்பரியத்திற்கு இணையான பிரம்மாண்டத்தை கேமரா கோணங்களில் வெளிப்படுத்தும் விதமும், எடிட்டிங், இசை என யாவும் தொழில்நுட்பத்தில் சிறந்த தரத்தில் அமைந்திருக்கிறது. நந்தினி கார்க்கியின் சிறப்பான ஆங்கில சப் டைட்டில்ஸ் பிளஸ் பாயிண்ட்.


வழங்குபவரின் அமைதியான, அதே நேரம் உறுதியான பாவனை, நாம் பழகியறிந்த நண்பரை போன்ற தோரணை இவைகளினால் அவர் சொல்வதை மனம் கவனிக்கவும் கற்கவும் எளிதாக இருக்கிறது. முதல் முறையாக இந்த ஆவணப்படத்தின் மூலம் நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன்.

படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகத்தின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து ஒலிஒளி வடிவத்தில் சுவாரஸ்யமாக வழங்கியதை போன்ற அனுபவம். பொருள், காலம், உழைப்பு என பல்வேறு வடிவங்களில் இந்த உன்னதமான கற்பிக்கும் முயற்சியை முன்னெடுத்திற்கும் தவ சஜீதரன் மற்றும் அவரது குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

•••

புது நம்பர் வாங்கி சிம்மை போட்டு செல் ஆன் பண்ணா.. நெட்வொர்க்ல வெல்கம் மெசேஜ் வர்றதுக்குள்ள அரக்கோணத்துல அரை கிரவுண்டு வாங்குங்கன்னு மெசேஜ் வருது.. ரியல் எஸ்டேட்காரங்களா.. ஆனாலும் தீயா வேலை செய்யுறீங்கப்பா...!

•••

நிஜமாகவே மாயக்கண்ணாடிகள் சலூனில்தான் இருக்கின்றன. 'பரவாயில்லை.. இப்போ கொஞ்சம் பாலிஷ்தான் ஆயிட்டோம்' என்று சலூன் கண்ணாடியில முகத்தை ரசித்து மேடி மாதிரி ஸ்மைல் எல்லாம் பண்ணிட்டு வந்து வீட்டு கண்ணாடியில பார்த்தால்... வழக்கமான அதே குரங்கு பொம்மைதான் தெரிகிறது.


•••


"ஏம்ப்பா  பார்லிமென்ட்ல தூங்குற.. எழுந்திருப்பா.."

         "ஆர்.டி.ஐ.. உமன் எம்பவர்மென்ட்.."
"உன்னை எழுப்புனது தப்புதான்.. தயவு செஞ்சு தூங்கு ராசா..."

Wednesday, July 9, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 09 07 14

வழக்கமாக வீரர்கள் விளையாடி முடித்ததும் யாரோ அவர்களது உடைகளை  துவைத்து காய வைப்பார்கள். ஆனால் நேற்று நடந்த அரையிறுதியில் ஜெர்மனி அணியினர் செய்தது வித்தியாசமானது. பிரேசில் வீரர்களது உடைகளை  ஜெர்மனி வீரர்களே துவைத்து தொங்க விட்டார்கள். துவைக்கும் போது பிரேசில் வீரர்கள் உடையின்  உள்ளே இருந்தார்கள் என்பதுதான் பிரேசில் நாட்டுக்காரர்களுக்கு வருத்தமாம்!

# தட் நானும் மேட்ச் பார்க்கிறேன் என்னையும் ஜீப்ல ஏத்திக்கோங்க மொமன்ட்

***


முதன்முறையாக ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு செல்லும் வாய்ப்பு. விடக்கூடாது அல்லவா..? கடந்த வெள்ளிக்கிழமை சீரும் சிறப்புமாக சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற நம்ம கேபிள்ஜியின் 'தொட்டால் தொடரும்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். பதிவர்கள் பலரையும் சந்திக்க முடிந்தது. இரண்டு டிரைலர்கள், இரண்டு பாடல்கள் திரையிடப்பட்ட பிறகு பிரபலங்கள் பேசி முடித்த பின் இசை வெளியிடப்பட்டது. 



ஏற்கனவே பாஸு பாஸு சிங்கிள் டிராக் மூலம் அசத்தி இருந்தனர். இப்போது டிரைலரை பார்த்த பின்னர் வெற்றிப் படமாக அமையும் என தெரிந்து விட்டது. பாடல்களை பொருத்தவரை வெகு சிறப்பாக வந்திருக்கிறது. 'யாருடா மச்சான் அவ யாருடா' பாடலை மீண்டும் மீண்டும் லூப்பில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அடுத்து 'பெண்ணே பெண்ணே' நல்லதொரு மெலடியாக அமைந்திருக்கிறது. 'ஹே.. எனக்கென இந்த பூமியில் வந்தவனே' என மெஸ்மரைசிங் குரலில் துவங்கும் 'பூப்போல பூப்போல' பாடலும் 'ஜாதகத்தில் யோகம் வந்தது' பாடலும் பீல் குட் உணர்வினை தரும் ரகம். பாடல்களை கேட்கும் போதே படத்தை திரையில் காணும் ஆவல் எழுகிறது. கேபிள் சங்கர் கலக்கப்போகிறார்! வாழ்த்துக்கள்!

***

முதன்முறையாக ஒரு ஆங்கில இசை நாடகம் பார்த்தேன். 'விக்டர் ஹியுகோ' எழுதிய 'லே மிஸரபில்ஸ்' என்கிற புகழ்பெற்ற புத்தகத்தினை தழுவி லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் சென்னையைச் சார்ந்த நடிகர்கள், இசைக் கலைஞர்களை வைத்து  உலகத்தரத்தில் ஒரு பிரமிப்பான அனுபவத்தை தந்திருந்தார்கள் 'தி குக்கூ கம்பெனி'!



இசை வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் சென்னையின் சிறப்பான ஆடிட்டோரியங்களில்  ஒன்றான ஹாரிங்டன் சாலையில் உள்ள சார் முத்தா வெங்கட்ட சுப்பராவ்  கான்சர்ட் ஹாலில் நடைபெற்றது. ஒலியமைப்பும் ஒளியமைப்பும் மிகத் தரமானதாக இருந்தது. லைவ் ஆர்கெஸ்ட்ராவுடன் பாடிக் கொண்டே நடித்த நடிகர்கள் அசத்தி விட்டார்கள். அருமையான அனுபவம்!


இதில் இடம்பெற்ற லுக் டவுன், மாஸ்டர் ஆப் தி ஹவுஸ், லவ்லி லேடிஸ் டிராக்குகளை தேடிப் பிடித்து கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். மனதில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கிறது.


***


சமீபத்தில் முன்னேர் பதிப்பகத்திற்காக நான் சில புத்தக அட்டைகள் வடிவமைத்திருந்தேன். கடந்த வாரம் அவைகளை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்கள். இதுபோல புத்தம் புது புத்தங்களை இலவசமாக மணமணக்க அனுப்பி வைப்பதற்காகவே எவ்வளவு வேண்டுமானாலும் டிசைன் செய்யலாம்.


முன்னேர் பதிப்பக முகப்புத்தக பக்கம் : https://www.facebook.com/munnerpathippagam?fref=ts

***

கோச்சடையான் நான்காவது முறையாக சனிக்கிழமை சென்றிருந்தேன். தலைவர் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையை இன்னுமொரு முறை சுவைத்துவிடலாம் என்று. 


படம் ஆரம்பித்ததும் பக்கத்தில் இருந்தவர் 3டி கண்ணாடியை அகற்றி அகற்றி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வினோதமாக அவரையே பார்க்க.., "கண்ணாடி எடுத்தா எப்படி தெரியுதுன்னு செக் பண்றேன்" என்றார். "நல்லா பண்ணுங்க.. படத்துலயே மொத்தம் பத்து நிமிஷம்தான்  3டி.. அதையும் இப்படியே பண்ணிடுங்க.." என நினைத்துக் கொண்டேன்.


ஒரு  2டி படத்தை 3டி கண்ணாடி மாட்டி பார்க்க வைக்கும் தொழில்நுட்பம் உலகத்திலேயே இதுதான் முதன்முறை.

Wednesday, July 2, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 02 07 14



வருடா வருடம் ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என தெரியாமலே செய்யும் காரியத்தை இவ்வருடமும் செய்துவிட்டேன். ஆம் வலைமனை டாட் இன் டொமைன் ரென்யூவல்தான். இப்பொழுதெல்லாம் பேனா வாங்கி முழுக்க எழுதுகிறோமோ இல்லையோ வேலை செய்கிறதா என முதலில் பெயரை எழுதி பார்ப்போம் அல்லவா.. அதைப் போல இந்த போஸ்ட்டை எடுத்துக்கொள்ளவும். 

***
குவாலிட்டியான மியூசிக், கிரியேட்டிவ்வான லிரிக்ஸ் என முதல் பாடலிலேயே அசத்தி விட்டார் கேபிள் சங்கர். இந்த பாடல் குறித்து ஜில்மோர் டாட் காமில் வெளிவந்த எனது கருத்து:

"நம்மை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் அதில் இருக்கும் நியாயமான கருத்துக்களை எடுத்துக்கொள்ளும் முன் முதலில் நாம் தாக்கப்படுகிறோம் என்கிற கோப உணர்ச்சி மேலெழுந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் நம் தரப்பு நியாயங்களை ஆராய்வதே பொதுவான மனித இயல்பு. ஆனால் சம்பந்தப்பட்டவர் மனம் நோகாமல் அவரே புரிந்து கொள்ளும்படி விமர்சனங்களை முன்வைக்கும் வழிமுறைகள் பல உண்டு என விளக்குகிறது பிரசித்தி பெற்ற மனவளக்கலை பயிற்சியாளர் Dale Carnegie எழுதிய ‘How to win friends and influence people’ என்கிற புத்தகம்.
இந்தப் புத்தகத்தின் வாழும் பிரதியாகவே விளங்குகிறவர் நமது கேபிள் சங்கர். தேர்ந்த விமர்சகராகவும், நேற்று அறிமுகமானவரும் நெருங்கிய நண்பராகிவிடும் வகையிலும் இந்த கலை கைவரப் பெற்றவர். தனது முதல் படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் முதல் பாடலிலேயே பிராக்டிக்கலாக நம் மீதே இதை செய்தும் காட்டிவிட்டார். நமது மனநிலையை, நம் மீதான விமர்சனங்களை தரமான இசையில், பொருத்தமான வரிகளில் நாமே ‘லைக்’ போடும் வகையில் நமக்கு உணர்த்தி வெற்றி பெறுகிறது இந்தப் பாடல். பொதுமக்கள் மீதான விமர்சனங்களை தாங்கி வந்த தமிழ்த் திரைப்பாடல்கள் கசந்ததே வரலாறு. ஆனால் மீண்டும் மீண்டும் சுவைக்க விரும்பும் ‘இனிப்பு மருந்து’ ஜானரில் புதுவரவாக அசத்துகிறது  ‘பாஸு பாஸு’!"

தொடர்புடைய சுட்டி :
தொட்டால் தொடரும் ‘பாஸு பாஸு’ பாடல் – மாஸ் ரியாக்சன்
http://tamil.jillmore.com/thottal-thodarum-bossu-bossu-song/

***
"சைக்கிள் கேப்ல ஆட்டோ ஒட்டுறான்யா..." என்பது புகழ்பெற்ற புதுமொழி. சவலான விஷயத்தை செய்வதில் கெட்டிக்காரன் என அர்த்தம் தரும் இந்த வாக்கியத்தின்படி சமீபத்தில் ஒரு இணையதளம் துவங்கியிருக்கிறார்கள். cyclegap.in என்கிற இந்த இணையதளத்தில் பி.டி.எப், E-Pub, Kindle என அனைத்து மின் வகை தமிழ் புத்தகங்களும் தரவிறக்கம் செய்து கொள்ள கிடைக்கிறது.  மின் புத்தக உலகின் சவால்களை சந்தித்து சாதிப்பதே நோக்கம் என இவர்களது FAQ பக்கத்தில் பெயருக்கு பொருத்தமான கொள்கை விளக்கமும் தரப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்!

http://cyclegap.in/

***
தியானம், யோகாவை காட்டிலும் ஒரு அரை மணி நேரம் பொதிகை சேனல் பார்த்தால் போதும் போல. பரபரப்பு, டென்ஷன், ஸ்ட்ரெஸ் என அனைத்தையும் சட்டென்று குறைத்து பட்டென்று படுத்து தூங்க வைத்துவிடுகிறது. 
வாழ்க தூர்தர்ஷன்! வளர்க அப்டேட்டே இல்லாத நின் வெர்ஷன்!

***

சக கலைஞரை ஒருவர் தாக்கி பேசும்பொழுது அதனை கண்டிக்காமல் அதே துறையில் இயங்குபவர்கள் மௌனம் காப்பது மிகுந்த வலி தருகிறது. "வெறும் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்கும் நாராயணசாமி ஆக விரும்பவில்லை" என பொன்னார் கூறி பல நாட்களாகியும் இதுவரை சந்தானம், பரோட்டா சூரி, ரோபோ சங்கர் என யாரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. '15 நாட்களில்..' கலக்கல் காமெடி சீரிஸில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நாசாவிற்கே இந்த நிலைமை என நினைக்கும்பொழுது.... சத்திய சோதனை!

***
டவர் பார்க்கில் காற்றுடன் கலந்து பறக்கும் ஸ்கேட்டிங் செல்லும் சின்ன குழந்தைகளை அமர்ந்து பார்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அப்படி சமீபத்தில் அமர்ந்திருந்தபோது அருகே அனைவரும் வாக்கிங் செல்லும் நட்ட நடு நடைபாதையில் மூன்று பெண்கள் கால் மணி நேரமாக ஒருவருக்கொருவர் மாறி மாறி கஷ்டப்பட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். இவர்களைப் பற்றிய கவனமே இல்லாமல் இங்கிதம் அற்ற பொது ஜனம் குறுக்கே புகுந்து வாக்கிங் சென்றவாறே இருந்ததால் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். பேஸ்புக்கிற்காய் புகைப்படம் எடுப்பவர்களது உணர்வை மதிக்காத சமுதாயம் வாக்கிங் போனால் மட்டும் ஆரோக்கியமானதாகி விடுமா என்ன? அட போங்கப்பா!

Saturday, May 24, 2014

கோச்சடையான் | வலைமனை

கோச்சடையான் வந்தே விட்டது. முதல் நாளான நேற்றே இரண்டு முறை பார்த்துவிட்டேன். காலையில் பி.வி.ஆரில் முதல்காட்சியும், இரவு எஸ் 2 விலும். பி.வி.ஆரில் இருந்த அளவு ஏனோ எஸ்2 வில் காட்சி பளிச்சென்று இல்லை. எதற்கும் இன்னொருமுறை சத்யமில் பார்த்து விட வேண்டும்.



தீபிகா பொம்மை எப்பொழுதும் தூங்கி எழுந்த மாதிரியே இருக்கிறது. சின்ன கவுண்டர் மனோரமா போல சின்ன ரஜினி பொம்மை சிரித்த மாதிரியே இருக்கிறது. தேங்காய் சீனிவாசன் முகஜாடையில் பெரிய ரஜினி பொம்மை இருக்கிறது. கேரக்டர்ஸ் ஓடுவது, நிற்பது, நடப்பது எதுவும் சரியில்லை.  டான்ஸ் ஆடுவது ரொம்பவும் சரியில்லை. இப்படியும் கோச்சடையானை பற்றி சொல்லலாம்.

நல்ல கதை. விறுவிறுப்பாக அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே போகும் காட்சிகள். அரண்மனை, கோட்டை, காடு, மலை, தோட்டம், போர்க்களம் என எல்லா பின்னணிகளிலும் சரி.. உடைகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் சரி.. துல்லியமான, அழகிய வேலைப்பாடுகள். ஒவ்வொரு பிக்சலிலும் பார்த்து பார்த்து டிஜிட்டலில் செதுக்கியிருக்கிறார்கள். மொத்தத்தில் காட்சியமைப்புகள், வசனம், இசை என பல பெரிய பிளஸ்களால் மேலே உள்ள மைனஸ்கள் மிகச் சிறியதாகி போகின்றன. தமிழில் புதிய அனுபவம். இப்படியும் சொல்லலாம். நான் இப்படி சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன். 
...
இயக்குனர் சௌந்தர்யா தெரிந்தோ தெரியாமலோ செய்த நல்ல விஷயம் டிரைலரிலும் டீசர்களிலும் 'பொம்மை படம்' என பெயர் பெற வைக்கும் மோசமான காட்சிகளை சேர்த்தது. (அந்த டால்பினில் ரஜினி எகிறும் காட்சி எல்லாம் படு சுட்டி டி.வித்தனம்). ஆகவே மோசமான தாக்குதலுக்குள்ளாக தயார் நிலையில் சென்றால் ஆச்சரியமாக அடி ஒன்றும் அவ்வளவு பலமாக விழவில்லை. உண்மையில் மிகத் தரமான பல கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இருக்கிறது. அவற்றை மட்டும் டிரைலரில் காட்டி திரையரங்கத்திற்கு வரவழைத்திருந்தார்கள் எனில் படத்தின் ரிசல்ட் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை.

கேரக்டர்களின் முக அமைப்புகள், நிற்பது, நடப்பது அதிக டான்ஸ் மூவ்மென்ட்கள் அனைத்திலும் 'ஏதோ வந்த வரை' செய்திருக்கிறார்கள். ஆனால் ராணா படையை மீட்டு வரும் இடத்திலிருந்து கதைக்குள் இழுக்கப்பட்டு விடுவதால் பொம்மை பிரச்சனையை மனது விட்டுவிடுகிறது.

கேரக்டர்களின் தனிப்பட்ட அசைவுகளும், பாவனைகளும்தான் சரியில்லையே தவிர, மொத்தமாக ஒவ்வொரு காட்சியிலும் கிராபிக்ஸ் பிரமாதமாகவே இருக்கிறது. 
டைட்டில் காட்சிகளிலும், சூப்பர் ஸ்டார் எழுத்துக்களிலும் 3டி யை அள்ளித் தெளித்து 'இந்தா சாப்டுக்கோ' என வந்ததும் குஷிப்படுத்துகிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதி போல அதற்குப் பிறகு மெயின் படத்தில் கண்களுக்கு முன்னால் வரும் 3டி எலிமென்ட்ஸ் எதுவும் இல்லாதது பெருத்த ஏமாற்றம்.  ஒவ்வொரு லேயர்களுக்கும் இடையே தெரியும் 3டி ஆழமும் பெரிதாக இல்லை. சிவாஜி 3டி யில் கூட படம் முழுவதும் 3டி எலிமென்ட்ஸ், மிக அருமையாக இருந்தது.

இடைவேளை விட்டதும் பாப்கார்ன் வாங்க செல்லாமல், இடைவேளை முடிந்ததும் தீபிகா சரக்கடித்துவிட்டு ஆடுவது போல் ஒரு பாடல் வரும் பாருங்கள்.. அப்பொழுது சென்றீர்களானால் கூட்டத்தில் சிக்காமல் பாப்பகார்னும் வாங்கலாம். உங்களுக்கும் சேதாரம் இருக்காது.  இரண்டு முறை பார்த்த போதும் இந்த பாடலை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

உடல்நிலை சரியில்லாத மோஷன் கேப்சர் டெக்னாலஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது இரண்டு விஷயங்கள். ஒன்று ரஜினியின் குரல், இன்னொன்று ரஹ்மானின் இசை. வீரமிக்க, விவேகமிக்க தளபதியாக ராஜா காலத்து ரஜினி என்னும்போழுதெ அள்ளிக் கொள்கிறது. "நெம்மதியா ஸந்த்தோஷமா இருங்க" என்பது போன்ற அவரது வழக்கமான தனித்துவ உச்சரிப்புகளால் பொம்மையை மறக்க வைக்கிறார். 

அடுத்தது ரஹ்மான். இவரெல்லையென்றால் படமே இல்லை. "ராணா.. ராணா.." என ஒலிக்கும் அந்த ஒரு தீம் மியூசிக் போதும். எங்கு தொட்டால் எங்கு வெடிக்கும் என்பதில் வல்லவர் ஏ.ஆர். இது மாதிரியான வித்யாசமான வடிவத்திற்காக ரஹ்மானும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சரியான ஒலி விருந்து.

நாகேஷ்! நல்ல ஐடியா. அவருக்கு குரல் கொடுத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டு. நாகேஷை கொண்டு வந்ததும் சரி, அடுத்தடுத்து தேவைப்பட்டால் சீக்வெல்களை ரிலீஸ் செய்துகொள்ள வசதியாக படத்தை முடித்ததும் சரி.. மிக பிரமாதமான ஐடியா. 

நாகேஷை கொண்டு வந்தது போல், அடுத்தடுத்த பாகங்களில் (வந்தால்) எம்.ஜி.ஆரை கொண்டு வரலாம்! சிவாஜியை.. சுருளிராஜனை.. யோசித்து பாருங்கள்...  இந்த வசதியே படத்திற்கான  பலத்தையும் அதன் மீது எதிர்பார்ப்பையும் அதிகரித்து விடும். அடுத்தடுத்து வெர்ஷன்களில் படத்தின் தரமும் உயர்ந்திருக்கும். முக்கியமாக மோஷன் கேப்சர் டெக்னாலஜி (என்று நம்புவோமாக). 

டிரைலரில் பயமுறுத்தி தியேட்டரில் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் சௌந்தர்யா .. மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உடன் உழைத்த உங்கள் குழுவினருக்கும்!

சிலையை கண்டால் அங்கே கடவுள் இல்லை. கடவுளைக் கண்டால் அது சிலை இல்லை என்பது போல், உங்களுக்கு பொம்மைப் படமாக தெரிந்தால் அங்கு கோச்சடையான் இல்லை. கோச்சடையானாக பார்க்க முடிந்தால் அங்கு பொம்மைகள் இல்லை!